Friday, August 20, 2010

எம்.ஜி.ஆர்ருக்காக சட்டத்தை திருத்திய இந்திரா காந்தி!!!!!!!!!!!!!!!!


தற்பொழுதுதான் திரு.ரவீந்தர் எழுதிய "பொன்மனச்செம்மல் " எம்.ஜி.ஆர் நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...... திரு.ரவீந்தர் செம்மல்லோடு 35 ஆண்டு காலம் பணியாற்றியவர் .... அந்நூலில் என்னை கவர்ந்த செம்மல் வாழ்க்கை யில் நடந்த சில சுவாரசியங்களை என் பதிவுலக நண்பர்களுக்காக இங்கு எழுதுகிறேன் ... உங்களின் மேலான ஆதரவு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் ....


1979 ம் ஆண்டு செம்மலின் ஆட்ச்சியை கலைத்த இந்திரா காந்தி அம்மையார் , எம்.ஜி.ஆர் ருக்காக ரிசர்வ் வங்கியின் சட்டத்தையே மாற்றி அமைத்தார் என்றால் , அது செம்மல் ஒருவருக்கே சாத்தியப்படும் ...

நடப்புக்கு ஒரு உதாரணம் சொல்லுவார்கள் ..நெல்லுக்குல்தான் அரிசி.அது பிரிந்து விட்டால் ஒட்டாது. அப்படிதான் நட்பும் என்று. அதையும் முறியடித்தார் செம்மல் .இரண்டாவது முறை மக்களால் அரியணையில் அமர்ந்த பிறகு அன்னை இந்திரா , செம்மல் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்தார்.மோதல் இருந்த போதும் சஞ்சய் காந்தி இறந்த பொழுது , இரங்கல் தெரிவிக்க சென்ற செம்மலின் உன்னத குணத்தை அறிந்தார். தமிழகம் தன நட்பில் இல்லையென்றால் தென்னகமே தன்னாட்சிக்குள் இருக்கத் தகுதியில்லை என நினைத்து, செம்மலுக்கு ஒரு தாயானார் . தாய் தோழியானார் . செம்மல் சொல்லையும் கேட்டார் .

1984 ம் ஆண்டு செம்மல் வாதநோயால் பாதிக்க பட்டு இருந்தபொழுது .அன்னை இந்திரா செம்மலின் உடல் நிலை அறிந்து பறந்து வந்தார். ஒரு நாட்டுப் பிரதமர் , தான் மருத்துவமனைக்கு வந்தது பெருமையென நினைத்தார் . செம்மலின் அருகே செல்ல மருத்துவர்கள் தடை விதித்திருந்ததால் , அவர் இருக்கும் கருப்புக் கண்ணாடி அறையில் ,சிறு வெள்ளைக் கண்ணாடி வழியாக பார்த்தார் , பார்த்துவிட்டு அன்னை கேட்ட முதல் கேள்வி "இவர் எம்.ஜி.ஆரா ?" என்பதுதான்.


திருமதி ஜானகி அம்மாளுக்கு இந்திரா ஆறுதல் சொன்னார் . அமேரிக்கா போக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார் . மேலும் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி சட்டம் தளர்த்தப்படும், எவ்வளவு செலவானாலும் இந்த உன்னத உயிர் பிளைக்ளகட்டும் அவரது தர்மமே அவரை காக்கும் , உங்கள் & என் பிராத்தனை , வெளியே நிக்கும் லட்சோப லட்சம் மக்களின் பிராத்தனை ஒன்றாவது பலிக்காமலா போக போகிறது , என்று ஜானகியம்மாவை கட்டி பிடித்து கண்ணை துடைத்தார் அன்னை. அதன் பிறகு செம்மல் பிரச்சாரத்துக்கு செல்லாமலே முதல்வர் ஆனது தனி வரலாறு ....


இன்று வரலாற்றில் தன் பெயர் நிற்க என்ன வெல்லாமோ செய்கிறர்கள் , செம்மலின் வாழ்க்கை வரலாறை எடுக்கவும் அவரது நண்பர்கள் முனைந்தனர், ஆனால் நடந்தது ??????????

உங்கள் வாக்கு தான் என்னை உற்சாக படுத்தும் , மறக்காமல் உங்கள் வாக்கினை இட்டு செல்லுங்கள் நண்பர்களே ...........