இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு சென்னை தியாகராயநகர் பனகல் பார்க் அருகே நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மாம்பலம் போலீசார் இவரை முக்கிய குற்றவாளியாக சேர்த்தனர். இவரோடு இவரது நண்பர்கள் அப்பு, ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி, மாட்டு சேகர் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
Saturday, May 1, 2010
`தாதா' தொழில் அதிபர்- வக்கீல் கொடூர கொலை
இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு சென்னை தியாகராயநகர் பனகல் பார்க் அருகே நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மாம்பலம் போலீசார் இவரை முக்கிய குற்றவாளியாக சேர்த்தனர். இவரோடு இவரது நண்பர்கள் அப்பு, ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி, மாட்டு சேகர் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
orphan விமர்சனம் 18+ பதிவுக்கு அல்ல படத்திற்க்கு
2009ø Åó¾ ´Õ «Õ¨ÁÂ¡É ò¡¢øÄ÷ À¼õ , ¦Åà ·À÷Á¢¸(§¸ð¦¼), À£ð¼÷ …÷Š¸¡÷ð (ƒ¡ý),þó¾ ¾õÀ¾¢¸ÙìÌ þÕ ÌÆ󨾸û ´Õ ¬ñ(§¼É¢Âø) , ´Õ ¦Àñ (§ÁìŠ )À¢û¨Ç¸û , ãýȡž¡¸ À¢ÈìÌõ ÌÆó¨¾ þÈóÐ À¢È츢ÈÐ , þ¾É¡ø , «É¡¨¾ ¬„¢ÃÁò¾¢ø þÕóÐ ´Õ ¦Àñ ÌÆ󨾨Â(±Š¦¾÷) ¾òÐ ±ÎìÌÈ¡÷¸û , «¨Á¾¢Â¡É& «Æ¸¡É ÌÎõÀò¾¢ø «ì ÌÆó¨¾ ÀñÏõ «ð¼¸¡º§Á À¼õ...................
ãò¾ Á¸ý §¼É¢ÂøìÌ ±Š¦¾÷¨Ã Å£ðÎìÌû ѨÆó¾Ð ¦¾¡¼í¸¢ À¢Êì¸Å¢ø¨Ä, þÃñ¼¡ÅÐ ÌÆó¨¾ §ÁìŠ , þÅû ´Õ °¨Á ..þÅ÷¸û þÕÅÕõ ¿ýÀ÷¸Ç¡¸¢ Ţθ¢È¡÷¸û , ±Š¦¾÷ «¨½ò¾¢Öõ ÀÎ ÍðÊ¡¸ þÕ츢ȡû , À¼õ Ũþø «ÅÙìÌ À¢Êò¾Á¡É ´ýÚ....
±Š¦¾÷ Åó¾Ð Ó¾ø Å£ðÊø º¢Ú º¢Ú À¢Èɸû ±Æ ¦¾¡¼í̸¢ÈÐ, 13 ÅÂÐ ÌÆó¨¾Â¡É ±Š¦¾÷ ¦ºöÔõ ¦ºÂø¸û «¨Éò¾¢Öõ ´Õ Ó¾¢÷ ¦¾¡¢¸¢ÈÐ. þ¾üìÌ ¯îº¸¼Á¡¸ «Åû ¦Àü§È¡÷ ¯È× ¦¸¡ûÙõ §À¡Ð ¿ÎÅ¢ø ¦ºýÚ ÀÎôÀÐ , «Å÷¸û ¯È× ¦¸¡ûŨ¾ À¡÷ôÀÐ ±ýÚ ¿£ø¸¢ÈÐ...
´Õ ¸ð¼¾¢ø §¸ð¦¼×ìÌ þÅû §Áø ºó§¾¸õ Åà ¬ÃõÀ¢ò¾×¼ý À¼õ ÝÎ À¢ÊìÌÈÐ..........................
§¸ð§¼ þÚ¾¢Â¢ø ¾ý ÌÎõÀò¨¾ ±ôÀÊ ¸¡ôÀ¡üȢɡø ±ýÀ§¾ Á£¾¢ ¸¨¾.............
±Š¦¾÷ ´ùÅÕŨÃÔõ ¦¸¡øžüìÌ §À¡Îõ ôÇ¡ý & ¦¸¡ûÙõ Å¢¾õ À¾È ¨Å츢ÈÐ... ¾ý «ôÀ¡×¼§É «Åû ¯È× ¨ÅòÐ ¦¸¡ûÇ ¬¨º ÀðÎ «Åû ¿¼óÐ ¦¸¡ûéõ Å¢¾õ ±É À¼ò¾¢ø ú¢ì¸ ÜÊ ¸¡îº¢¸û «¾¢¸õ...
þÚ¾¢Â¢ø «ìÌÆó¨¾ Â¡÷ ±ýÚ ¦¾¡¢Ôõ §À¡Ð þÂìÌ¿÷ «¼ §À¡¼ ¨Å츢ȡ÷.......
ӾĢø ¦º¡ýÉÐ §À¡ø ´Õ «Õ¨ÁÂ¡É ¾¢¡¢øÄ÷ À¼õ ´÷·Àý.........
þÐ ±ýÛ¨¼Â Ó¾ø À¾¢× ... ¯í¸û ¬¾Ã×õ °ì¸ãõ ±¾¢÷§É¡ìÌõ ¯í¸û« ýÒ ¾õÀ¢.........
¯í¸û ´ð¨¼ ÁÈ측Áø þðΠŢðÎ ¦ºøÄ×õ.....
............................¿ýÈ¢.......................
Thursday, April 29, 2010
அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும
எலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க "நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்!
நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட்! நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், "தொப்பைய கொறக்கலாமே?"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, "போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.
மழை பெஞ்சது தெரியாம, "தண்ணி லாரி புட்டுகிச்சா? ஒரே ஈரமா இருக்கே"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க? அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. "இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.
"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, "இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு? என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக "இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா? கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே? இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். "அப்பிடியா, தேங்ஸ்"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.
அந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.
நார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே "பேர் பொருத்தம் பெஸ்ட்"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)
போனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.
சம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, "சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்?
அடுத்த பதிவிலே சொல்றேனே? முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்!
அர்த்த ராத்திரியில் அல்டிமேட் ஸ்டார்...
கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு. ஆனா, ஏகன் மாதிரியே 'போங்கடிச்சிட்டாரு' அந்த ஏகனோட ஃபிரண்டு! விக்ரமாதித்யன் வேதாளத்துக்கு கதை சொன்ன மாதிரி, ஓரம் எது? உட்புறம் எதுன்னே புரியாம ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டேன்ல, ஸாரி பிரண்ட்ஸ். இது அல்டிமேட் ஸ்டார் பற்றிய ஒரு அல்டிமேட்டான விஷயம்!
ரொம்ப நாளாவே அஜீத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதனும்னு ஆச எனக்கு. அவரிடம் கேட்டா, "வேணாம் பாஸ். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லே(?)ம்"பாரு. அதனால அவருக்கு நெருக்கமான ஆளுங்களை பிடிச்சு விஷயத்தை கறந்திரலாம்னு ஐடியா. இந்த பதிவு முழுக்க முழுக்க சினிமாவுக்கு அப்பாற்பட்டதா இருக்கணும்னு நினைச்சதாலே, அவரோட மேனேஜர் சுரேஷ் சந்திரா, பிஆர்ஓ வி.கே.சுந்தர் ரெண்டு பேரையும் விட்டுட்டு மூணாவதா ஒரு ஆளை பிடிச்சேன். பிரதாப்!
அஜீத் நாயர்னா, பிரதாப் டீக்கடை! அஜீத் ரகசியான்னா, பிரதாப் பிட்டு துணி! இப்படி ரெண்டு பேரோட நெருக்கம், ரொம்ப சுருக்கமானது. பிரதாப்பை நேரடியா மீட் பண்ணிடலாம். ஆனா மனுசன் பேசணுமே? அந்த நேரத்திலேதான் செந்தில் சொன்னாரு. "ஏங்க, அவனும் நானும் ஒன்னா படிச்சவன்ய்ங்க தெரியுமா? வாங்க, நான் கூட்டிட்டு போறேன்..." சைட் அடிக்க போன பிகர், சந்துக்குள்ளே சிக்குனா எப்படியிருக்குமோ, அப்பிடியிருந்துச்சு எனக்கு!
சாப்டுகிட்டே பேசலாம்னாரு பிரதாப். வந்தது சிக்கன் பிரியாணி. கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு.
"பிரதாப், ஒன்னுமில்லே. அஜீத் சார பற்றி ஒரு புத்தகம் எழுதலாம்னு. அவரை பற்றி நிறைய விஷயங்களை, ஜனங்களுக்கு தெரியாத இன்னொரு ஏரியாவ சொல்லணும். மொதல்ல அவரு எப்படிப்பட்ட டைப்? பொதுவா சினிமா ஹீரோங்க வெளியே நடிப்பாங்க. உள்ளே பார்த்தா வேற மாதிரி இருப்பாங்க. சொல்லுங்க"ன்னேன்.
"அவர பத்தி என்னத்த சொல்றது. அவரு இதெல்லாம் லைக் பண்ண மாட்டாரே? அவரு உண்டு அவரு வேல உண்டுன்னு இருப்பாரு"
அப்புறம்...?
"அப்புறம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே, ம்ம்ம்... வேற விஷயங்களுக்கு போக மாட்டாரு. ஷ§ட்டிங் முடிஞ்சா வீட்டுக்கு வந்திருவாரு. அப்புறம்ம்ம்ம்ம்ம்ம்... ம் என்னத்தை சொல்றது? அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே" இதை பிரதாப் சொல்லி முடிப்பதற்குள் நான் பாதி பிளேட் பிரியாணியை காலி பண்ணியிருந்தேன். மனுஷன்கிட்டே ஒன்னுமே பேராது போலிருக்கேன்னு நினைச்சுகிட்டே, அவருக்கு ஏராளமான ரசிகருங்க இருக்காங்க. அவங்களோட அன்பையும் வெறித்தனமான காதலையும் வேற மாதிரி யூஸ் பண்ற ஐடியா இருக்கா தலைவருக்கு? "வேற மாரின்னா...?" அதாங்க, அரசியல் அப்பிடி இப்பிடின்னு... "அப்பிடியா, இது பத்தி நான் என்னத்தை சொல்றது? அவரு மனசிலே... இப்ப எதுவும்... டேய், செந்திலு. சாரு என்னடா என்னென்னவோ கேக்குறாரு?" ஒரே மூச்சில் ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை காலி பண்ணியது பார்ட்டி!
"சரி, விடுங்க. உங்களுக்கே நான் எழுதற மாதிரி ஏதாவது தோணும் இல்லையா? அத சொல்லுங்க போதும்"னேன். இப்போ கொஞ்சம் உயிர் வந்திச்சு பிரதாப்புக்கு. "இல்லைங்க, அவருக்கு? எதுக்கு சொல்றேன்னா? அது வந்து"ன்னு ஆரம்பிச்சவரு, எழுத்துக்கூட்டி இன்சால்மென்ட்லே சொன்னதை, ஒரே மூச்சில் எழுதிடறேன். நிஜமாகவே அல்டிமேட் அல்டிமேட்தான்!
"அஜீத் சார் பென்ஸ் காரே வச்சிருந்தாலும், என் கார்லதான் வர ஆசைப்படுவார். (டாடா இன்டிகாம்) ஏன்னா, என் கார்ல டேப் இல்லை. அத பிரிச்சு போட சொன்னதே அவருதான். கார்லே போகும் போது அமைதியா போகணும். அதுதான் பிடிக்கும் அவருக்கு. அது மட்டுமில்லே, காரை நான் ஓட்ட ஜன்னல் வழியா இந்த ஊரு உலகத்தை, கடைத் தெருவை ஒரு குழந்தை மாதிரி ரசிச்சிட்டு வருவார். அப்படி ஒருமுறை ராத்திரி பதினொரு மணி இருக்கும். கிளம்பிட்டோம். ஈசிஆர்ல இருக்கிற அவரு வீட்டுல இருந்து பாண்டி பஜார் நோக்கி வந்திட்டு இருந்தோம். அன்னிக்கு பார்த்து செம ஜாலி மூடு அவருக்கு. நள்ளிரவு பனிரெண்டு தாண்டிருச்சு. அப்படியே வள்ளுவர் கோட்டம் வழியா பீச் ரோடை புடிச்சு வீட்டுக்கு போயிரலாமான்னாரு. சரின்னு சொல்லி வண்டியை கண்ணதாசன் சிலைகிட்டே திருப்பினேன்... வண்டி ஆஃப்!"
"சாவியை திருப்பி திருப்பி போட்டாலும், ஒரு இன்ஞ் நகலே வண்டி. பெட்ரோல் இருக்கான்னு கூட பார்க்காம வண்டியை கிளப்பியிருக்கேன். இப்போ என்னா பண்றது? "வண்டியிலேயே இருக்கீங்களா, போய் ஏதாவது காலி கேன்லே பெட்ரோல் வாங்கிட்டு வந்திர்றேன்"னு கேட்க, "அட, விட்றா. இப்போ பாரு"ன்னு காரிலேர்ந்து கீழே இறங்குனாரு. ஸ்டியரிங்கை புடின்னு சொல்லிட்டு அப்படியே வண்டிய தள்ள ஆரம்பிச்சாரு. பதறி போன நான், "அட இதென்ன வேண்டாத வேலை. நான் தள்றேன். நீங்க ஸ்டியரிங்கை புடிங்க"ன்னேன். "அட விட்றா. இப்படி வண்டிய தள்ளி ரொம்ப நாளாச்சு"ன்னவரு, அங்கிருந்து வாணி மஹால் வரைக்கும் தள்ளிகிட்டே வந்தாரு. (சுமார் அரை கி.மீ) நல்லவேளை, அவரு குனிஞ்சுகிட்டே வண்டிய தள்ளியதாலே கிராஸ் பண்ணி முன்னாடி போன யாரும் கண்டுக்கலே"
"வீட்லே வந்து போட்டு குடுத்திருவாரோன்னு பயம். ஏன்னா, அவர போயி வண்டிய தள்ள விட்டியான்னு எனக்குதானே டோஸ் கொடுப்பாங்க மேடம்? சொல்லவே இல்லை அவரு. இப்போ நீங்க எழுதி, "ஆமா... புக் எப்போ வருது?"ன்னாரு பிரதாப்!
"இது மாதிரி இன்னும் நிறைய சொல்லுங்க. அப்புறம் எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா போடலாம்"னேன். "அப்பிடியா... நான் என்னத்தை சொல்றது?"ன்னு வேதாளம் முருங்கை மரத்தை பார்க்க, "யோசிச்சு வைங்க. வர்றேன்"னு கிளம்பினேன். ஆறு மாசம் விடாம அலைஞ்சா, தல பற்றி ஒரு புக் தேறும்னு நினைக்கிறேன்.
தேறுங்ம்கிறீங்க...?
.............................................நன்றி அந்தனன்........................................
கொலுசு வடிவ இதயமும்....கோபித்துக் கொண்ட டி.ஆரும்!
யோவ்... கதாநாயகிய தொடக் கூடாதுங்கறதை நான் என்னோட பாலிசியா வச்சிருக்கேன். வேற எவனுக்காவது சினிமாவுலே இந்த தில் இருக்கா, சொல்ல சொல்லு பார்ப்பம்Õ என்பார் அடிக்கடி! இந்த யோவ்... நீங்களும் நானும் அல்ல. ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரி!
மும்தாஜோடு இவர் நடிக்கும் காட்சியை வீட்டிலேயே படமாக்கிக் கொண்டிருந்தார். (வீடே ஏவிஎம் ஃபுளோர் மாதிரிதான் இருக்கும். அவ்வளவு பெரிசு) வேடிக்கை என்னவென்றால் (தனியாக ஒன்று இருக்கிறதா என்ன, ஒட்டுமொத்தமும் வேடிக்கைதான்!) இவர் ஊரிலுள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி அசிஸ்டென்டுகளை திட்டிக் கொண்டிருப்பார். லாங்குவேஜ் புரியாத காரணத்தாலேயே டைரக்டரின் அங்க அசைவுகளை ரசித்துக் கொண்டிருப்பார் மும்தாஜ். பல நேரங்களில் இவர் நேரடியாக மும்தாஜையே திட்டி தீர்க்கும்போதும், அந்த புன்னகை மாறாமல் நிற்கும் பொண்ணு!
அன்றைய காட்சி என்ன என்பது தெரியவில்லை. அதுவும் அவருக்கு மட்டும்தான் தெரியும். இதய வடிவில் ஒரு கொலுசு படம் வரைந்து அதை மும்தாஜின் முந்தானையில் ஸ்டாப்ளர் அடிக்க நினைத்திருப்பார் போலிருக்கிறது. என்னிடம் திரும்பி, Ôகொலுசு வடிவத்தில் ஒரு இதயத்தை பேப்பரில் நறுக்கிக் கொடுங்கÕ என்றார். எடிட்டோரியல் வேலையை விட்டுவிட்டு ஷ§ட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதால் இந்த வேலை கொடுக்கப்பட்டது எனக்கு! நானும் அவர் சொன்னபடியே (ஊரிலுள்ள கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு) நறுக்கிக் கொடுத்தேன்.
சட்டென்று திரும்பி அவரது அசிஸ்டென்ட் ஒருவரிடம், அத எட்றா என்றார். எது என்று சொன்னால்தானே அவர் எடுப்பார், பாவம்! அவர் கீழே குனிந்து பேந்த பேந்த முழிக்க, பொட்டேர் என்று விழுந்தது அவரது பிடறியில்! அறைந்தது டி.ஆர்தான்! மிக சமீபமாக நின்று கொண்டிருந்த மும்தாஜ் இதற்கு ஒரு சின்ன அதிர்ச்சியாவது காட்ட வேண்டுமே? தினமும் இதுபோல நிறைய பார்த்திருப்பார் போலும்! அப்படியே நின்று கொண்டிருந்தார். அந்த முந்தானையை எட்றா. ஒரு பொண்ணு முந்தானைய தொடக் கூடாதுன்னு பார்க்கிறேன். புரிஞ்சுக்க மாட்றீங்களே என்றார் டி.ஆர்.
அந்த அசிஸ்டென்ட் ஒரு கையால் பிடறியை தடவிக் கொண்டே இன்னொரு கையால் மும்தாஜின் முந்தானையை பிடித்து டி.ஆரிடம் நீட்ட, நான் கொடுத்த அந்த கொலுசு வடிவ இதயத்தை (என்ன கற்பனைடா சாமி...) அந்த முந்தானையில் ஸ்டாப்ளர் அடித்தார். படம் ரிலீஸ் ஆனது. நாம் நறுக்கிக் கொடுத்த இதயம் குளோஸ்-அப்பில் வரும் என்ற கற்பனையோடு தியேட்டருக்கு போனால், கொலுசு வடிவ இதயமும் இல்லை, அந்த காட்சியும் இல்லை. படத்தில் இடம் பெறாத அந்த காட்சியால் நான் அறிந்து கொண்ட ஒரே விஷயம்,
டி.ஆர், பெண்களின் முந்தானையை பிடிப்பவரல்ல என்பதைதான்...!
Monday, April 26, 2010
இந்தச் சமயத்தில் இந்திய வரலாற்றிலும், ஜெயப்பிரகாசர் வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று, 1975_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கலை அழகும், சிற்ப சிறப்புகளும் கொண்ட தமிழ்நாட்டு கோவில்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இவற்றில் அமைந்துள்ள ராஜகோபுரங்கள் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றுவது போல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்காசியில் சிவத்தலங்களில் சிறப்பு மிக்க உலகம்மை _ காசிவிசுவநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ஆலயம் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
கோவிலை கட்டிய பராக்கிரமபாண்டியன் கோவில் குடமுழுக்கு விழா நடத்திய போது, ஒரு பாடலைப்பாடி அதனை கல்வெட்டாக அங்கே பதித்துள்ளார். "இந்த ஆலயம் காலத்தால் சிதைவு அடையுமானால், அந்த சிதைவுகளை அகற்றிச் செப்பம் செய்பவர்களின் திருவடி யில் விழுந்து வணங்குவேன்" என்று அப்பாடலில் பராக்கிரமபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு தலைவர் பா.சிவந்தி ஆதித்தன், காங்கிரஸ் தலைவர் மூப்பனார், புதுச்சேரி கவர்னர் சந்திராவதி, அறநிலையத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி
திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பக்த பிரமுகர் கிருபானந்தவாரியார், மூப்பனார் ஆகியோர் புகழாரம் சூட்டினார்கள். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் கிருபானந்தவாரியார் பேசும்போது கூறியதாவது:-
காங்கிரஸ் மாநாடு ஒன்றில் காமராஜருடன் சின்ன அண்ணாமலை. கவிஞர் கண்ணதாசனும் படத்தில் இருக்கிறார். சின்ன அண்ணாமலை இளம் வயது முதலே காங்கிரஸ் இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சின்ன அண்ணாமலையின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டை. அங்கு 1920_ம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார்.