Monday, September 27, 2010

யாரு டீமுல யாரு? சென்னை டீம்ல யாரு?

ஐபிஎல் 3-ஐ அடுத்து எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக்கையும் கைப்பற்றிவிட்ட சந்தோஷத்தில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை கோப்பையை வென்ற பின் கேப்டன் தோனி பத்திரிகையாளர்களிடம் இறுதியாக தெரிவித்த ஒரு விஷயம் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது.http://www.vikatan.com/vc/cmspic/I_1289.jpg

"வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்ற நாங்கள் அடுத்த ஐபிஎல் தொடரில் யார் யார் சென்னை அணியில் இருப்பார்கள் என்பது தன்னால் இப்போது கணிக்க முடியவில்லை," என்று கூறியிருந்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த சிறிய ஏமாற்றம் யாரும் கவனிக்காமல் இல்லை.

காரணம்... சென்னை உரிமையாளர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வாளர்கள் தோனியின் கருத்து இல்லாமல் இறுதி முடிவு எடுத்ததில்லை. கிட்டத்தட்ட கேப்டன் தோனி மற்றொரு சென்னை உரிமையாளராகவே வலம் வந்தார். அவரது கருத்துப்படியும் சென்னை அணி செயல்பட்டது. அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு...

முதல் ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டம் வரை சென்ற சென்னை அணி, இரண்டாவது ஐபிஎல் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது. போதுமான வேகப்பந்து வீச்சு இல்லாததையே இது உணர்த்தியதால் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அதுவும் மூன்றாவது ஐபிஎல் போட்டி தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் வேகமாக இடையில் சேர்க்கப்பட்டவர்தான் போலிங்கர்.

முன்னதாக இது தொடர்பான உள் தேர்வு நிகழ்ச்சியில் தோனியின் முடிவு எது என்பதால் சென்னை அணியின் முக்கிய தலைவரான சீனிவாசன் உடனடியாக போலிங்கரை அணுகி அவரை உடனடியாக சென்னை அணியில் இணைத்தார். அதன் பிறகுதான் சென்னை அணி பந்து வீச்சில் வலு பெற்று வெற்றிகள் குவித்தது.

இதுவரை தோனியின் கருத்துக்கும் ஆசைக்கும் முழு ஆதரவு கொடுத்த சென்னை அணியில் தோனியே தொடர்ந்து இருப்பாரா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. காரணம், தோனி ஜார்க்கண்டை சேர்ந்தவர். அவரை தக்க வைத்தாலும் அவர் முடிவு செய்த வீரர்கள் தொடர்ந்து சென்னை அணியில் நீடிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போது இருக்கும் ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு அணியில் நான்கு முக்கிய வீரர்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம். அதாவது, சென்னையை சேர்ந்த வீரர்களை தவிர்த்து சுரேஷ் ரெய்னா, ஜகாட்டி, ஜோகிந்தர் சர்மா, கோனி என்று உள்நாட்டு வீரர்களை குறிப்பிட்டு சொன்னாலும், இவர்களை தவிர வெளிநாட்டு வீரர்களான மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, ஆல்பி மோர்கள், போலிங்கர், முரளிதரன், துஷாரா, சுரேஷ் பெரேரா என வரிசையாக அணி வகுக்கும் நட்சத்திர வீரர்களின் வரிசையில் சென்னை அணி எந்த நான்கு வீரருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் தெரியவில்லை.

கேப்டன் தோனியே மற்ற அணி விலை பேச வாய்ப்பு உள்ளதால், அவரை எந்த விலைகொடுத்தும் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயலும். அப்படி அதிக விலை பேசி இவரை ஒப்பந்தம் செய்தால் மற்ற வீரர்களை வாங்க போதுமான பணம் இருக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. இதற்காக ஒரு குறிப்பிட்ட விலையையும் ஐபிஎல் நீர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் வெளிநாட்டு வீரர்களில், முக்கியமாக இரண்டு வேகப்பந்து வீச்சாளார்கள் முரளிதரன், போலிங்கர், துஷாரா, மக்காயா நிட்டினி ஆகியோரில் யாரை தக்க வைக்க முடியும்? பந்து வீச்சியில் இப்படியென்றால் பேட்டிங் வரிசையில், மேத்யூ ஹெய்டன், மைக்கெல் ஹசி, சுரேஷ் பெரேரா, ஆல்ரவுண்டரில் ஆல்பி மோர்கள், ஜேக்கப் ஓரம், ஆண்ட்ரூ பிலிண்டாப் என இந்த லிஸ்ட் நீழுகிறது. இதில் பிலிண்டாப் மீண்டும் எடுக்க வாய்ப்பு இல்லை.

வெளிநாடு வீரர்கள் தான் இப்படி என்றால், உள்நாட்டு வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்க அனைத்து ஐபிஎல்லில் உருபினர்களும் இவரை எந்த விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர். இவரை தக்க வைக்கவும் சென்னை அணி அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆரம்பத்தில் ஒன்று ரெண்டு வீரர்கள் வைத்துக்கொண்டு அவர்களின் திறமையாக மெருகேற்றி சமாளித்து வந்த மற்ற அணிகள் கூட தற்போது சிறந்த வீரர்களை அணியில் சேர்க்கவே விரும்புகின்றனர்.

முன்னதாக சென்னை அணியிலிருந்து யார் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்த போது மேத்யூ ஹெய்டன், சென்னை தன் தாய் வீடு போன்றது என்றும், நான் சென்னை அணியை விட்டு எந்த அணிக்கும் மாற தயாராக இல்லை எனக் கருத்து கூறினார்.

நேற்று போட்டி முடிவடைந்த உடன் மைக்கெல் ஹசி, நாங்கள் ஒன்றினைந்து முழு அர்பணிப்புடன் விளையாடியதால் ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக்கை கைப்பற்ற முடிந்தது. தன்னை இதுவரை உற்சாகமாகவும், மரியாதையாகவும் நடத்திய சென்னை அணியை விட்டு போக மனமில்லை. ஆனால் அது என் கையில் இல்லையே என வேதனையுடன் குறிப்பிட்டார்.

இவர் இப்படியென்றால் தமிழகத்தின் மருமகன் முரளிதரனை கேட்கவே வேண்டாம். சென்னை நகரமும், ரசிகர்களும் தன்னை இதுவரை பிரித்து பார்த்ததே இல்லை. தான் இன்னும் தன் தாய் நாட்டுக்கு விளையாடுவது போன்றுதான் உணருகிறேன். இறுதி வரை சென்னை அணிக்கு விளையாடவே விரும்புகிறேன் என்று ஐபிஎல் 3-ஐ கைப்பற்றியதும் வெளிப்படையாகவே தன் கருத்து தெரிவித்தார்.

ஒட்டு மொத்தத்தில் சென்னை அணி கோப்பை வென்ற மகிழ்ச்சியை விட தற்போது யார் யாரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற டென்ஷன் தான் பெரிதாக எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னை அணியும் மற்ற அணிகளில் இடம் பெற்று சிறந்த வீரர்களை வாங்கவும் முயற்சி செய்யும்.

சச்சினின் எதிப்பு...

சென்னைக்கு மட்டுமல்ல மற்ற அணிகளும் இந்த கவலை தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் விதிமுறைக்கு மும்பை அணித்தலைவர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தன் அணியில் தற்போது தான் ஒன்றிணைத்து முழு சிறந்த அணியாக மாற்றியுள்ளளோம். இந்த நிலையில் நான்கு வீரர்கள் மட்டுமே அணியில் தக்க வைக்க முடியும் என்பது ரொம்ப கஷ்டமான பணி என கருத்து தெரிவித்துள்ளார்.

சரி... சென்னை அணியில் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம்? நீங்களே யோசனை சொல்லுங்களேன்...

Saturday, September 25, 2010

"அண்ணாவிடம்" பல்பு "வாங்கிய வடஇந்தியர்கள்

1962. தமிழ்நாட்டுல இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்தது. டெல்லில இருந்தவங்க இங்க இருக்க சூழ்நிலை புரியாம, கண்டபடிக்கு பேட்டி குடுத்திட்டிருந்தாங்க.

அந்த காலத்துல தமிழ்நாட்டுல 'அண்ணா'ன்னு சொன்னா போதும், சின்னப் பசங்கலேந்து பல்லு போன கிழவனார்கள் வரைக்கும் அப்படியே ஒரு வேகம் தொத்திக்கும். அண்ணா எங்கயாவது பேசறார்னு தெரிஞ்சா, அந்த ஏரியாவே சும்மா கதிகலங்கும். கேக்கற எல்லாரையும் அப்படியே கட்டிப்போடற அளவுக்கு அண்ணாவோட தமிழ் தித்திக்கும். தான் சொல்ல வந்த விஷயத்தை எல்லார் மனசுலேயும் நல்லா பதியற மாதிரி பேசறதுல அண்ணாவுக்கு நிகர் அண்ணா தான்.

டெல்லி பார்லிமெண்ட். இந்தி மொழியை தேசிய மொழியா ஆக்கறது பத்தி தீர்மானம் போட கூட்டம் கூடியிருந்தது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் ஒருத்தர் எழுந்தார். "இந்தியை தேசிய மொழியா அங்கீகரிக்க ஏன் எதிர்க்கறீங்கன்னு புரியலை.."ன்னு சொல்லி, தன் தரப்பு பாயிண்ட்டுகளை அடுக்கி வெச்சார். " சிம்பிள் லாஜிக். சின்ன குழந்தைக்கு கூட இது புரியும்.. இந்தியாவுல அதிகமான மக்கள் பேசற மொழி இந்தி.. அதனால இந்தி மொழிய தானே தேசிய மொழி ஆக்க முடியும்..!"னு முடிச்சார்.

அண்ணா எழுந்தார். "அதிகமான மக்கள் பேசற மொழி தான் தேசிய மொழியா இருக்கணும்னு சொல்றீங்க.. அப்படி பாத்தா, நம்ம நாட்டுல அதிகமா இருக்கற பறவை காக்கா தான். பின்ன ஏன் மயில் தேசியப் பறவையா இருக்கு...? நாட்டுல எலி இல்லாத மாநிலமே இல்லை.. அதனால இனிமே புலிக்கு பதிலா இனிமே எலியை தேசிய விலங்கா அறிவிச்சிடலாமா..?"ன்னு கேட்டதுக்கு பார்லிமெண்ட் கட்டடம் அதிர்ற அளவுக்கு கைதட்டினாங்க..

குல்லாகாரர் கேட்டார். "சரி.. அப்டீனா இந்தியர்கள் ஒருத்தொருக்கொருத்தர் பேச, இணைப்பு மொழியா எது இருக்கும்..?"

"ஏன்.. இப்ப தான் பள்ளிகூடத்துலயே ஆங்கிலம் சொல்லித் தரோமே.."

"ஆங்கிலம் சொல்லித் தரது உலகத்தோட தொடர்பு கொள்ள.. இந்தியர்களுக்குள்ள தொடர்பு கொள்ள ஒரு மொழி வேணும்.. இந்தியாவுல நிறைய பேருக்கு தெரிஞ்ச மொழி இந்தி.. அதனால கொஞ்சம் பேர் மட்டும் இந்தி கத்துகிட்டா போதும்.. அதுக்கு தான் இந்திய தேசிய மொழி ஆக்கணும்னு சொல்றோம்.."

"வெளிநாட்டுக்காரங்களோட பேச பயன்படற அதே ஆங்கிலத்தை, இந்தியாவுல இருக்கவங்ககிட்டயும் பேச பயன்படுத்திக்கலாம்.. எதுக்காக இன்னொரு மொழி கத்துக்கணும்..? உங்க வீட்ல ரெண்டு நாய் இருக்குன்னு வெச்சுக்கங்க.. ஒண்ணு பெரிசு.. ஒண்ணு சின்னது.. பெரிய நாய்க்காக ஒரு கதவும், சின்ன நாய்க்காக ஒரு கதவும் வெப்பீங்களா.. பெரிய நாய் வந்து போகுற கதவையே சின்ன நாயும் பயன்படுத்திக்கும் தானே.. ?ன்னாரு..

அறிஞர் அண்ணாவோட டைமிங் சென்ஸ், டெல்லிகாரங்களையே வாயடைக்க வெச்சிடுச்சு..!

மேற்கண்ட உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்தது. அண்ணா இவ்ளோ சூப்பரா ஆங்கிலம் பேசுவார்னு அங்க இருக்கவங்க ஒருத்தரும் எதிர்பாக்கலை. அண்ணா சொன்னார் : "I rarely speak English; But my English is not rare..!".

Thursday, September 23, 2010

Sunday, September 12, 2010




WATCH ALL THE PHOTOS CAREFULLY








Friday, August 20, 2010

எம்.ஜி.ஆர்ருக்காக சட்டத்தை திருத்திய இந்திரா காந்தி!!!!!!!!!!!!!!!!


தற்பொழுதுதான் திரு.ரவீந்தர் எழுதிய "பொன்மனச்செம்மல் " எம்.ஜி.ஆர் நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...... திரு.ரவீந்தர் செம்மல்லோடு 35 ஆண்டு காலம் பணியாற்றியவர் .... அந்நூலில் என்னை கவர்ந்த செம்மல் வாழ்க்கை யில் நடந்த சில சுவாரசியங்களை என் பதிவுலக நண்பர்களுக்காக இங்கு எழுதுகிறேன் ... உங்களின் மேலான ஆதரவு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் ....


1979 ம் ஆண்டு செம்மலின் ஆட்ச்சியை கலைத்த இந்திரா காந்தி அம்மையார் , எம்.ஜி.ஆர் ருக்காக ரிசர்வ் வங்கியின் சட்டத்தையே மாற்றி அமைத்தார் என்றால் , அது செம்மல் ஒருவருக்கே சாத்தியப்படும் ...

நடப்புக்கு ஒரு உதாரணம் சொல்லுவார்கள் ..நெல்லுக்குல்தான் அரிசி.அது பிரிந்து விட்டால் ஒட்டாது. அப்படிதான் நட்பும் என்று. அதையும் முறியடித்தார் செம்மல் .இரண்டாவது முறை மக்களால் அரியணையில் அமர்ந்த பிறகு அன்னை இந்திரா , செம்மல் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்தார்.மோதல் இருந்த போதும் சஞ்சய் காந்தி இறந்த பொழுது , இரங்கல் தெரிவிக்க சென்ற செம்மலின் உன்னத குணத்தை அறிந்தார். தமிழகம் தன நட்பில் இல்லையென்றால் தென்னகமே தன்னாட்சிக்குள் இருக்கத் தகுதியில்லை என நினைத்து, செம்மலுக்கு ஒரு தாயானார் . தாய் தோழியானார் . செம்மல் சொல்லையும் கேட்டார் .

1984 ம் ஆண்டு செம்மல் வாதநோயால் பாதிக்க பட்டு இருந்தபொழுது .அன்னை இந்திரா செம்மலின் உடல் நிலை அறிந்து பறந்து வந்தார். ஒரு நாட்டுப் பிரதமர் , தான் மருத்துவமனைக்கு வந்தது பெருமையென நினைத்தார் . செம்மலின் அருகே செல்ல மருத்துவர்கள் தடை விதித்திருந்ததால் , அவர் இருக்கும் கருப்புக் கண்ணாடி அறையில் ,சிறு வெள்ளைக் கண்ணாடி வழியாக பார்த்தார் , பார்த்துவிட்டு அன்னை கேட்ட முதல் கேள்வி "இவர் எம்.ஜி.ஆரா ?" என்பதுதான்.


திருமதி ஜானகி அம்மாளுக்கு இந்திரா ஆறுதல் சொன்னார் . அமேரிக்கா போக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார் . மேலும் ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி சட்டம் தளர்த்தப்படும், எவ்வளவு செலவானாலும் இந்த உன்னத உயிர் பிளைக்ளகட்டும் அவரது தர்மமே அவரை காக்கும் , உங்கள் & என் பிராத்தனை , வெளியே நிக்கும் லட்சோப லட்சம் மக்களின் பிராத்தனை ஒன்றாவது பலிக்காமலா போக போகிறது , என்று ஜானகியம்மாவை கட்டி பிடித்து கண்ணை துடைத்தார் அன்னை. அதன் பிறகு செம்மல் பிரச்சாரத்துக்கு செல்லாமலே முதல்வர் ஆனது தனி வரலாறு ....


இன்று வரலாற்றில் தன் பெயர் நிற்க என்ன வெல்லாமோ செய்கிறர்கள் , செம்மலின் வாழ்க்கை வரலாறை எடுக்கவும் அவரது நண்பர்கள் முனைந்தனர், ஆனால் நடந்தது ??????????

உங்கள் வாக்கு தான் என்னை உற்சாக படுத்தும் , மறக்காமல் உங்கள் வாக்கினை இட்டு செல்லுங்கள் நண்பர்களே ...........

Monday, July 26, 2010

Tuesday, July 13, 2010

தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா?

தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது என நாம் தமிழர் கட்சி, செந்தமிழன் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் மீன்பிடிக்கும் போது அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இலங்கையில் 25,000 சீனக் கைதிகளை புனரமைப்புப் பணிகள் செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மானத்திற்கும் உயிருக்கும் தீங்கு செய்யும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் ஏற்படும் என்பதை தடுக்கக் கோரியும் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்திட ஐ.நா.மன்றம் நியமித்த போர்க்குற்ற விசாரணைக் குழவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 9-07-10 சனி அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.


இதுவரை சுமார் 537 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டும், அடித்தும் கொன்றிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரை படுகாயப்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களின் பல்லாயிரம் கோடி மூபாய் உடமைகளை அழித்து நாசப்படுத்தியிருக்கிறார்கள். நமது மீனவர்களை காக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் கடிதம் எழுதிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றனர்.


இதைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என் மீது பிரிவினை தூண்டினார், இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு.


இலங்கை, இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் இழிவாக எழுதி வைத்து இலங்கையின் வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சே ஐ.நா. தூதரகத்தை முற்றுகையிட்டு, ஐ.நா. நியமித்த மர்சுகி தருஷ்மன் தலைமையிலான போர்க்குற்ற விசாரணைக் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.


அதை இலங்கை அதிபர் இராஜபக்சேவும் ஆதரிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது.


இலங்கையில் ஈழத்தமிழரை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்தது போதாதென்று இந்தியாவிலும் தமிழினத்தை அதாவது நம் மீனவர்களை இனப்படுகொலை செய்துவரும் சிங்கள இனவெறியர் அதிபர் இராஜபக்சே அரசை நாம் கண்டித்தால், தமிழக அரசுக்கும், இங்குள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது ஏன்? இராஜபக்சே இவர்களுக்கு அண்ணனா, தம்பியா? மாமனா, மைத்துனரா? தமிழின விரோதியைத் திட்டினால் தமிழினக் காவலருக்கு கோபம் வருவதேன்? தமிழர்களின் உயிரென்றால் உங்களுக்கு துச்சமா? அல்லது இராஜபக்சே அரசுக்கு நீங்கள் என்ன அங்கமா?


ஈழத்தமிழரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், 6வது திருத்தச் சட்டம் என அடக்குமுறைச் சட்டங்களைக் காட்டி மிரட்டுவதைப் போல், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இங்கேயும் அடக்குமறைச் சட்டம் போடுவோமென மிரட்டுகிறார் என்றால், இவர்கள் தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கைமீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்களாம்! ஆனால் அதைக் கண்டித்துப் பேசும் எங்களுக்குத் தான் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவாராம்.! இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு அமைச்சரா? இல்லை இலங்கைக்கு அமைச்சரா?


உலகமே இன்றைக்கு இலங்கையின் இராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா.மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்துவைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான இராஜபக்சேவே செல்கிறார்.


லங்கைப் பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் இராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய இராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், இராணுவத்தின் மீதும் விசாரணை எதுவும் நடத்த மாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமன்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழவிற்கு சாட்சியமளித்தால் அவரைத் தூக்கிலிடுவோம் என பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் மிரட்டுகிறார். போர்க்குற்றம் செய்யாதவர்கள் என்றால் இப்படியெல்லாம் ஐ.நா.வை அவமானப்படுத்துவது ஏன்? விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுப்பதேன்? சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்த அனுமதித்தால் இலங்கை போர்க்குற்றவாளி நாடாக அறிவிக்கப்படும் என்ற அச்சத்தால் ஐ.நா. குழுவின் விசாரணைக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதுதானே உண்மை.


ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் இடம்பெற முயற்சிக்கும் இந்தியா இதுவரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? 2009 சனவரியில் காசா பகுதியில் சுமார் 1700 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட போது, அதே ஆண்டு ஏபரலில் ஐ.நா.மன்றம் அமைத்த போர்க்குற்ற விசாரணைக் குழுவை வரவேற்ற இந்திய அரசு, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் சுமார் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இதுவரை ஏன் கண்டிக்கவில்லை?


போர்க்குற்ற விசாரணை நடத்தச் செல்லும் ஐ.நா.குழுவை இந்தியாவும் தமிழக அரசும் ஆதரிக்கிறதா, இல்லை எதிர்க்கிறதா என்று சொல்லட்டும்.மிகச் சிறிய நாடான இலங்கை ஐ.நா.மன்றத்தையே அவமானப்படுத்தும்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதைக் கண்டிக்க அஞ்சுவது ஏன்? சீனக் கைதிகளை இலங்கை இறக்குமதி செய்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இந்திய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இலங்கை அனுமதித்துள்ள 25,000 சீனக்கைதிகளில் பயங்கர குற்றவாளிகளும், உளவாளிகளும் இருக்க மாட்டார்கள் என்று என்ன உறுதியிருக்கிறது? அப்படிபட்டவர்களால் இந்தியாவின் பாதுகாப்பு பகுதியாகவும் இராணுவத்தளங்கள் அமைக்க தகுதியான இடமாகவும் கருதப்படும் தென்னிந்தியாவிற்கு குந்தகம் விளையாதா?


இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சார்க் நாடுகளில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டு கடலோரப் படைகளும், தன் அண்டை நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக்கொல்வது கிடையாது. கைது செய்து அந்தந்த நாட்டிற்கே அனுப்பிவைத்து விடுவதுதான் வழக்கம். ஆனால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள அரசைத் தட்டிக்கேட்க துணிவு இல்லாவிட்டாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடமோ முறையிட்டு இலங்கை அரசை, இந்தியா தண்டிக்கத் தவறியதேன்.


அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது! அவையெல்லாம் எதற்கு? இராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசுவதற்கா? மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 168 இந்தியர்களை சுட்டுக் கொன்றதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்த இந்தியா முள்ளிவாய்க்கால் போரில் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் 15,000 பேர் 50,000 ஈழத்தமிழர்களோடு இனப்படுகொலை செய்யப்பட்டதையும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்பகுதியிலேயே சிங்கள கடற்படை கொன்றதையும் உதாசீனப்படுத்திவிட்டு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்புவது இந்திய ஒருமைப்பாட்டின் இலட்சணத்திற்கு இதுதான் அடையாளமா?


சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், தன்னைத் தமிழன் என்று மார்த்தட்டிக் கொள்ளும் பொறுப்புள்ள ஒரு தமிழக முதலமைச்சர், "சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?" என்றும் "கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?" என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?.


செம்மொழி மாநாடு நடத்தியவருக்கு பாவம் இராஜராஜ சோழன் காலத்தில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று தமிழரிடம் வாலாட்டிய சிங்கள மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய வரலாறு தெரியாதென்று சொல்ல முடியாது. பதவிப்பித்தும், குடும்பச் சொத்தும் தமிழக முதல்வரைத் தமிழர் வீரத்தைப் பற்றியே கேலியும் கிண்டலும் செய்யத் தூண்டியிருக்கிறது. இதுதான் அண்ணா, பெரியார் உங்களுக்கு காட்டிய வழியா?


தமிழனுக்கு என்றொரு நாடோ, படையோ இன்றில்லாவிட்டாலும் முப்படைகளைக் கொண்டிருக்கும் இந்திய அரசில் தன்னை பங்காளி ஆக்கிக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கலைஞர் தன்னை எம்.ஜி.ஆரைப் போல் எண்ணிக்கொண்டு, சோனியா காந்தி தன்னை இந்திராகாந்தி போல் கருதிக்கொண்டு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் செய்தததைப் போல எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உதவிகள்கூட செய்ய வேண்டாம். குறைந்தது எங்களைத் தடுத்து நிறுத்தாமல் இருக்க முடியுமா உங்களால்?


ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பாற்ற எத்தனை இலட்சம் தமிழர்கள் அணிவகுத்து புறப்படுகிறார்கள் என்று சோதித்து பார்க்க நீங்கள் தயாரா? குடிநாயகம் அனுமதிக்கும் பேச்சு சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க தடைச்சட்டங்களிடம் தஞ்சம் புகும் நீங்களா தமிழக இளைஞர்களின் வீரத்தைப் பற்றி கேலி பேசுவது? நாங்கள் சூராதி சூரர்கள் என்று நிரூபிக்கத் தயார்! ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள உங்களைப் போன்றவர்கள் நந்தி போலிருந்து முட்டுக்கட்டை போடாமலிருக்கத் தயாரா?


ஈழத்தமிழர்கள் 2009ல் இனப்படுகொலை செய்யப்படும் போதுகூட, உங்கள் தயவால் நடந்து கொண்டிருந்த மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடி தந்து போரை நிறுத்தாமல் மூணுமணி நேர உண்ணாவிரத நாடகமெல்லாம் எங்களுக்கு நடத்தத் தெரியாது. பணமோ, பதவியோ ஏதுமற்ற ஏழைத்தமிழர்களான முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை 18 மானத்தமிழர்களால் தீக்குளித்துத் தங்கள் இன்னுயிரை மாய்க்கத்தான் தெரிந்தது. தமிழினத்தைக் காட்டிக்கொடுக்க அவர்களுக்குத் தெரியவில்லையே! வங்காளி என்ற இனப்பற்று இருந்ததால்தான் ஒரு மேற்குவங்க காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ரேயிக்கு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுத் தர முடிந்தது.


ஆனால் இந்தியாவையே வழிநடத்தும் முதலமைச்சரான கலைஞரால் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும், 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டு வேடிக்கைதானே பார்க்க முடிந்தது? மலேசியாவில் சுமார் 250 ஆந்திர மென்பொருள் பொறியாளர்களின் கடவுச்சீட்டைக் அந்நாட்டின் காவல்துறை கிழித்து அவமானப்படுத்தியபோது, ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு கொதித்தெழுந்து பிரதமாயிருந்த வாஜபாய்க்கு நெருக்கடி தந்து உடணடியாகப் புதுக்கடவுச் சீட்டு வழங்கச் செய்ததோடு மலேசிய அரசுடனான சுமார் 65,000 கோடி ரூபாய் இந்திய வணிகத்தையே இரத்து செய்ய வைத்தார்.


ஆனால் உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவராக ஆசைப்படும் உங்களால் தமிழக மீனவர்களைக் காக்க நடுவன அரசுக்குக் கடிதம் விடு தூதுதான் நடத்த முடிகிறது என்பது பெருமைக்குரிய செய்தியா என்பதை சற்று எண்ணி பாருங்கள் ஹரியானா வம்சாவழி வந்த பிஜி நாட்டின் அதிபர் சவுத்ரி இராணுவப் புரட்சியால் தூக்கி எறியப்பட்டதற்கு, ஹரியானா முதல்வராக இருந்த சவுதாலாவின் வற்புறுத்தலை ஏற்று இந்திய அரசு பிஜி நாட்டுடனான அரச உறவுகளை துண்டித்துக் கொண்டதோடு தன்னாட்டு தூதுவரையும், பிஜியிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது.


ஆனால் தமிழக முதல்வரோ மகனுக்கும், பேரனுக்கும் நடுவணரசின் இலாபகரமான துறைகள் வேண்டி நெருக்கடி கொடுத்தாரே தவிர தமிழர்களைக் காக்க ஏன் எவ்வித நெருக்கடியும் தர மனமில்லாது போனது? கென்யா நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத்தியர்கள் பாதிக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கென்யாவில் வாழும் குஜராத்தியர்கள் கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வரலாம். ஆவர்களை குஜராத் அரசு பாதுகாக்கும் என்று துணிவோடு பேசினார்.


ஆனால் தமிழக முதல்வர் கலைஞரோ, 83 வயதான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து இந்தியா வந்த மாவீரன் பிரபாகரன் அவர்கிளின் தாயார் பார்வதி அம்மாளை இரக்கமில்லாமல் விமானதளத்திலிருந்தே திருப்பியனுப்பிய கருணைக்கடல் அல்லவா நீங்கள்? அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் போரின் போது அங்கிருந்து தப்பித்து தமிழகம் முயற்சி செய்த எண்ணற்ற தமிழ்க் குடும்பங்களை இரக்கமில்லாமல் இந்தியக் கடற்படையை வைத்து தடுத்து திருப்பியனுப்பியது போர்க்குற்றத்திற்கு உடந்தையான செயலல்லவா?


போர் முடிந்து ஒராண்டு ஆகியும் பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை வதைமுகாம்களில் வைத்தும் சுமார் 80,000க்கும் மேற்பட்ட தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி கொடுமைப்படுத்தியும் வருகிறது சிங்கள அரசு. ஆனால் போர் எதுவும் இல்லாமலே தமிழ் நாட்டில் எவ்வித விசாரணையுமின்றி ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் வதைமுகாம்களில் தடுத்து வைத்து இருக்கிறீர்கள் நீங்கள், அது நியாயம்தானா?


அண்மையில் கனடா அரசு, கைது செய்து வைத்திருந்த 86 ஈழத்தமிழர்களை 3 மாதத்திற்குள் விசாரித்து விடுதலை செய்தது மட்டுமன்றி அகதிகளாகவும் ஏற்றுக் கொள்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு ஈழத்தமிழர்களை அகதிகளாகவும் ஏற்று ஆதரிப்போம் என மனிதநேயத்தோடு அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்.


ஆனால் தமிழக முதல்வரோ, இந்திய பிரதமரோ அல்லது சோனியா காந்தியோ ஐ.நா மன்றம் இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த நியமித்த குழுவை இதுவரை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று துணிவுடன் கூற முடியாதது ஏன்? குற்றமுள்ள நெஞ்சுகள்தானே குறுகுறுக்க வேண்டும்!உலகில் வாழும் 10 கோடி தமிழர்களும் ஐ.நா.மன்றம் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆய்வு செய்யும் குழுவை நியமனம் செய்ததற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கி.மூன் அவர்களுக்கும், இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நன்றிகள் செலுத்தி பாராட்டி வருகிறார்கள்.


இனப்படுகொலையை விசாரிக்க இவர்கள் எடுக்கும் நல்ல முயற்சிக்கு யார் தடையாய் இருக்க நினைத்தாலும் அதனை முறியடித்துக் காட்டும் ஆற்றல் உலகத் தமிழர்க்கு உண்டு எனவே ஈழத்தமிழரையும், தமிழக மீனவர்களையும் காத்திட ஆட்சியில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாங்கள், எங்களை இலங்கைக்குச் செல்ல தூண்டிவிடுவது போல், தமிழக இளைஞர்களை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிஜமென சங்கே முழங்கு" என்கிற வழியில் எங்களை அனுமதிக்க நீங்கள் தயாரா?


எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஓளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல என்பதை தமிழக அரசுக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

செந்தமிழன் சீமான்

Thursday, July 8, 2010

உண்மையான பச்சோந்திகள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!










Sunday, June 27, 2010

DANGEROUS TRAVEL!!!!!!!