Saturday, May 29, 2010
அ.தி.மு.க.வில் இருந்து முத்துசாமி நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு; ஆதரவாளர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தன்னை வளர்த்து விட்ட அ.தி.மு.க. கழகத்திற்கு துரோகம் புரிந்து சுய நலத்திற்காக தி.மு.க.வில் போய்ச்சேர திட்டமிட்டு தனக்கு மனக்குறை இருப்பதாக சொல்லிக்கொண்டு, நேரில் வந்து சந்தித்துப் பேசுமாறு கழகப் பொதுச் செயலாளர் பலமுறை அழைத்தும் வராமல், கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்து அதைப் படித்துப் பார்த்த பிறகு மீண்டும் கழகப் பொதுச்செயலாளர் நேரில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்ததும் வராமல் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் பரப்பி கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சு.முத்துசாமி (கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு மாநகர் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தலைமை கழகத்தாலும் கழக பொதுச்செயலாளராலும் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து கழக தலைமைக்கு எதிராக கழக உடன்பிறப்புகளை தூண்டிவிடும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, கழக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் பற்றிய அவதூறு பிரசாரம் செய்து வரும் கரூர் சின்னசாமி (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்) வி.கே.சின்னசாமி (ஈரோடு புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர், முன்னாள் எம்.பி.இஎம்.எல்.ஏ.)
ஈரோடு சி.மாணிக்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்ப்டை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந் தும் நீக்கி வைக்கப்ப்டுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
தன்னை வளர்த்து விட்ட அ.தி.மு.க. கழகத்திற்கு துரோகம் புரிந்து சுய நலத்திற்காக தி.மு.க.வில் போய்ச்சேர திட்டமிட்டு தனக்கு மனக்குறை இருப்பதாக சொல்லிக்கொண்டு, நேரில் வந்து சந்தித்துப் பேசுமாறு கழகப் பொதுச் செயலாளர் பலமுறை அழைத்தும் வராமல், கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்து அதைப் படித்துப் பார்த்த பிறகு மீண்டும் கழகப் பொதுச்செயலாளர் நேரில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்ததும் வராமல் உண்மைக்கு புறம்பான பல தகவல்களை தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளில் பரப்பி கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சு.முத்துசாமி (கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு மாநகர் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர்) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தலைமை கழகத்தாலும் கழக பொதுச்செயலாளராலும் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து கழக தலைமைக்கு எதிராக கழக உடன்பிறப்புகளை தூண்டிவிடும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, கழக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் பற்றிய அவதூறு பிரசாரம் செய்து வரும் கரூர் சின்னசாமி (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர்) வி.கே.சின்னசாமி (ஈரோடு புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர், முன்னாள் எம்.பி.இஎம்.எல்.ஏ.)
ஈரோடு சி.மாணிக்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்ப்டை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந் தும் நீக்கி வைக்கப்ப்டுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
பிள்ளைகளிடம் கடுமை காட்டினதன் விளைவு!!!!!!!!!!!!!!!!!
தலையங்கம்: கண்ணாடி வீட்டிலிருந்து கல்...
மனித உரிமை மீறல் என்பது சர்வதேச அளவில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. நாகரிக சமுதாயத்தின் மீதுள்ள மிகப்பெரிய கறை இதுவாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் தன்மானத்துடன் செயல்படவும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாமல் வாழவும் வழிவகுப்பதுதான் மனித உரிமைக்கான அடிப்படை இலக்கணம்.
இது காவல்துறையாலோ ராணுவத்தாலோ அரசாலோ மறுக்கப்படுவது என்பது தடுக்கப்பட்டே தீர வேண்டும்.உலகமயமாக்கலில் விளையும் நன்மை என்று குறிப்பிட முடியுமானால் அது உலகளாவிய அளவில் மனித உரிமை மீறலுக்கு எதிரான சிந்தனை உருவாகியிருப்பதுதான். சில நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பொருள்படுத்தப்படாமல் அங்கீகரிக்கப்படும்போது உலகிலுள்ள ஏனைய நாடுகளில் அந்த நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமல்ல, தண்டனை!சட்டத்தின் மேலாண்மையை மதிக்கும் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு நபரும் அவர் எத்தனை பெரிய பதவியை வகித்தாலும் மனித உரிமை மீறல் குற்றத்திலிருந்து மன்னிக்கப்படலாகாது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சித்திரவதை போன்ற குற்றங்கள் மனித நாகரிகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மன்னிக்கப்படக்கூடாத குற்றங்கள்.
இவை எந்த நாட்டில் செய்யப்பட்டாலும், நடைபெற்றாலும், உலகின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உலகின் எந்த நாட்டிலும் இடமளிக்கலாகாது. மன்னிப்பும் கிடையாது.பிற உலக நாடுகளின் நீதிமன்றங்களில், இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க முடியாதுதான். ஆனால், அந்த நாடுகள் இந்தக் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் தண்டனை வழங்க முடியும்.
ஒரு மனித உரிமைக் குற்றவாளியைச் சிறையில் அடைத்துத் தண்டிக்க முடியாதபோது அவர் சார்ந்த நாடு தண்டிக்காதபோது சர்வதேச அரங்கில் அவருக்கு எதிராக நடத்தப்படும் புறக்கணிப்பு என்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.தங்களது நாடுகளில் இனப்படுகொலை நடத்தி, மக்களைச் சித்திரவதைக்கு உள்படுத்தும் அதிபர்கள் நமக்குத் தெரிந்தே பலர் இருக்கிறார்கள்.
இவர்கள் கண்துடைப்புத் தேர்தலை நடத்தி, தங்களைத் தாங்களே மீண்டும் அதிபர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுடன், தங்களது கைப்பாவைகளைப் பிரதமர்களாகவும் அமைச்சர்களாகவும் அமர்த்தி தங்களது இனப்படுகொலையை மக்களாட்சி என்கிற மாயமுலாம் பூசி மறைத்துவிடுகிறார்கள். இவர்களைத் தண்டிப்பதுதான் எப்படி?உலக அரங்கில் இதுபோன்ற நபர்களின் மனித உரிமை மீறல்களைப் படம்பிடித்துக் காட்டி சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதுதானே ஒரே வழி.
பல நாடுகளில் அந்த நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சட்டங்கள் திருத்தப்பட்டு, மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு அந்த நாடுகளில் நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது.கனடா நாட்டு நிர்வாகம் 2004-ம் ஆண்டில், நுழைவு அனுமதி வழங்கும் துறையில் நவீன போர்க்குற்றப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது. இந்தப் பிரிவு அந்த நாட்டுக்குள் குடியேறவோ சுற்றுப்பயணம் செய்யவோ நுழைவு அனுமதி கேட்கும் விண்ணப்பங்களை ஆய்ந்து மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதியை மறுக்கிறது.
இதேபோல உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்களது குடியேற்ற மற்றும் நுழைவு அனுமதிச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுத்து சர்வதேசப் புறக்கணிப்புக்கு ஆட்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையும். இதுவரை எல்லாம் நலமே.அதேநேரத்தில், கனடா அரசு சமீபகாலமாக இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றும் மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றியவர்களுக்கு நுழைவு அனுமதி மறுத்திருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் மேலே குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் காஷ்மீரத்திலும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் என்று கனடா அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதைவிட விபரீதமான சிந்தனை எதுவுமே இருக்க முடியாது.இராக்கில் நடக்காத மனித உரிமை மீறலா? அப்படியானால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் அதிபர்களுக்கே கூட கனடா நுழைவு அனுமதி மறுக்க வேண்டுமே!
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததையும் தொடரும் மனித உரிமை மீறல்களையும் அனுமதிப்பவர்களுக்கு, இந்திய ராணுவம் செய்வதுமட்டும் மனித உரிமை மீறலாகத் தெரிவது ஆச்சரியம். அதுபோகட்டும். சோமாலியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் கனடா நாட்டு ராணுவம் நாடு கடந்து நடத்தும் மனித உரிமை மீறல்களைவிட பெரிய உரிமை மீறல் இந்தியாவில் நடந்துவிட்டதா என்ன? இப்படி ஓர் அவப்பெயர் இந்தியாவுக்கு வருவதற்குக் காரணம், இந்திய அரசு மனித உரிமை மீறல் பிரச்னையில் முழுமனதுடனான நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் இருப்பதுதான்.
சமீபத்தில் காஷ்மீரத்தில் நடந்த சோபியன் இளம்பெண்கள் விஷயத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் துணிவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவறை மூடி மறைக்கப் பார்த்த சம்பவம் ஓர் உதாரணம்.காவல்துறையானாலும், ராணுவம் ஆனாலும் மனித உரிமை மீறல் குற்றங்களில் மன்னிப்பு கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்காமல் போவதால், ஒருசில நிகழ்வுகள் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்திய ராணுவத்துக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், ஏன், இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லை எறிந்திருக்கிறது கனடா என்றாலும், மனித உரிமை மீறல் பிரச்னை சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறதே, அதுவரை மகிழ்ச்சி. நல்லதொரு முடிவு ஏற்படட்டும்!
இது காவல்துறையாலோ ராணுவத்தாலோ அரசாலோ மறுக்கப்படுவது என்பது தடுக்கப்பட்டே தீர வேண்டும்.உலகமயமாக்கலில் விளையும் நன்மை என்று குறிப்பிட முடியுமானால் அது உலகளாவிய அளவில் மனித உரிமை மீறலுக்கு எதிரான சிந்தனை உருவாகியிருப்பதுதான். சில நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பொருள்படுத்தப்படாமல் அங்கீகரிக்கப்படும்போது உலகிலுள்ள ஏனைய நாடுகளில் அந்த நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமல்ல, தண்டனை!சட்டத்தின் மேலாண்மையை மதிக்கும் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு நபரும் அவர் எத்தனை பெரிய பதவியை வகித்தாலும் மனித உரிமை மீறல் குற்றத்திலிருந்து மன்னிக்கப்படலாகாது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சித்திரவதை போன்ற குற்றங்கள் மனித நாகரிகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மன்னிக்கப்படக்கூடாத குற்றங்கள்.
இவை எந்த நாட்டில் செய்யப்பட்டாலும், நடைபெற்றாலும், உலகின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உலகின் எந்த நாட்டிலும் இடமளிக்கலாகாது. மன்னிப்பும் கிடையாது.பிற உலக நாடுகளின் நீதிமன்றங்களில், இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க முடியாதுதான். ஆனால், அந்த நாடுகள் இந்தக் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் தண்டனை வழங்க முடியும்.
ஒரு மனித உரிமைக் குற்றவாளியைச் சிறையில் அடைத்துத் தண்டிக்க முடியாதபோது அவர் சார்ந்த நாடு தண்டிக்காதபோது சர்வதேச அரங்கில் அவருக்கு எதிராக நடத்தப்படும் புறக்கணிப்பு என்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.தங்களது நாடுகளில் இனப்படுகொலை நடத்தி, மக்களைச் சித்திரவதைக்கு உள்படுத்தும் அதிபர்கள் நமக்குத் தெரிந்தே பலர் இருக்கிறார்கள்.
இவர்கள் கண்துடைப்புத் தேர்தலை நடத்தி, தங்களைத் தாங்களே மீண்டும் அதிபர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுடன், தங்களது கைப்பாவைகளைப் பிரதமர்களாகவும் அமைச்சர்களாகவும் அமர்த்தி தங்களது இனப்படுகொலையை மக்களாட்சி என்கிற மாயமுலாம் பூசி மறைத்துவிடுகிறார்கள். இவர்களைத் தண்டிப்பதுதான் எப்படி?உலக அரங்கில் இதுபோன்ற நபர்களின் மனித உரிமை மீறல்களைப் படம்பிடித்துக் காட்டி சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதுதானே ஒரே வழி.
பல நாடுகளில் அந்த நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சட்டங்கள் திருத்தப்பட்டு, மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு அந்த நாடுகளில் நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது.கனடா நாட்டு நிர்வாகம் 2004-ம் ஆண்டில், நுழைவு அனுமதி வழங்கும் துறையில் நவீன போர்க்குற்றப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது. இந்தப் பிரிவு அந்த நாட்டுக்குள் குடியேறவோ சுற்றுப்பயணம் செய்யவோ நுழைவு அனுமதி கேட்கும் விண்ணப்பங்களை ஆய்ந்து மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதியை மறுக்கிறது.
இதேபோல உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்களது குடியேற்ற மற்றும் நுழைவு அனுமதிச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுத்து சர்வதேசப் புறக்கணிப்புக்கு ஆட்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையும். இதுவரை எல்லாம் நலமே.அதேநேரத்தில், கனடா அரசு சமீபகாலமாக இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றும் மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றியவர்களுக்கு நுழைவு அனுமதி மறுத்திருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் மேலே குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் காஷ்மீரத்திலும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் என்று கனடா அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதைவிட விபரீதமான சிந்தனை எதுவுமே இருக்க முடியாது.இராக்கில் நடக்காத மனித உரிமை மீறலா? அப்படியானால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் அதிபர்களுக்கே கூட கனடா நுழைவு அனுமதி மறுக்க வேண்டுமே!
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததையும் தொடரும் மனித உரிமை மீறல்களையும் அனுமதிப்பவர்களுக்கு, இந்திய ராணுவம் செய்வதுமட்டும் மனித உரிமை மீறலாகத் தெரிவது ஆச்சரியம். அதுபோகட்டும். சோமாலியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் கனடா நாட்டு ராணுவம் நாடு கடந்து நடத்தும் மனித உரிமை மீறல்களைவிட பெரிய உரிமை மீறல் இந்தியாவில் நடந்துவிட்டதா என்ன? இப்படி ஓர் அவப்பெயர் இந்தியாவுக்கு வருவதற்குக் காரணம், இந்திய அரசு மனித உரிமை மீறல் பிரச்னையில் முழுமனதுடனான நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் இருப்பதுதான்.
சமீபத்தில் காஷ்மீரத்தில் நடந்த சோபியன் இளம்பெண்கள் விஷயத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் துணிவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவறை மூடி மறைக்கப் பார்த்த சம்பவம் ஓர் உதாரணம்.காவல்துறையானாலும், ராணுவம் ஆனாலும் மனித உரிமை மீறல் குற்றங்களில் மன்னிப்பு கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்காமல் போவதால், ஒருசில நிகழ்வுகள் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்திய ராணுவத்துக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், ஏன், இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லை எறிந்திருக்கிறது கனடா என்றாலும், மனித உரிமை மீறல் பிரச்னை சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறதே, அதுவரை மகிழ்ச்சி. நல்லதொரு முடிவு ஏற்படட்டும்!
Friday, May 28, 2010
இந்தியாவிலேயே முதலிடம் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு சென்னை மண்டலத்தில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி
சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, மராட்டியம், அந்தமான், டையூ-டாமன் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இவற்றில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 465 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4461 பேர் தேர்ச்சி பெறவில்லை. இது 96.18 சதவீதம் தேர்ச்சி ஆகும். நாட்டில் உள்ள 5 மண்டலங்களில் சென்னை மண்டலம்தான் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 9 லட்சத்து 2 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 89.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்களில் 88.30 சதவீதம் பேரும், பெண்களில் 90.68 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை மண்டலத்தில் உள்ள மாநிலங்களில் புதுச்சேரி 99.50 சதவீதம் பேர் வெற்றி பெற்று மண்டலத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. 99.15 சதவீதம் தேர்ச்சியுடன் கேரளா 2-வது இடம் பிடித்துள்ளது.
தேர்வு முடிவுகளை வெளியிட்டு மண்டல தேர்வு அதிகாரி நாகராஜ் கூறியதாவது:-
சென்னை மண்டலத்தில் மொத்தம் 1827 பள்ளிகள் உள்ளன. இவற்றை சேர்த்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் 573 மையங்களில் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 193 பள்ளிகள் உள்ளன. இவற்றை சேர்ந்த 17,423 மாணவ- மாணவிகள் 70 மையங்களில் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 17 ஆயிரத்து 245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.98 சதவீதமாகும்.
சி.பி.எஸ்.சி. தேர்வில் முதன் முறையாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்குகள் வழங்கப்படவில்லை.
கிரேடு அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டு உள்ளனர். 91 முதல் 100 மார்க் எடுத்தவர்களுக்கு ஏ-1 கிரேடு வழங்கப்பட்டு 10 புள்ளிகள் கொடுக்கப்பட்டன.
81 முதல் 90 மார்க் எடுத்தவர்களுக்கு ஏ-2 கிரேடு வழங்கப்பட்டு 9 புள்ளிகளும், 71 முதல் 80 மார்க் எடுத்தவர்களுக்கு பி-1 கிரேடு கொடுக்கப்பட்டு 8 புள்ளிகளும், 61 முதல் 70 மார்க் எடுத்தவர்களுக்கு பி-2 கிரேடுடன் 7 புள்ளிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
51 முதல் 60 மார்க் எடுத்தவர்களுக்கு சி-1 கிரேடுடன் 6 புள்ளிகளும், 41 முதல் 50 மார்க் எடுத்தவர்களுக்கு சி-2 கிரேடுடன் 5 புள்ளிகளும், 31 முதல் 40 மார்க் எடுத்தவர்களுக்கு டி கிரேடுடன் 4 புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 31-க்கு கீழ் மார்க் எடுத்தவர்களுக்கு இ-1, இ-2 கிரேடு வழங்கப்பட்டது. இவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக கருதப்படுவார்கள்.
அவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் கிரேடுகளை மறு ஆய்வு செய்ய விரும்புபவர்கள் 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, May 27, 2010
தலையங்கம்: தேவை துணிவு...
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை 90 சதவீதம் பள்ளிகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இந்த அரசால் என்ன செய்துவிட முடியும் என்கிற துணிச்சல்! அசைக்க முடியாத நம்பிக்கை!! அரசு எனும் வெள்ளையானையை அடிபணிய வைக்கும் அங்குசம் தன்னிடம் இருப்பதாகச் சொல்லித் திரியும் ஆணவம்!!! இவைதான் இந்தத் தனியார் பள்ளிகளை அரசுக்கு அடங்காதவையாக நிமிர்ந்து நிற்கச் செய்துள்ளன.
இந்தப் பள்ளிகளின் முறைகேட்டுக்குத் துணை போவதாக உள்ளது பள்ளிக் கல்வித் துறையின் நடவடிக்கை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களை அந்தந்தப் பள்ளியின் வாசலில் அறிக்கையாக எழுதி வைக்கும்படி செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை.
இந்தக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று சொன்னதைச் செய்யவும் தெம்பில்லை.பெரும்பாலான பள்ளிகள் அரசின் கல்விக் கட்டணத்தைப் பற்றியே கண்டுகொள்ளாமல், சென்ற ஆண்டின் கட்டணத்தைவிடக் கூடுதலாக 20 சதவீதம் வசூலிக்கின்றன என்று செய்திகள் வந்த பிறகும்கூட, பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக இருக்குமேயானால், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவர்கள் உடந்தை என்று சொல்வதா அல்லது இவர்களுக்கு அவர்களைக் கட்டுப்படுத்த திராணியில்லை என்று சொல்வதா?
ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் பல பள்ளிகள் முறையீடு செய்துள்ளதால், இந்தக் கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று கருதி, இணையதளத்தில் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வித் துறையே கூறும் என்றால், அதைவிட மோசமான, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான பதில் வேறு ஏதும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மே 20-ம் தேதி வரை, 1200 பள்ளிகள் மட்டுமே கல்விக் கட்டணத்துக்காக மேல் முறையீடு செய்துள்ளன. முதல்வர் அறிக்கைப்படி 2000 பள்ளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள 8000 பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைப் பகிரங்கமாக வெளியிடவும், இணையதளத்தில் வெளியிடவும் அரசுக்கு என்ன தயக்கம்?
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வங்கிகள் மூலம் செலுத்தவும், பள்ளிகளில் தனிப்பட்ட முறையில் வசூலிக்கக்கூடாது என்றும் சொல்லவும் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏன் தைரியம் இல்லை?பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, அவர்கள் வசூலிக்கும் கட்டணம், ஆசிரியர் சம்பளம், மாணவர் எண்ணிக்கை ஆகியவை குறித்து, இந்தப் பள்ளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகள் நியாயமானவை என்றால்-கல்விச் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவை என்றால், கணக்கை முறையாக, வெள்ளையாகவே காட்டியிருக்க வேண்டாமா? தமிழக அரசுக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்த பின்னரும்கூட, சங்கத்தின் கூட்டத்தைக் கூட்டி அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று சொல்லும் துணிச்சலை தனிநபர் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்வதா, நீதிமன்ற அவமதிப்பு என்று எடுத்துக் கொள்வதா அல்லது அரசைக் கேலி செய்வோரின் எக்காளம் என்று எடுத்துக் கொள்வதா? புரியவில்லை.
"பிளஸ் 2 தேர்வில் உங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெறச்செய்வோம்' என்று மார்தட்டும் சில நூறு தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தால்தான் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளும் அதே பாணியைப் பின்பற்றி நடக்கின்றன. அரசு முதலில் அடக்க வேண்டியது இத்தகைய சில நூறு தனியார் கல்வி நிறுவனங்களைத்தான். இத்தகைய அடாவடி கல்வி நிறுவனங்கள், மேல்முறையீடு செய்ததுடன் தற்போது புதிய கட்டண உத்திகளையும் தொடங்கிவிட்டன.
கோவிந்தராஜன் குழு அளித்த இரண்டு ஓட்டைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு பூத முகத்தைக் காட்டுகின்றன.அதாவது, பள்ளிப் பேருந்து மற்றும் விடுதிக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கோவிந்தராஜன் குழு அறிவித்திருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தக் கல்வி அதிபர்கள் (அதுதான் தொழில்- கல்வியாகிவிட்டதே!) எல்லா குழந்தைகளையும் விடுதியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
"விடுதியில் சேர்த்தால் பள்ளியில் சேர்த்துக் கொள்வோம், இல்லையானால் இடமில்லை' என்று அடாவடி செய்கிறார்கள்."பக்கத்துத் தெருவில் வீடு இருந்தாலும் பரவாயில்லை. விடுதியில் தங்குவதும் தங்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி விடுங்கள்'. ஆண்டுக்கு ரூ. 50,000-ல் தொடங்கி, குளிர்சாதன அறை என்றால் ரூ.1 லட்சம் வரை கட்டணம். வெகுஅருகில் வீடு இருந்தாலும், பள்ளிப் பேருந்து கட்டாயம் என்கிறார்கள். திட்டம் போட்டுத் திருடுகிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது; ஆனால் சட்டம் போட்டுத் தடுக்க முடிந்தும், அரசு வேடிக்கை பார்க்கிறது.
லஞ்சப் பேர்வழி குறித்து மேடைகளில் ஒரு கதை சொல்வார் முதல்வர் கருணாநிதி. எந்த இடத்தில் பணியமர்த்தினாலும் லஞ்சம் வாங்கும் ஊழியனைக் கொண்டுபோய் கடல் அலைகளை எண்ணும் பணிக்கு அமர்த்தினார் அரசர். அவனோ, கடலுக்குள் மீனவர்கள் சென்றால் அலைகளின் எண்ணிக்கை பாதிக்கும் என்று தடுத்தான். வேறு வழி? மீனவர்கள் லஞ்சம் கொடுத்து கடலுக்குச் செல்ல வேண்டியதாயிற்று என்பது கதை.
இப்போது இதே கதையை முதல்வர் திருத்திச் சொல்லலாம்; "அந்த ஊழியனை அரசர் சிறையில் அடைக்காமல், குறைந்த தண்டனையாக பணிநீக்கம் செய்தார். அவன் கல்விஅதிபராக மாறினான்'.ஒரு நூறு கல்விஅதிபர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும்போதும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தனியார் பள்ளி நிர்வாகங்களும் ஒரே நாளில் ஒழுங்குக்கு வந்துவிடும். இதைச் செய்யும் துணிச்சல் அரசுக்கு உண்டெனில், அனைவருக்கும் தரமான கல்வி உண்டு. பெற்றோரின் வாழ்த்தும் அரசுக்கு உண்டு.
இந்தப் பள்ளிகளின் முறைகேட்டுக்குத் துணை போவதாக உள்ளது பள்ளிக் கல்வித் துறையின் நடவடிக்கை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களை அந்தந்தப் பள்ளியின் வாசலில் அறிக்கையாக எழுதி வைக்கும்படி செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை.
இந்தக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று சொன்னதைச் செய்யவும் தெம்பில்லை.பெரும்பாலான பள்ளிகள் அரசின் கல்விக் கட்டணத்தைப் பற்றியே கண்டுகொள்ளாமல், சென்ற ஆண்டின் கட்டணத்தைவிடக் கூடுதலாக 20 சதவீதம் வசூலிக்கின்றன என்று செய்திகள் வந்த பிறகும்கூட, பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக இருக்குமேயானால், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவர்கள் உடந்தை என்று சொல்வதா அல்லது இவர்களுக்கு அவர்களைக் கட்டுப்படுத்த திராணியில்லை என்று சொல்வதா?
ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் பல பள்ளிகள் முறையீடு செய்துள்ளதால், இந்தக் கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று கருதி, இணையதளத்தில் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வித் துறையே கூறும் என்றால், அதைவிட மோசமான, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான பதில் வேறு ஏதும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மே 20-ம் தேதி வரை, 1200 பள்ளிகள் மட்டுமே கல்விக் கட்டணத்துக்காக மேல் முறையீடு செய்துள்ளன. முதல்வர் அறிக்கைப்படி 2000 பள்ளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள 8000 பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைப் பகிரங்கமாக வெளியிடவும், இணையதளத்தில் வெளியிடவும் அரசுக்கு என்ன தயக்கம்?
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வங்கிகள் மூலம் செலுத்தவும், பள்ளிகளில் தனிப்பட்ட முறையில் வசூலிக்கக்கூடாது என்றும் சொல்லவும் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏன் தைரியம் இல்லை?பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, அவர்கள் வசூலிக்கும் கட்டணம், ஆசிரியர் சம்பளம், மாணவர் எண்ணிக்கை ஆகியவை குறித்து, இந்தப் பள்ளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகள் நியாயமானவை என்றால்-கல்விச் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவை என்றால், கணக்கை முறையாக, வெள்ளையாகவே காட்டியிருக்க வேண்டாமா? தமிழக அரசுக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்த பின்னரும்கூட, சங்கத்தின் கூட்டத்தைக் கூட்டி அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று சொல்லும் துணிச்சலை தனிநபர் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்வதா, நீதிமன்ற அவமதிப்பு என்று எடுத்துக் கொள்வதா அல்லது அரசைக் கேலி செய்வோரின் எக்காளம் என்று எடுத்துக் கொள்வதா? புரியவில்லை.
"பிளஸ் 2 தேர்வில் உங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெறச்செய்வோம்' என்று மார்தட்டும் சில நூறு தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தால்தான் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளும் அதே பாணியைப் பின்பற்றி நடக்கின்றன. அரசு முதலில் அடக்க வேண்டியது இத்தகைய சில நூறு தனியார் கல்வி நிறுவனங்களைத்தான். இத்தகைய அடாவடி கல்வி நிறுவனங்கள், மேல்முறையீடு செய்ததுடன் தற்போது புதிய கட்டண உத்திகளையும் தொடங்கிவிட்டன.
கோவிந்தராஜன் குழு அளித்த இரண்டு ஓட்டைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு பூத முகத்தைக் காட்டுகின்றன.அதாவது, பள்ளிப் பேருந்து மற்றும் விடுதிக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கோவிந்தராஜன் குழு அறிவித்திருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தக் கல்வி அதிபர்கள் (அதுதான் தொழில்- கல்வியாகிவிட்டதே!) எல்லா குழந்தைகளையும் விடுதியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
"விடுதியில் சேர்த்தால் பள்ளியில் சேர்த்துக் கொள்வோம், இல்லையானால் இடமில்லை' என்று அடாவடி செய்கிறார்கள்."பக்கத்துத் தெருவில் வீடு இருந்தாலும் பரவாயில்லை. விடுதியில் தங்குவதும் தங்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி விடுங்கள்'. ஆண்டுக்கு ரூ. 50,000-ல் தொடங்கி, குளிர்சாதன அறை என்றால் ரூ.1 லட்சம் வரை கட்டணம். வெகுஅருகில் வீடு இருந்தாலும், பள்ளிப் பேருந்து கட்டாயம் என்கிறார்கள். திட்டம் போட்டுத் திருடுகிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது; ஆனால் சட்டம் போட்டுத் தடுக்க முடிந்தும், அரசு வேடிக்கை பார்க்கிறது.
லஞ்சப் பேர்வழி குறித்து மேடைகளில் ஒரு கதை சொல்வார் முதல்வர் கருணாநிதி. எந்த இடத்தில் பணியமர்த்தினாலும் லஞ்சம் வாங்கும் ஊழியனைக் கொண்டுபோய் கடல் அலைகளை எண்ணும் பணிக்கு அமர்த்தினார் அரசர். அவனோ, கடலுக்குள் மீனவர்கள் சென்றால் அலைகளின் எண்ணிக்கை பாதிக்கும் என்று தடுத்தான். வேறு வழி? மீனவர்கள் லஞ்சம் கொடுத்து கடலுக்குச் செல்ல வேண்டியதாயிற்று என்பது கதை.
இப்போது இதே கதையை முதல்வர் திருத்திச் சொல்லலாம்; "அந்த ஊழியனை அரசர் சிறையில் அடைக்காமல், குறைந்த தண்டனையாக பணிநீக்கம் செய்தார். அவன் கல்விஅதிபராக மாறினான்'.ஒரு நூறு கல்விஅதிபர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும்போதும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தனியார் பள்ளி நிர்வாகங்களும் ஒரே நாளில் ஒழுங்குக்கு வந்துவிடும். இதைச் செய்யும் துணிச்சல் அரசுக்கு உண்டெனில், அனைவருக்கும் தரமான கல்வி உண்டு. பெற்றோரின் வாழ்த்தும் அரசுக்கு உண்டு.
Wednesday, May 26, 2010
அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் சென்னை மாணவர் முதலிடம்
மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வை நடத்தியது. 15 ஐ.ஐ.டி.கல்லூரியில் சேருவதற்கான நுழைவு தேர்வு கடந்த ஏப்ரல் மாதம்
11-ந் தேதி நடந்தது. 9509 இடங்களுக்கு மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
11-ந் தேதி நடந்தது. 9509 இடங்களுக்கு மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.
இதில் 13 ஆயிரத்து 103 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் சென்னை மாணவர் அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.
மும்பை மண்டலத்தில் அதிக பட்சமாக 3145 பேரும், சென்னை மண்டலத்தில் 2619 பேரும், டெல்லி மண்டலத்தில் 2264 பேரும், கராக்பூர் மண்டலத்தில் 1481 பேரும், கான்பூர் மண்டலத்தில் 1341 பேரும், ரூர்கே மண்டலத்தில் 1305 பேரும், கவுகாத்தி மண்டலத்தில் 521 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் நுழைவு தேர்வு எழுதினார்கள். அதில் 1476 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அகான்ஷா முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் அவர் 18-வது இடம் பிடித்து உள்ளார்.
இதர பிற்படுத்தப்பட் டோரில் 2357 பேரும் தாழ்த் தப்பட்டோரில் 1773 பேரும், பழங்குடியினர் பிரிவில் 517 பேரும், ஊனமுற்றோரில் 174 பேரும் வெற்றி பெற்று உள்ளனர்.
மாணவர்களுக்கு இணையதளம் மூலம் கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங் இணையதளம் நாளை திறக்கப்பட்டு ஜூன் 12-ந் தேதி மூடப்படும்.
பொது வகுப்பினர் கவுன்சிலிங்குக்கு நேரடியாக செல்ல தேவை இல்லை. ஆனால் இதர பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்கு டியினர், ஊனமுற்றோர் நேரடியாக செல்ல வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக அனில் அம்பானி முயற்சி !!!!!!!!!!!!1
இந்திய கிரிக்கெட் அணி ஸ்பான்சராக இதுவரை சகாரா நிறுவனம் இருந்தது. இதன் ஸ்பான்சர் காலம் முடிந்ததை அடுத்து புதிய ஸ்பான்சரை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடப்படுகிறது.
இந்த தடவை கிரிக்கெட் அணி ஸ்பான்சரை பெற ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி முயற்சித்து வருகிறார். ஹீரோ ஹோண்டா, அடாக் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்சரை பெற முயற்சித்து வருகின்றன.
அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி ஐ.பி.எல். மும்பை அணி உரிமையாளராக இருக்கிறார். அதேபோல கிரிக்கெட்டில் தானும் பங்கு பெற வேண் டும் என்று அனில் அம்பானி விரும்பினார். எனவே அணி ஸ்பான்சரை பெறும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
இந்த தடவை கிரிக்கெட் அணி ஸ்பான்சரை பெற ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி முயற்சித்து வருகிறார். ஹீரோ ஹோண்டா, அடாக் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்சரை பெற முயற்சித்து வருகின்றன.
அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி ஐ.பி.எல். மும்பை அணி உரிமையாளராக இருக்கிறார். அதேபோல கிரிக்கெட்டில் தானும் பங்கு பெற வேண் டும் என்று அனில் அம்பானி விரும்பினார். எனவே அணி ஸ்பான்சரை பெறும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
Tuesday, May 25, 2010
தடம் மாறும் இளம் ரத்தம்! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. வளர்ப்பும், சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது.
இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள்.உண்மை தான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு ‘பிளான் பண்ணி’ கொலை செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்டு, சக மாணவனை கடத்தி பணம் கேட்டதும், கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.
அது, இது என்று எந்த வரையரையும் இல்லாமல் கைதேர்ந்தவர்கள் செய்யும் எல்லாவிதமான குற்றங்களிலும் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை குழந்தைகள் என்று சொல்லும் அதே சட்டம் தான், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது இளம் குற்றவாளிகள் என்கிறது. அதேநேரத்தில் இவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம். 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராக கருதி, சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
சீர்திருத்த இல்லங்களில் அவர்களின் நிலைமையை ஆராய்வதற்கு முன்பே சமூகம் ஒதுக்கும் குற்றவாளிகளாக அவர்கள் மாறி விடுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதம் இளம் குற்றவாளிகள் செய்பவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஒன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம்,தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் நடைபெறுவவை. Ô‘எப்படியிருந்தாலும் அதற்கு சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணம். எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்கு பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும்தான் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ஆர்.மாலினி.
குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். இது சமூக விரோதிகளின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகம் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதே நேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
குடும்பத்தால் குலையும் குழந்தைகள்
குழந்தைகள் மன ஓட்டத்தை ஆராய்ந்து வரும் மனநல நிபுணர்கள் சொல்வதென்ன?
பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும், உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது குடிப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர். பலர், தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதை பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்டக்குறை, விட்டக்குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது. முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல்கள் என்று பட்டம்.
இப்படி கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள். எனவே பிள்ளைகள் யாருடன் பழகினாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி விடும். எனவே குழந்தைகளின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதுடன், நல்வழி காட்டும் கதைகளையும், போதனைகளையும் சொல்லித் தருவது நல்லது. குறிப்பாக தவறான வழியில் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்து சொல்வது மிக முக்கியம். இதற்கு வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பது நல்லது என்கின்றனர்.
குற்றவாளிகளில் பெண்கள்...
தேசிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் சிறுமிகளின் எண்ணிக்கையும் 3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர், சிறுமிகள் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
சிகரெட்
அட்டையில் சீட்டாட்டம்
சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் சீட்டு ஆடினாலே சூதாட்டம் என்று சீறுவது அந்தக் காலம். இந்த நாகரீக காலத்தில் சீட்டாட்டம் இன்டோர் கேம் ஆகிவிட்டது. பணக்கார வீடுகளில் மட்டுமல்ல, நடுத்தர குடும்பங்களிலும் சீட்டு விளையாட்டு Ôஜஸ்ட் ஃபன்Õ. அதனால் ஏற்படும் விளைவுகள் சீரியஸானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச் சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர். அவமானத்தில் துடித்த சிறுமி கடைசியில் தூக்கில் தொங்கிளாள். தூண்டிய குற்றத்திற்காக சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வயது 18க்குள். மிக முக்கியான விஷயம், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இளம் குற்றவாளிகள்... இவ்வளவு குற்றங்கள்...
திருட்டுக் குற்றங்களில்தான் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில், மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளன. இன்னொரு அதிர்ச்சி தகவல்... 2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது 141 கொலைகள். அடுத்து மத்திய பிரதேசம். தமிழ்நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள் தான். 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400 சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதர சட்டங்களில்...
ஆயுதங்கள், போதைப் பொருள், சூதாட்டம், சாராயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதனை சட்டமும் கவனிக்கிறது.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்களை விட 2008ம் ஆண்டு குறைவான சம்பவங்களே நடந்துள்ளன. அதாவது 2007ம் ஆண்டில் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2008ம் ஆண்டில் 3156 ஆக குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் இளம் குற்றங்கள்
நாகரீகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் விவரம்:
தெருவோரம் உருவாகும்...
இளம் குற்றவாளிகள் பட்டியலில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தான் முதலிடத்தை பிடிக்கின்றனர். தெருவோரத்தில் வசிப்பவர்கள் என்று சொன்னாலும், தங்குவது ரயில், பேருந்து நிலையங்களில்தான். வறுமையின் பிடியில் இருப்பவர்கள் முதலில் பிச்சை எடுப்பார்கள். பின்னர் மற்றவர்களுடன் கூட்டு சேருவர்கள். அப்பாவிகளை மிரட்டி காசை பறிப்பார்கள். மறுத்தால் அடி உதையில் இறங்குவர். பிக்பாக்கெட், செயின் பறிப்பு என்று உள்ளூர் திருட்டுகளில் தேறிய பின்னர் இளம் குற்றவாளிகள் பட்டியலில் சேருவர்கள்.
இல்லாவிட்டாலும் Ôமாசக் கடைசி கேஸ்’ பிடிக்கும் போலீசார் புண்ணியத்தில் கேடிகள் லிஸ்டில் வந்து விடுவார்கள். சமூக விரோதிகள் பழக்க்கம் கிடைத்ததும் இளம் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று பெரும் குற்றவாளிகள் ஆவார்கள். பல சமூக விரோதிகள், சின்ன பையன்கள் என்றால் சந்தேகம் வராது என்பதால், குற்றச் செயல்களிலும், துப்பு கொடுக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சென்னை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் நடக்கிறது.
நேர்மையை வெல்லும் வறுமை
இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளை கவனிக்க நேரமிருப்பதில்லை. எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற நிலை, அவர்களை கண்டும் காணாமல் இருக்க வைத்து விடுகிறது. அதனால் வறுமை அவர்களின் நேர்மையை வென்று விடுகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கை இப்படி பட்டியல் போடுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2008ம் ஆண்டு பதிவுகளின் படி இளம் குற்றவாளிகளில் 62.2 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.25,000 வரை உள்ளவர்கள். அதேபோல் ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை வருமான உள்ள குடும்பங்களை சேர்ந்த இளம் குற்றவாளிகள் 13.6 சதவீதம். எஞ்சிய 24.2 சதவீதத்தினர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவர்கள்.
தமிழகத்தில்...
தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டின் குற்றங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
குற்றம் 2006 2007 2008
கொலை 23 38 26
கொலை முயற்சி 18 17 17
கற்பழிப்பு 8 13 7
கடத்தல் 0 4 3
பெண் கடத்தல் 0 2 3
வீடு புகுந்து திருட்டு 1 14 3
வழிப்பறித் திருட்டு 6 1 13
கொள்ளை 119 138 106
திருட்டு 304 387 410
ஆட்டோ திருட்டு 44 56 56
வன்முறை 6 26 23
அடிதடி 41 42 158
மானபங்கம் 5 2 5
பாலியல் தொந்தரவு 5 0 0
அலட்சியம் காரணமாக
ஏற்படுத்திய உயிரிழப்பு 78 0 6
மற்ற குற்றங்கள் 29 65 75
மொத்தம் 687 805 911
செக்சிலும் குற்றம்...
விவரம் அறியாத சிறுவர், சிறுமியர்களை வீட்டில் வைத்துக் கொண்டு பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்கள், உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியத்துடன் அவர்கள் செய்யும் செயல்கள் குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், வளர்இளம் பருவத்திலேயே அது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிகரெட், மது போல் அதையும் முயற்சித்து பார்ப்பதால், குற்றவாளியாக மாறி விடுகின்றனர். அது வெளியில் தெரியவரும் போது இரு தரப்பையும் பாதிக்கிறது. 2008ம் ஆண்டு தகவல் இது. நாட்டில் 30&50 லட்சம் சிறுவர், சிறுமிகள் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.
இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள்.உண்மை தான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு ‘பிளான் பண்ணி’ கொலை செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்டு, சக மாணவனை கடத்தி பணம் கேட்டதும், கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.
அது, இது என்று எந்த வரையரையும் இல்லாமல் கைதேர்ந்தவர்கள் செய்யும் எல்லாவிதமான குற்றங்களிலும் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை குழந்தைகள் என்று சொல்லும் அதே சட்டம் தான், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது இளம் குற்றவாளிகள் என்கிறது. அதேநேரத்தில் இவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம். 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராக கருதி, சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
சீர்திருத்த இல்லங்களில் அவர்களின் நிலைமையை ஆராய்வதற்கு முன்பே சமூகம் ஒதுக்கும் குற்றவாளிகளாக அவர்கள் மாறி விடுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதம் இளம் குற்றவாளிகள் செய்பவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஒன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம்,தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் நடைபெறுவவை. Ô‘எப்படியிருந்தாலும் அதற்கு சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணம். எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்கு பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும்தான் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ஆர்.மாலினி.
குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். இது சமூக விரோதிகளின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகம் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதே நேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
குடும்பத்தால் குலையும் குழந்தைகள்
குழந்தைகள் மன ஓட்டத்தை ஆராய்ந்து வரும் மனநல நிபுணர்கள் சொல்வதென்ன?
பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும், உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது குடிப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர். பலர், தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதை பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்டக்குறை, விட்டக்குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது. முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல்கள் என்று பட்டம்.
இப்படி கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள். எனவே பிள்ளைகள் யாருடன் பழகினாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி விடும். எனவே குழந்தைகளின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதுடன், நல்வழி காட்டும் கதைகளையும், போதனைகளையும் சொல்லித் தருவது நல்லது. குறிப்பாக தவறான வழியில் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்து சொல்வது மிக முக்கியம். இதற்கு வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பது நல்லது என்கின்றனர்.
குற்றவாளிகளில் பெண்கள்...
தேசிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் சிறுமிகளின் எண்ணிக்கையும் 3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர், சிறுமிகள் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
சிகரெட்
அட்டையில் சீட்டாட்டம்
சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் சீட்டு ஆடினாலே சூதாட்டம் என்று சீறுவது அந்தக் காலம். இந்த நாகரீக காலத்தில் சீட்டாட்டம் இன்டோர் கேம் ஆகிவிட்டது. பணக்கார வீடுகளில் மட்டுமல்ல, நடுத்தர குடும்பங்களிலும் சீட்டு விளையாட்டு Ôஜஸ்ட் ஃபன்Õ. அதனால் ஏற்படும் விளைவுகள் சீரியஸானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச் சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர். அவமானத்தில் துடித்த சிறுமி கடைசியில் தூக்கில் தொங்கிளாள். தூண்டிய குற்றத்திற்காக சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வயது 18க்குள். மிக முக்கியான விஷயம், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இளம் குற்றவாளிகள்... இவ்வளவு குற்றங்கள்...
திருட்டுக் குற்றங்களில்தான் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில், மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளன. இன்னொரு அதிர்ச்சி தகவல்... 2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது 141 கொலைகள். அடுத்து மத்திய பிரதேசம். தமிழ்நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள் தான். 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400 சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதர சட்டங்களில்...
ஆயுதங்கள், போதைப் பொருள், சூதாட்டம், சாராயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதனை சட்டமும் கவனிக்கிறது.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்களை விட 2008ம் ஆண்டு குறைவான சம்பவங்களே நடந்துள்ளன. அதாவது 2007ம் ஆண்டில் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2008ம் ஆண்டில் 3156 ஆக குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் இளம் குற்றங்கள்
நாகரீகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் விவரம்:
தெருவோரம் உருவாகும்...
இளம் குற்றவாளிகள் பட்டியலில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தான் முதலிடத்தை பிடிக்கின்றனர். தெருவோரத்தில் வசிப்பவர்கள் என்று சொன்னாலும், தங்குவது ரயில், பேருந்து நிலையங்களில்தான். வறுமையின் பிடியில் இருப்பவர்கள் முதலில் பிச்சை எடுப்பார்கள். பின்னர் மற்றவர்களுடன் கூட்டு சேருவர்கள். அப்பாவிகளை மிரட்டி காசை பறிப்பார்கள். மறுத்தால் அடி உதையில் இறங்குவர். பிக்பாக்கெட், செயின் பறிப்பு என்று உள்ளூர் திருட்டுகளில் தேறிய பின்னர் இளம் குற்றவாளிகள் பட்டியலில் சேருவர்கள்.
இல்லாவிட்டாலும் Ôமாசக் கடைசி கேஸ்’ பிடிக்கும் போலீசார் புண்ணியத்தில் கேடிகள் லிஸ்டில் வந்து விடுவார்கள். சமூக விரோதிகள் பழக்க்கம் கிடைத்ததும் இளம் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று பெரும் குற்றவாளிகள் ஆவார்கள். பல சமூக விரோதிகள், சின்ன பையன்கள் என்றால் சந்தேகம் வராது என்பதால், குற்றச் செயல்களிலும், துப்பு கொடுக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சென்னை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் நடக்கிறது.
நேர்மையை வெல்லும் வறுமை
இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளை கவனிக்க நேரமிருப்பதில்லை. எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற நிலை, அவர்களை கண்டும் காணாமல் இருக்க வைத்து விடுகிறது. அதனால் வறுமை அவர்களின் நேர்மையை வென்று விடுகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கை இப்படி பட்டியல் போடுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2008ம் ஆண்டு பதிவுகளின் படி இளம் குற்றவாளிகளில் 62.2 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.25,000 வரை உள்ளவர்கள். அதேபோல் ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை வருமான உள்ள குடும்பங்களை சேர்ந்த இளம் குற்றவாளிகள் 13.6 சதவீதம். எஞ்சிய 24.2 சதவீதத்தினர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவர்கள்.
தமிழகத்தில்...
தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டின் குற்றங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
குற்றம் 2006 2007 2008
கொலை 23 38 26
கொலை முயற்சி 18 17 17
கற்பழிப்பு 8 13 7
கடத்தல் 0 4 3
பெண் கடத்தல் 0 2 3
வீடு புகுந்து திருட்டு 1 14 3
வழிப்பறித் திருட்டு 6 1 13
கொள்ளை 119 138 106
திருட்டு 304 387 410
ஆட்டோ திருட்டு 44 56 56
வன்முறை 6 26 23
அடிதடி 41 42 158
மானபங்கம் 5 2 5
பாலியல் தொந்தரவு 5 0 0
அலட்சியம் காரணமாக
ஏற்படுத்திய உயிரிழப்பு 78 0 6
மற்ற குற்றங்கள் 29 65 75
மொத்தம் 687 805 911
செக்சிலும் குற்றம்...
விவரம் அறியாத சிறுவர், சிறுமியர்களை வீட்டில் வைத்துக் கொண்டு பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்கள், உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியத்துடன் அவர்கள் செய்யும் செயல்கள் குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், வளர்இளம் பருவத்திலேயே அது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிகரெட், மது போல் அதையும் முயற்சித்து பார்ப்பதால், குற்றவாளியாக மாறி விடுகின்றனர். அது வெளியில் தெரியவரும் போது இரு தரப்பையும் பாதிக்கிறது. 2008ம் ஆண்டு தகவல் இது. நாட்டில் 30&50 லட்சம் சிறுவர், சிறுமிகள் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)