Saturday, May 1, 2010

`தாதா' தொழில் அதிபர்- வக்கீல் கொடூர கொலை

பூந்தமல்லி கோர்ட்டுக்கு வந்தபோது மர்ம கும்பல் தாக்குதல்: `தாதா' தொழில் அதிபர்- வக்கீல் கொடூர கொலை

சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான திகில் நிறைந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பேசின் பிரிட்ஜ் நரசிம்ம நகர் 13-வது தெருவைச் சேர்ந்தவர் சின்னா என்ற சின்னகேசவலு (வயது 41). ரவுடிகள் உலகத்தில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியது. சாதாரணமாக கூலித்தொழிலாளியாக வாழ்ந்த இவர் பின்னர் ரவுடியாக மாறி தாதாவாக வளர்ந்து அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் புகுந்து பெரிய தொழில் அதிபர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு சென்னை தியாகராயநகர் பனகல் பார்க் அருகே நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மாம்பலம் போலீசார் இவரை முக்கிய குற்றவாளியாக சேர்த்தனர். இவரோடு இவரது நண்பர்கள் அப்பு, ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி, மாட்டு சேகர் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
பூந்தமல்லி பொடா கோர்ட்டில் நடந்த இவர்கள் மீதான வெடிகுண்டு வழக்கில் நேற்று தீர்ப்பு சொல்லப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். தீர்ப்பை கேட்பதற்காக சின்னகேசவலு தனது கூட்டாளிகள் அப்பு, ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி, மாட்டு சேகர் ஆகியோரோடு பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று காலை ஆஜர் ஆனார். தீர்ப்பு மாலையில் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறி விட்டார். இதனால் சாப்பிட்டு விட்டு வரலாம் என்று அனைவரும் கோர்ட்டை விட்டு வெளியில் வந்தனர்.
சின்னகேசவலு தனது வக்கீல்கள் சியாமளா, பகத்சிங் ஆகியோருடன் காரில் ஏறி அருகில் உள்ள குமணன் சாவடிக்கு வந்தனர். அங்கு ரோட்டு ஓரமாக உள்ள சந்தில் காரை நிறுத்தினார்கள். சின்னகேசவலுக்கு அவரது வீட்டில் இருந்து வந்த சாப்பாட்டை சின்னகேசவலு, வக்கீல் சியாமளா, இன்னொரு வக்கீல் பகத்சிங் ஆகிய 3 பேரும் காரில் உட்கார்ந்து சாப்பிட்டனர். காரின் பின்பக்க சீட்டில் வக்கீல் சியாமளா உட்கார்ந்திருந்தார். முன்பக்க சீட்டில் சின்னகேசவலு அமர்ந்திருந்தார். வக்கீல் பகத்சிங் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் 2 மணி இருக்கும்.
இந்த நேரத்தில் வேகமாக கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றது. அதில் 10-க்கும் மேற்பட்ட மர்ம ஆசாமிகள் இருந்தனர். கீழே இறங்கிய அவர்கள் மின்னல் வேகத்தில் வந்து காரில் இருந்த சின்னகேசவலுவை சரமாரியாக வெட்டினார்கள். அவர் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பிணமானார். பின் சீட்டில் இருந்த வக்கீல் சியாமளா இந்த கொடூர தாக்குதலை பார்த்து எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தார். வெளியில் நின்றிருந்த வக்கீல் பகத்சிங் கொலைவெறி கும்பலைச் சேர்ந்த கும்பலை பிடிக்க முற்பட்டார்.
இதனால் கொலைவெறி கும்பல் வக்கீல் பகத்சிங்கையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். மின்னல் வேகத்தில் கொலையாளிகள் அனைவரும் அவர்கள் வந்த காரில் மீண்டும் ஏறி தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்ததால் குமணன் சாவடி மற்றும் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டு விட்டது. வக்கீல் சியாமளா மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
சின்னகேசவலுவின் பிணம் கார் கதவில் தொங்கியபடி இருந்தது. வக்கீல் பகத்சிங் உயிர் பிழைக்க மாட்டார் என்ற நிலையில் சுருண்டு கிடந்தார். அவரது தலை உள்பட அனைத்து இடங்களிலும் வெட்டு பலமாக இருந்தது. அவரை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
தகவல் கிடைத்து புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட், அம்பத்தூர் துணை கமிஷனர் சமுத்திரபாண்டி, உதவி கமிஷனர்கள் ஜ×டு துரைப்பாண்டியன், ஜெயராஜ், குமாரவேல், இன்ஸ்பெக்டர்கள் சங்கர் சித்தார்த்ததாஸ், அழகு, அருள்சந்தோஷமுத்து மற்றும் போலீஸ் படையினர் விரைந்து வந்தனர்.
தொழில் அதிபர் சின்னகேசவலுவின் பிணம் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள சவக்கிடங்கில் பிணம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் பெண் வக்கீல் சியாமளா ஆகியோரிடம் கமிஷனர் ஜாங்கிட் விசாரணை நடத்தினார்.
சின்னகேசவலுவின் பரம விரோதிகள் யாராவது அவரை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொலை நடந்த காரில் கைரேகையை பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தெரிவித்தார்.
சிறைக்குள் தியானம் செய்ய நித்யானந்தாவுக்கு அனுமதி; சிறப்பு பூஜைகளும் நடத்தினார்

பாலியல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நித்யானந்தா சாமியாரை கர்நாடக போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து 8 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். நேற்று விசாரணை முடிந்தது.
நேற்று மாலை நித்யானந்தா மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். ராம்நகர் மாவட்ட நீதிபதி அவரை வரும் 13-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்தா ராம்நகர் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது அறையில் அவரது சீடர்களில் ஒருவரான நித்ய பக்தானந்தாவும் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அறைக்குள் தான் தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று கோர்ட்டில் நித்யானந்தா கேட்டார். அதை ஏற்று மாஜிஸ் திரேட்டு அனுமதி வழங்கினார்.
இதனால் இன்று காலை நீண்டநேரம் சிறை அறைக்குள் நித்யானந்தா தியானத்தில் ஈடுபட்டார்.
அறைக்குள் சிறப்பு பூஜைகள் நடத்தவும் நித்யானந்தாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பூஜை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஜெயிலில் எல்லோருக்கும் கொடுப்பது போன்ற உணவு வேண்டாம் என்று நித்யானந்தா மறுத்தார். காரம் இல்லாத சாதாரண உணவு மட்டுமே வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு ஏற்ப அவருக்கு உணவு கொடுக்கப்பட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நித்யானந்தா தன்னை ஜாமீனில் விடக்கோரி மனு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது அன்று தெரியவரும்.
இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு நித்யானந்தா நன்கு ஒத்துழைத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளாராம். சில சிக்கலான கேள்விகளுக்கு மட்டும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகி விட்டதாக கூறப்படுகிறது.
நித்யானந்தாவிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அனைவரும், நித்யானந்தா மிக மிக புத்திசாலியாக உள்ளார். அவரது சில பதில்கள் சிந்திக்க வைத்தன என்றனர்.
இவ்வளவு புத்திசாலியான நீங்கள் ஏன் புகார்கள் கூறப்பட்டதும் தலைமறைவாக இருந்தீர்கள்? என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்டாராம். அதற்கு நித்யானந்தா கூறுகையில், பத்திரிகை நிருபர்களை நினைத்து பயந்து விட்டேன். அவர்கள் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்பது புரியாததால்தான் தலை மறைவாக இருந்தேன் என்றார்.

orphan விமர்சனம் 18+ பதிவுக்கு அல்ல படத்திற்க்கு


2009ø Åó¾ ´Õ «Õ¨ÁÂ¡É ò¡¢øÄ÷ À¼õ , ¦Åà ·À÷Á¢¸(§¸ð¦¼), À£ð¼÷ …÷Š¸¡÷ð (ƒ¡ý),þó¾ ¾õÀ¾¢¸ÙìÌ þÕ ÌÆ󨾸û ´Õ ¬ñ(§¼É¢Âø) , ´Õ ¦Àñ (§ÁìŠ )À¢û¨Ç¸û , ãýȡž¡¸ À¢ÈìÌõ ÌÆó¨¾ þÈóÐ À¢È츢ÈÐ , þ¾É¡ø , «É¡¨¾ ¬„¢ÃÁò¾¢ø þÕóÐ ´Õ ¦Àñ ÌÆ󨾨Â(±Š¦¾÷) ¾òÐ ±ÎìÌÈ¡÷¸û , «¨Á¾¢Â¡É& «Æ¸¡É ÌÎõÀò¾¢ø «ì ÌÆó¨¾ ÀñÏõ «ð¼¸¡º§Á À¼õ...................

ãò¾ Á¸ý §¼É¢ÂøìÌ ±Š¦¾÷¨Ã Å£ðÎìÌû ѨÆó¾Ð ¦¾¡¼í¸¢ À¢Êì¸Å¢ø¨Ä, þÃñ¼¡ÅÐ ÌÆó¨¾ §ÁìŠ , þÅû ´Õ °¨Á ..þÅ÷¸û þÕÅÕõ ¿ýÀ÷¸Ç¡¸¢ Ţθ¢È¡÷¸û , ±Š¦¾÷ «¨½ò¾¢Öõ ÀÎ ÍðÊ¡¸ þÕ츢ȡû , À¼õ Ũþø «ÅÙìÌ À¢Êò¾Á¡É ´ýÚ....

±Š¦¾÷ Åó¾Ð Ó¾ø Å£ðÊø º¢Ú º¢Ú À¢Èɸû ±Æ ¦¾¡¼í̸¢ÈÐ, 13 ÅÂÐ ÌÆó¨¾Â¡É ±Š¦¾÷ ¦ºöÔõ ¦ºÂø¸û «¨Éò¾¢Öõ ´Õ Ó¾¢÷ ¦¾¡¢¸¢ÈÐ. þ¾üìÌ ¯îº¸¼Á¡¸ «Åû ¦Àü§È¡÷ ¯È× ¦¸¡ûÙõ §À¡Ð ¿ÎÅ¢ø ¦ºýÚ ÀÎôÀÐ , «Å÷¸û ¯È× ¦¸¡ûŨ¾ À¡÷ôÀÐ ±ýÚ ¿£ø¸¢ÈÐ...

´Õ ¸ð¼¾¢ø §¸ð¦¼×ìÌ þÅû §Áø ºó§¾¸õ Åà ¬ÃõÀ¢ò¾×¼ý À¼õ ÝÎ À¢ÊìÌÈÐ..........................

§¸ð§¼ þÚ¾¢Â¢ø ¾ý ÌÎõÀò¨¾ ±ôÀÊ ¸¡ôÀ¡üȢɡø ±ýÀ§¾ Á£¾¢ ¸¨¾.............

±Š¦¾÷ ´ùÅÕŨÃÔõ ¦¸¡øžüìÌ §À¡Îõ ôÇ¡ý & ¦¸¡ûÙõ Å¢¾õ À¾È ¨Å츢ÈÐ... ¾ý «ôÀ¡×¼§É «Åû ¯È× ¨ÅòÐ ¦¸¡ûÇ ¬¨º ÀðÎ «Åû ¿¼óÐ ¦¸¡ûéõ Å¢¾õ ±É À¼ò¾¢ø ú¢ì¸ ÜÊ ¸¡îº¢¸û «¾¢¸õ...

þÚ¾¢Â¢ø «ìÌÆó¨¾ Â¡÷ ±ýÚ ¦¾¡¢Ôõ §À¡Ð þÂìÌ¿÷ «¼ §À¡¼ ¨Å츢ȡ÷.......

ӾĢø ¦º¡ýÉÐ §À¡ø ´Õ «Õ¨ÁÂ¡É ¾¢¡¢øÄ÷ À¼õ ´÷·Àý.........

þÐ ±ýÛ¨¼Â Ó¾ø À¾¢× ... ¯í¸û ¬¾Ã×õ °ì¸ãõ ±¾¢÷§É¡ìÌõ ¯í¸û« ýÒ ¾õÀ¢.........

¯í¸û ´ð¨¼ ÁÈ측Áø þðΠŢðÎ ¦ºøÄ×õ.....

............................¿ýÈ¢.......................


Thursday, April 29, 2010

அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும

சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம். மனுசனாவும் இருந்துகிட்டு, நடிகனாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஆள பற்றி எழுதினா, படிக்கிற நடிகருங்களுக்கு 'பந்தா' பண்ணுற பழக்கம் விடுமே? அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள்! ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா! கர்...புர்...னு சைட்லே கேட்கிற சவுண்டுக்கெல்லாம் நாங்க மசியறதா இல்லை மக்களே...

எலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க "நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்!

நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட்! நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், "தொப்பைய கொறக்கலாமே?"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, "போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.

மழை பெஞ்சது தெரியாம, "தண்ணி லாரி புட்டுகிச்சா? ஒரே ஈரமா இருக்கே"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க? அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. "இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.

"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, "இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு? என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக "இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா? கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே? இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். "அப்பிடியா, தேங்ஸ்"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.

அந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.

நார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே "பேர் பொருத்தம் பெஸ்ட்"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)

போனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.

சம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, "சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்?

அடுத்த பதிவிலே சொல்றேனே? முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்!

அர்த்த ராத்திரியில் அல்டிமேட் ஸ்டார்...


கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு. ஆனா, ஏகன் மாதிரியே 'போங்கடிச்சிட்டாரு' அந்த ஏகனோட ஃபிரண்டு! விக்ரமாதித்யன் வேதாளத்துக்கு கதை சொன்ன மாதிரி, ஓரம் எது? உட்புறம் எதுன்னே புரியாம ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டேன்ல, ஸாரி பிரண்ட்ஸ். இது அல்டிமேட் ஸ்டார் பற்றிய ஒரு அல்டிமேட்டான விஷயம்!

ரொம்ப நாளாவே அஜீத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதனும்னு ஆச எனக்கு. அவரிடம் கேட்டா, "வேணாம் பாஸ். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லே(?)ம்"பாரு. அதனால அவருக்கு நெருக்கமான ஆளுங்களை பிடிச்சு விஷயத்தை கறந்திரலாம்னு ஐடியா. இந்த பதிவு முழுக்க முழுக்க சினிமாவுக்கு அப்பாற்பட்டதா இருக்கணும்னு நினைச்சதாலே, அவரோட மேனேஜர் சுரேஷ் சந்திரா, பிஆர்ஓ வி.கே.சுந்தர் ரெண்டு பேரையும் விட்டுட்டு மூணாவதா ஒரு ஆளை பிடிச்சேன். பிரதாப்!

அஜீத் நாயர்னா, பிரதாப் டீக்கடை! அஜீத் ரகசியான்னா, பிரதாப் பிட்டு துணி! இப்படி ரெண்டு பேரோட நெருக்கம், ரொம்ப சுருக்கமானது. பிரதாப்பை நேரடியா மீட் பண்ணிடலாம். ஆனா மனுசன் பேசணுமே? அந்த நேரத்திலேதான் செந்தில் சொன்னாரு. "ஏங்க, அவனும் நானும் ஒன்னா படிச்சவன்ய்ங்க தெரியுமா? வாங்க, நான் கூட்டிட்டு போறேன்..." சைட் அடிக்க போன பிகர், சந்துக்குள்ளே சிக்குனா எப்படியிருக்குமோ, அப்பிடியிருந்துச்சு எனக்கு!

சாப்டுகிட்டே பேசலாம்னாரு பிரதாப். வந்தது சிக்கன் பிரியாணி. கடைவாயிலே தள்ளி, 'தொட' கறிய ருசிக்கிற வரைக்கும் கூட நெனச்சேன், இந்த சந்திப்பு நமக்கு நிறைய சங்கதியை தரும்னு.

"பிரதாப், ஒன்னுமில்லே. அஜீத் சார பற்றி ஒரு புத்தகம் எழுதலாம்னு. அவரை பற்றி நிறைய விஷயங்களை, ஜனங்களுக்கு தெரியாத இன்னொரு ஏரியாவ சொல்லணும். மொதல்ல அவரு எப்படிப்பட்ட டைப்? பொதுவா சினிமா ஹீரோங்க வெளியே நடிப்பாங்க. உள்ளே பார்த்தா வேற மாதிரி இருப்பாங்க. சொல்லுங்க"ன்னேன்.

"அவர பத்தி என்னத்த சொல்றது. அவரு இதெல்லாம் லைக் பண்ண மாட்டாரே? அவரு உண்டு அவரு வேல உண்டுன்னு இருப்பாரு"

அப்புறம்...?

"அப்புறம் அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே, ம்ம்ம்... வேற விஷயங்களுக்கு போக மாட்டாரு. ஷ§ட்டிங் முடிஞ்சா வீட்டுக்கு வந்திருவாரு. அப்புறம்ம்ம்ம்ம்ம்ம்... ம் என்னத்தை சொல்றது? அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே" இதை பிரதாப் சொல்லி முடிப்பதற்குள் நான் பாதி பிளேட் பிரியாணியை காலி பண்ணியிருந்தேன். மனுஷன்கிட்டே ஒன்னுமே பேராது போலிருக்கேன்னு நினைச்சுகிட்டே, அவருக்கு ஏராளமான ரசிகருங்க இருக்காங்க. அவங்களோட அன்பையும் வெறித்தனமான காதலையும் வேற மாதிரி யூஸ் பண்ற ஐடியா இருக்கா தலைவருக்கு? "வேற மாரின்னா...?" அதாங்க, அரசியல் அப்பிடி இப்பிடின்னு... "அப்பிடியா, இது பத்தி நான் என்னத்தை சொல்றது? அவரு மனசிலே... இப்ப எதுவும்... டேய், செந்திலு. சாரு என்னடா என்னென்னவோ கேக்குறாரு?" ஒரே மூச்சில் ஒரு பாட்டில் ஐஸ் வாட்டரை காலி பண்ணியது பார்ட்டி!

"சரி, விடுங்க. உங்களுக்கே நான் எழுதற மாதிரி ஏதாவது தோணும் இல்லையா? அத சொல்லுங்க போதும்"னேன். இப்போ கொஞ்சம் உயிர் வந்திச்சு பிரதாப்புக்கு. "இல்லைங்க, அவருக்கு? எதுக்கு சொல்றேன்னா? அது வந்து"ன்னு ஆரம்பிச்சவரு, எழுத்துக்கூட்டி இன்சால்மென்ட்லே சொன்னதை, ஒரே மூச்சில் எழுதிடறேன். நிஜமாகவே அல்டிமேட் அல்டிமேட்தான்!

"அஜீத் சார் பென்ஸ் காரே வச்சிருந்தாலும், என் கார்லதான் வர ஆசைப்படுவார். (டாடா இன்டிகாம்) ஏன்னா, என் கார்ல டேப் இல்லை. அத பிரிச்சு போட சொன்னதே அவருதான். கார்லே போகும் போது அமைதியா போகணும். அதுதான் பிடிக்கும் அவருக்கு. அது மட்டுமில்லே, காரை நான் ஓட்ட ஜன்னல் வழியா இந்த ஊரு உலகத்தை, கடைத் தெருவை ஒரு குழந்தை மாதிரி ரசிச்சிட்டு வருவார். அப்படி ஒருமுறை ராத்திரி பதினொரு மணி இருக்கும். கிளம்பிட்டோம். ஈசிஆர்ல இருக்கிற அவரு வீட்டுல இருந்து பாண்டி பஜார் நோக்கி வந்திட்டு இருந்தோம். அன்னிக்கு பார்த்து செம ஜாலி மூடு அவருக்கு. நள்ளிரவு பனிரெண்டு தாண்டிருச்சு. அப்படியே வள்ளுவர் கோட்டம் வழியா பீச் ரோடை புடிச்சு வீட்டுக்கு போயிரலாமான்னாரு. சரின்னு சொல்லி வண்டியை கண்ணதாசன் சிலைகிட்டே திருப்பினேன்... வண்டி ஆஃப்!"

"சாவியை திருப்பி திருப்பி போட்டாலும், ஒரு இன்ஞ் நகலே வண்டி. பெட்ரோல் இருக்கான்னு கூட பார்க்காம வண்டியை கிளப்பியிருக்கேன். இப்போ என்னா பண்றது? "வண்டியிலேயே இருக்கீங்களா, போய் ஏதாவது காலி கேன்லே பெட்ரோல் வாங்கிட்டு வந்திர்றேன்"னு கேட்க, "அட, விட்றா. இப்போ பாரு"ன்னு காரிலேர்ந்து கீழே இறங்குனாரு. ஸ்டியரிங்கை புடின்னு சொல்லிட்டு அப்படியே வண்டிய தள்ள ஆரம்பிச்சாரு. பதறி போன நான், "அட இதென்ன வேண்டாத வேலை. நான் தள்றேன். நீங்க ஸ்டியரிங்கை புடிங்க"ன்னேன். "அட விட்றா. இப்படி வண்டிய தள்ளி ரொம்ப நாளாச்சு"ன்னவரு, அங்கிருந்து வாணி மஹால் வரைக்கும் தள்ளிகிட்டே வந்தாரு. (சுமார் அரை கி.மீ) நல்லவேளை, அவரு குனிஞ்சுகிட்டே வண்டிய தள்ளியதாலே கிராஸ் பண்ணி முன்னாடி போன யாரும் கண்டுக்கலே"

"வீட்லே வந்து போட்டு குடுத்திருவாரோன்னு பயம். ஏன்னா, அவர போயி வண்டிய தள்ள விட்டியான்னு எனக்குதானே டோஸ் கொடுப்பாங்க மேடம்? சொல்லவே இல்லை அவரு. இப்போ நீங்க எழுதி, "ஆமா... புக் எப்போ வருது?"ன்னாரு பிரதாப்!

"இது மாதிரி இன்னும் நிறைய சொல்லுங்க. அப்புறம் எல்லாத்தையும் சேர்த்து ஒன்னா போடலாம்"னேன். "அப்பிடியா... நான் என்னத்தை சொல்றது?"ன்னு வேதாளம் முருங்கை மரத்தை பார்க்க, "யோசிச்சு வைங்க. வர்றேன்"னு கிளம்பினேன். ஆறு மாசம் விடாம அலைஞ்சா, தல பற்றி ஒரு புக் தேறும்னு நினைக்கிறேன்.

தேறுங்ம்கிறீங்க...?
.............................................நன்றி அந்தனன்........................................

கொலுசு வடிவ இதயமும்....கோபித்துக் கொண்ட டி.ஆரும்!


மனைவி கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு போவது போல காட்சி. (படத்தின் பெயர் நினைவில் இல்லை) தடுக்க வேண்டிய கணவர் இடத்தில் நம்ம டி.ராஜேந்தர்! வேறு ஹீரோவாக இருந்தால் கட்டிப்பிடித்து ஒரு இச்! அல்லது சேலை தலைப்பை பிடிச்சு இழுத்து, ÔபோவாதேÕ என்று ஒரு கெஞ்சல்! ஆனால் நம்ம ஆளு எப்பவுமே மூணாவது ரகம் ஆச்சே? இரண்டு கைகளையும் விரித்து, மறித்துக் கொண்டு ஒரு கபடி டோர்னமென்ட்டே நடத்துவார். அதையும் மீறி கை இடுக்கில் நுழைந்து(?) ஹீரோயின் வெளியேற, ஒரு நீண்ட அழுகாச்சி பாடலோடு துவங்கும் அந்த காட்சி...

யோவ்... கதாநாயகிய தொடக் கூடாதுங்கறதை நான் என்னோட பாலிசியா வச்சிருக்கேன். வேற எவனுக்காவது சினிமாவுலே இந்த தில் இருக்கா, சொல்ல சொல்லு பார்ப்பம்Õ என்பார் அடிக்கடி! இந்த யோவ்... நீங்களும் நானும் அல்ல. ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரி!

மும்தாஜோடு இவர் நடிக்கும் காட்சியை வீட்டிலேயே படமாக்கிக் கொண்டிருந்தார். (வீடே ஏவிஎம் ஃபுளோர் மாதிரிதான் இருக்கும். அவ்வளவு பெரிசு) வேடிக்கை என்னவென்றால் (தனியாக ஒன்று இருக்கிறதா என்ன, ஒட்டுமொத்தமும் வேடிக்கைதான்!) இவர் ஊரிலுள்ள கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி அசிஸ்டென்டுகளை திட்டிக் கொண்டிருப்பார். லாங்குவேஜ் புரியாத காரணத்தாலேயே டைரக்டரின் அங்க அசைவுகளை ரசித்துக் கொண்டிருப்பார் மும்தாஜ். பல நேரங்களில் இவர் நேரடியாக மும்தாஜையே திட்டி தீர்க்கும்போதும், அந்த புன்னகை மாறாமல் நிற்கும் பொண்ணு!

அன்றைய காட்சி என்ன என்பது தெரியவில்லை. அதுவும் அவருக்கு மட்டும்தான் தெரியும். இதய வடிவில் ஒரு கொலுசு படம் வரைந்து அதை மும்தாஜின் முந்தானையில் ஸ்டாப்ளர் அடிக்க நினைத்திருப்பார் போலிருக்கிறது. என்னிடம் திரும்பி, Ôகொலுசு வடிவத்தில் ஒரு இதயத்தை பேப்பரில் நறுக்கிக் கொடுங்கÕ என்றார். எடிட்டோரியல் வேலையை விட்டுவிட்டு ஷ§ட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதால் இந்த வேலை கொடுக்கப்பட்டது எனக்கு! நானும் அவர் சொன்னபடியே (ஊரிலுள்ள கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு) நறுக்கிக் கொடுத்தேன்.

சட்டென்று திரும்பி அவரது அசிஸ்டென்ட் ஒருவரிடம், அத எட்றா என்றார். எது என்று சொன்னால்தானே அவர் எடுப்பார், பாவம்! அவர் கீழே குனிந்து பேந்த பேந்த முழிக்க, பொட்டேர் என்று விழுந்தது அவரது பிடறியில்! அறைந்தது டி.ஆர்தான்! மிக சமீபமாக நின்று கொண்டிருந்த மும்தாஜ் இதற்கு ஒரு சின்ன அதிர்ச்சியாவது காட்ட வேண்டுமே? தினமும் இதுபோல நிறைய பார்த்திருப்பார் போலும்! அப்படியே நின்று கொண்டிருந்தார். அந்த முந்தானையை எட்றா. ஒரு பொண்ணு முந்தானைய தொடக் கூடாதுன்னு பார்க்கிறேன். புரிஞ்சுக்க மாட்றீங்களே என்றார் டி.ஆர்.

அந்த அசிஸ்டென்ட் ஒரு கையால் பிடறியை தடவிக் கொண்டே இன்னொரு கையால் மும்தாஜின் முந்தானையை பிடித்து டி.ஆரிடம் நீட்ட, நான் கொடுத்த அந்த கொலுசு வடிவ இதயத்தை (என்ன கற்பனைடா சாமி...) அந்த முந்தானையில் ஸ்டாப்ளர் அடித்தார். படம் ரிலீஸ் ஆனது. நாம் நறுக்கிக் கொடுத்த இதயம் குளோஸ்-அப்பில் வரும் என்ற கற்பனையோடு தியேட்டருக்கு போனால், கொலுசு வடிவ இதயமும் இல்லை, அந்த காட்சியும் இல்லை. படத்தில் இடம் பெறாத அந்த காட்சியால் நான் அறிந்து கொண்ட ஒரே விஷயம்,

டி.ஆர், பெண்களின் முந்தானையை பிடிப்பவரல்ல என்பதைதான்...!

Monday, April 26, 2010

"இந்திரா காந்தியை தோற்கடிப்பேன்" சபதத்தை நிறைவேற்றிய ஜெயப்பிரகாசர்
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர், மகாத்மாகாந்தியிடமும், பண்டித நேருவிடமும் பற்றும் பாசமும் கொண்டவர். அப்படியிருந்தும் இந்திராகாந்தி "நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார். பொங்கி எழுந்தார். 30 ஆண்டு காலம் டெல்லியில் தொடர்ந்து ஆட்சி நடத்திய காங்கிரசைப் பதவியை விட்டு அகற்றி, எதிர்க்கட்சியினரை ஆட்சியில் அமர்த்தினார். அவர் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
உத்தரபிரதேசம் _ பீகார் எல்லையில் உள்ள பலார்லானி என்ற கிராமத்தில் 1902 அக்டோபர் 11_ந்தேதி ஜெயப்பிரகாசர் பிறந்தார். தந்தை பெயர் ஹப்சுத்பால், தாயார் பெயர் புல்ராணி. இளமையில் மிகவும் சாதுவானவராக ஜெயப்பிரகாசர் விளங்கினார். பள்ளியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேறியதால், உபகாரச்சம்பளம் கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போது, காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் எழுதிய கட்டுரைகளையும் படித்தார். அவை அவரைக் கவர்ந்தன.
ஜெயப்பிரகாசருக்கு 18 வயது ஆனபோது, அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் பிரபாவதிதேவி. பின்னர் பிரபாவதியின் தங்கைக்கும், காங்கிரசின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர பிரசாத்தின் மகனுக் கும் திருமணம் நடந்தது.
ராஜேந்திரபிரசாத்தின் உறவு காரணமாக, ஜெயப்பிரகாசரின் அரசியல் ஆர்வம் மேலும் வளர்ந்தது.
ஜெயப்பிரகாசருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகியிருந்தது. காந்தியடிகள் "ஒத்துழையாமை" இயக்கத்தை தொடங்கினார். அதனால் அவர் கல்லூரியை விட்டு விலகினார். பின்னர் இந்திய முறையில் கல்வி கற்பிக்கும் பீகார் வித்யா பீடத்தில் சேர்ந்து படித்து "இண்டர் மீடியட்" பரீட்சையில் தேறினார்.
இந்தச் சமயத்தில் அமெரிக்கா பற்றிய சில புத்தகங்களைப் படித்தார். அங்கு பல மாணவர்கள் வேலை செய்து கொண்டே மேல்படிப்பு படிப்பதாக அறிந்தார். அதனால் அமெரிக்காவுக்குச் சென்று உயர் கல்வி கற்க விரும்பினார்.
இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனினும், பெற்றோருக்கும், மனைவிக்கும் கூடத் தெரியாதபடி, "பாஸ்போர்ட்", "விசா" வாங்கினார். அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, மனைவியிடம் மட்டும் விஷயத்தைச் சொன்னார்.
கல்வி கற்பதில் கணவருக்கு உள்ள ஆர்வத்தைக்கண்ட பிரபாவதி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. "நீங்கள் அமெரிக்கா போய் வாருங்கள். நீங்கள் திரும்பி வரும் வரை, நான் காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருக்கிறேன்" என்றார்.
1922_ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 16_ந்தேதி கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு பயணமானார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை அடைந்தார். அங்கு இந்திய மாணவர்களுடன் தங்கினார். பழத்தோட்டங்களில் வேலை பார்த்தார். இரவும் பகலுமாக உழைத்தார். தேவையான பணம் சேர்ந்தது. கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
"பி.ஏ." பட்டம் பெற்றபின், உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தது. வேலை பார்த்துக்கொண்டே "எம்.ஏ." படித்துப் பட்டம் பெற்றார்.
"டாக்டர்" பட்டம் பெறுவதற்கு படிக்க விரும்பினார். இந்த நிலையில் அவர் தாயார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கடிதம் வந்தது. எனவே, மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.
பெற்றோரையும், மனைவியையும் 7 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தார், ஜெயப்பிரகாசர். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தனர். காந்திஜியைச் சந்திக்க விரும்பிய ஜெயப்பிரகாசர், மனைவியுடன் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார்.
காந்தியின் அன்பில் மனம் நெகிழ்ந்து ஜெயப்பிரகாசர் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். இந்தச் சமயத்தில், லாகூரில் காங்கிரஸ் மாநாடு நேரு தலைமையில் நடந்தது. அப்போது நேருவிடம் ஜெயப்பிரகாசரைக் காந்தி அறிமுகம் செய்து வைத்தார். நேருவும், ஜெயப்பிரகாசரும் நண்பர்கள் ஆனார்கள்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசத்துக்கு உழைக்க விரும்புவதாக நேருவிடம் ஜெயப்பிரகாசர் தெரிவித்தார். நேரு மகிழ்ச்சி அடைந்தார். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் செயலாளராக அவரை நியமித்தார்.
காங்கிரஸ் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற ஜெயப்பிரகாசர் சோசலிசக் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டார். 1933_ம் ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த பின், காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவாக "காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி" என்ற அமைப்பை நிறுவினார்.
மூன்று ஆண்டுகள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, சோசலிசக் கருத்துக்களைப் பரப்பினார். 1940_ம் ஆண்டு பிப்ரவரியில், அரசுக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டி ஜெயப்பிரகாசரைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. பல மாதங்கள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ஜெயப்பிரகாசர், "இனி போலீஸ் கையில் சிக்காமல் மாறு வேடத்தில் சுற்றுப்பயணம் செய்யவேண்டும். மக்களை புரட்சிக்குத் தூண்டவேண்டும்" என்று தீர் மானித்தார். அதன்படியே பல ஊர்களுக்கு மாறுவேடத்தில் சென்றார். ஆனால் போலீசார் அவரைக் கண்காணித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1942_ல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை காந்தியடிகள் தொடங்கினார். காந்தியும், மற்ற தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயப்பிரகாசர் உள்ளம் துடித்தது. சிறையில் இருந்து தப்பி, மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய "கொரில்லாப்படை" அமைக்கத் தீர்மானித்தார். அதன்படி, அவரும் மற்றும் 5 பேரும் சிறையில் இருந்து தப்பிச் சென்றார்கள். ஜெயப்பிரகாசர் நேபாள நாட்டுக்குச் சென்றார். வெள்ளையர்களை எதிர்த்துப் போராட காங்கிரஸ் தொண்டர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார்.
ஜெயப்பிரகாசரைப் பிடிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. முடியவில்லை. இதனால், ஜெயப்பிரகாசரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஜெயப்பிரகாசரின் புகைப்படங்களை நேபாள போலீசுக்கு பிரிட்டிஷ் அரசு அனுப்பி, அவரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு கூறியது. படங்களின் உதவியால் ஜெயப்பிரகாசரை நேபாள போலீசார் கைது செய்து, காவலில் வைத்தனர்.
ஜெயப்பிரகாசரிடம் போர்ப் பயிற்சி பெற்ற தொண்டர்கள், சிறைக்காவலாளிகளைத் தாக்கி, ஜெயப்பிரகாசரை விடுவித்தனர். ஜெயப்பிரகாசரும், மற்றவர்களும் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் தாண்டி, வங்காளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அதன் பிறகும் ஜெயப்பிரகாசர் ஓயவில்லை. மாறு வேடத்தில் பல இடங்களுக்குச் சென்று, மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இந்நிலையில், அவர் டெல்லியிலிருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மாறுவேடத்தில் சென்றபோது, போலீசார் அவரை அடையாளம் கண்டுகொண்டு கைது செய்தனர். அவரைக் கால வரம்பு இன்றி சிறை வைக்கும்படி பிரிட் டிஷ் அரசு உத்தரவிட்டது.
1945_ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொழில் கட்சி பதவிக்கு வந்தபின், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது பற்றிக் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாசர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் அமைக்கவேண்டும் என்ற ஜின்னாவின் கோரிக்கையை, ஜெயப்பிரகாசர் எதிர்த்தார். முடிவில், பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்த போது, ஜெயப்பிரகாசரின் "காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி", காங்கிரசை விட்டு விலகியது. கட்சியின் பெயரையும் "சோசலிஸ்ட் கட்சி" என்று ஜெயப்பிரகாசர் மாற்றினார்.
சோசலிசக் கொள்கையை பரப்பி வந்த ஜெயப்பிரகாசர், 1951_ல் வினோபா தொடங்கிய பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1954_ம் ஆண்டு ஏப்ரல் 14_ந்தேதி சர்வோதய மாநாடு வினோபா தலைமையில், கயாவில் போதி மரத்தடியில் நடந்தது. மாநாட்டுக்கு நேரு, ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், கிருபளானி ஆகிய தலைவர்களும் வந்திருந்தனர்.
இந்த மாநாட்டில் ஜெயப்பிரகாசர், தான் அரசியலில் இருந்து விலகி, பூமிதான இயக்கத்திற்காக வாழ்நாளை அர்ப்பணிக்க முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார்.
1973_ம் ஆண்டு ஏப்ரல் 15_ந்தேதி ஜெயப்பிரகாசரின் மனைவி பிரபாவதி காலமானார். மனைவியை இழந்த ஜெயப்பிரகாசர் சோகமே உருவானார். அவர் உடல் நிலை சீர்கேடு அடைந்தது.

இந்தச் சமயத்தில் இந்திய வரலாற்றிலும், ஜெயப்பிரகாசர் வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று, 1975_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை ஏற்று, இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று ஜெயப்பிரகாசர் கூறினார். ஜுன் 25_ந்தேதி டெல்லியில் ஜனதா அணியின் சார்பில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரகாசர் பேசுகையில், "இந்திரா காந்தி இன்னும் பதவி விலகாமல் இருக்கிறார். அவர் தலைமையில் உள்ள அரசு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அந்த அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வரி கொடுக்கக்கூடாது. இந்திரா காந்தி விலகவேண்டும் என்று இந்தியா முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாசர், மொரார்ஜி தேசாய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் (ஜுன் 26_ந்தேதி) இந்தியா முழுவதும் "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. ஜெயப்பிரகாசர் உடல் நிலை ஏற்கனவே சீர்கெட்டிருந்தது. அதனால் அவர் சண்டிகார் ஆஸ்பத்திரியில் சிறை வைக்கப்பட்டார். அவரைச் சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அவர் உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால், பம்பாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதாக அறிவித்தனர். அது முதல் ஜெயப்பிரகாசர் அவ்வப்போது "டயாலிசிஸ்" முறை மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கொண்டு உயிர் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
"விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்" என்று இந்திரா காந்தி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஜெயப்பிரகாசரும் மற்ற தலைவர்களும் 19 மாத சிறை வாசத்துக்குப்பின் விடுதலை செய்யப்பட்டனர்.
"வருகிற தேர்தலில், இந்திராகாந்தியையும், காங்கிரசையும் தோற்கடிப்பேன்" என்று சபதம் செய்தார், ஜெயப்பிரகாசர். ëஅவர் தெரிவித்த யோசனையின் பேரில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தன. "ஜனதா கட்சி" என்ற புதிய கட்சி உதயமாயிற்று.
உடல் நலம் குன்றியிருந்த போதிலும், ஜெயப்பிரகாசர் காங்கிரசை எதிர்த்துப் பல கூட்டங்களில் பேசினார். ஜெயப்பிரகாசரின் அயராத முயற்சி வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
மத்தியில் 30 ஆண்டுகள் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்து, ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். தன் சபதத்தை நிறைவேற்றிய பெருமிதத்துடன், 1979 அக்டோபர் 8_ந்தேதி "லோக்நாயக்" ஜெயப்பிரகாசர் காலமானார்.
தென்காசி கோவில் ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்தது

தீக்கோளினால் சிதைந்த தென்காசி கோவில் ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்தது கும்பாபிஷேக விழாவில் 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர் தீக்கோளினால் இரண்டாகப் பிளந்து சிதைந்து போன தென்காசி கோவில் கோபுரம் 178 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

கலை அழகும், சிற்ப சிறப்புகளும் கொண்ட தமிழ்நாட்டு கோவில்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இவற்றில் அமைந்துள்ள ராஜகோபுரங்கள் பழந்தமிழர் பெருமையை பறைசாற்றுவது போல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.
அதிலும் சென்ற 20_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட தென்காசி உலகம்மை _ காசிவிசுவநாதர் கோவில் ராஜகோபுரம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் ஆகியவை தமிழன் பெருமையை இந்தியாவில் _ ஏன், அகில உலகமும் போற்றிப் புகழும் வண்ணம் விண்ணை முட்டும் வகையில் கம்பீரமாக காட்சி தருகின்றன.
நெல்லை மாவட்டம் தென்காசி, சிற்றாறு நதிக்கரையில் நெற்களஞ்சியம் சூழ அமைந்த அழகிய நகரம். சுற்றுலா பயணிகள் உள்ளங்களை குளிர வைக்கும் குற்றாலத்துக்கு இந்த தென்காசி நகரை தாண்டித்தான் செல்லவேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்காசியில் சிவத்தலங்களில் சிறப்பு மிக்க உலகம்மை _ காசிவிசுவநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ஆலயம் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த பராக்கிரமபாண்டியன் என்ற மாமன்னன் கண்ட கனவினால் இக்கோவில் தோன்றியது. மன்னன் கனவில் விசுவநாதரே வந்து காசியில் உள்ள கோவில் சிதைவுற்று இருப்பதாக சொல்ல மன்னன் இக்கோவிலை கட்டினான் என்பது வரலாறு.
இந்த தென்காசி திருத்தலத்தை, 1429_ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1446_ல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த கோவி லுக்கு 9 நிலை கொண்ட ராஜகோபுரத்தை மன்னன் பராக்கிரம பாண்டியன் கட்ட விரும்பி 1456_ல் அந்த பணியை தொடங்கினான். 50 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பணி 1505_ல் முடிந்தது.
தென்காசி நகருக்கே அணிகலனாய் விளங்கிய திருக்கோவிலின் ராஜகோபுரம், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீக்கோளினால் சிதைந்து, கல்காரத்திற்கு மேலுள்ள கோபுரம் இரண்டாகப் பிளந்து விட்டது.

கோவிலை கட்டிய பராக்கிரமபாண்டியன் கோவில் குடமுழுக்கு விழா நடத்திய போது, ஒரு பாடலைப்பாடி அதனை கல்வெட்டாக அங்கே பதித்துள்ளார். "இந்த ஆலயம் காலத்தால் சிதைவு அடையுமானால், அந்த சிதைவுகளை அகற்றிச் செப்பம் செய்பவர்களின் திருவடி யில் விழுந்து வணங்குவேன்" என்று அப்பாடலில் பராக்கிரமபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி இருந்தும் களை இழந்து நின்ற ராஜகோபுரத்தை புதுப்பித்துக்கட்ட யாராலும் முடியவில்லை. பல முறை திருப்பணி குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனாலும் முயற்சி ஈடேறவில்லை. 1963_ம் ஆண்டு "தமிழவேள்" சர் பி.டி.ராஜன் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, கல்காரத்துக்கு மேல் இருந்த சிதைந்த கோபுரத்தை அகற்றியது. அதன் பிறகு பணி தொடர முடியாமல் போயிற்று.
அதன் பிறகு, 18 ஆண்டு காலம் கழித்து, 1981_ம் ஆண்டு ராஜகோபுரத்தைக் கட்டுவதற்கு முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அமைந்த தமிழக அரசு முயற்சி எடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆலோசனை பேரில் அந்தப் பொறுப்பு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலின் திருப்பணிக்குழு தலைவராக அவர் பொறுப்பு ஏற்றார்.
28_11_1984 அன்று ராஜகோபுர பணியை தொடங்கினார். பராக்கிரமபாண்டியன் 50 ஆண்டுகளாக கட்டிய ராஜகோபு ரத்தை 6 ஆண்டுகளில் கட்டி முடித்தார். முதல் நிலை மற்றும் 9_ம் நிலைகளை கட்டி முடிக்கும் செலவுகளை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் ஏற்றார். 2 முதல் 7 வரையுள்ள 6 நிலைகளும் தமிழ்நாட்டின் மற்ற திருக்கோவில்கள் வழங்கிய நிதியை கொண்டு கட்டி முடிக்கப்பட்டன. 8_வது நிலைக்கு நாடார் சமூகத்தினர் நிதி வழங்கி திருப்பணியை நிறைவேற்ற உதவினார்கள். இவ்வாறு ரூ.1 கோடி செலவில், 178 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்தது.
இந்தியாவில் 25 கோபுரங்களை அமைத்தவரும், அமெரிக்காவில் மீனாட்சி கோவில், வெங்கடேஸ்வரர் கோவில், கணேசர் கோவில், லெட்சுமி கோவில் ஆகியவற்றை உருவாக்கியவருமான "சிற்ப கலாமணி" எம்.முத்தையா ஸ்தபதி இக்கோபுரத்தை எழிலுற அமைத்தார்.
தென்காசி காசிவிசுவநாதசுவாமி ராஜகோபுர குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) 25_6_1990 அன்று காலை சிறப்பாக நடந்தது. விழாவுக்கு அன்றைய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி தலைமை தாங்கினார். பா.சிவந்தி ஆதித்தன் வரவேற்று பேசினார்.
புதுச்சேரி கவர்னர் சந்திராவதி, அமைச்சர் தங்கவேலு, காங்கிரஸ் தலைவர் மூப்பனார், முன்னாள் மத்திய மந்திரி அருணாசலம், முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன், தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி, ஜெயந்தி நடராஜன் எம்.பி, எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
கும்பாபிஷேக விழாவை காண சிறப்பு அழைப்பாளர்கள் அமர்வதற்காக ராஜகோபுரத்தின் அருகில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து நிகழ்ச்சியை பார்த்தார்கள்.
சரியாக காலை 10_15 மணிக்கு கோபுர உச்சியில் உள்ள கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். அதே நேரத்தில் கோவில் வளாகத்தில் அமைந்த மற்ற சுவாமி சன்னதி விமானங்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. திருப்புகலூர் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையில் 120 சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை செய்தார்கள்.
ராஜகோபுர கும்பாபிஷேக விழா நிறை வடைந்ததும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலை அரங்கில் திருப்பணி நிறைவு விழாவும், மலர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. தென்காசி பொதுமக்கள் சார்பில் சிவந்தி ஆதித்தனுக்கு 9 நிலை ராஜகோபுரத்தை கட்டியதை குறிக்கும் வகையில் 9 பவுன் தங்கச்சங்கிலியும், "இரண்டாம் அரிகேசரி பராக்கிரமபாண்டியன்" என்ற பட்டமும் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேக விழா இயல்_இசை நாடகம், கவியரங்கம் நிகழ்ச்சிகளுடன் 4 நாட்கள் நடைபெற்றது. கும்பாபிஷேகத் துக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் விடப்பட்டன. 6 லட்சம் பக்தர்கள் விழாவை நேரில் கண்டு களித்து காசி விசுவநாதரை தரிசித்தனர்.

தென்காசி ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக்குழு தலைவர் பா.சிவந்தி ஆதித்தன், காங்கிரஸ் தலைவர் மூப்பனார், புதுச்சேரி கவர்னர் சந்திராவதி, அறநிலையத்துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி
திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பக்த பிரமுகர் கிருபானந்தவாரியார், மூப்பனார் ஆகியோர் புகழாரம் சூட்டினார்கள். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கவியரங்கத்தில் கிருபானந்தவாரியார் பேசும்போது கூறியதாவது:-
"பராக்கிரமபாண்டியனால் கட்டப்பட்டு தீக்கோளினால் சிதைந்த இந்த கோபுரத்தை, சிவந்தி ஆதித்தன் கட்டி முடித்துள்ளார். இதுவரை யாரும் செய்யாத திருப்பணி இது. இந்த ராஜகோபுரம் உள்ளவரை சிவந்தி ஆதித்தன் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் கோபுரத்தை வணங்கும்போது கட்டியவருக்கு புண்ணியம் கிடைக்கும்."
இவ்வாறு கிருபானந்தவாரியார் கூறினார்.
ராஜகோபுரத்தின் உச்சியில் 11 கலசங்கள் எழிலுற காட்சி தருகின்றன. கோபுரத்தின் மீது ஏறி தென்காசி நகரையும், குற்றாலம் அருவியையும், சுற்றுப்புற சூழலையும் கண்டுகளிக்க 9_வது நிலையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது.
14 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இக்கோவிலுக்கு மீண்டும் திருப்பணி செய்ய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் தலைமையில் திருப்பணிக்குழுவை அரசு அமைத்துள்ளது. ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த குழு முடிவெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவில் திருப்பணி 29_8_2004 அன்று தொடங்கியது.
மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம்
மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம் குடம் குடமாக தண்ணீர் ஊற்றியதால் மூச்சு திணறி உயிர் பிரிந்தது
மேடைகளில் சிரிக்க சிரிக்க நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராக விளங்கிய சின்ன அண்ணாமலை, அவருடைய 60_வது பிறந்த நாள் விழாவின்போது ("மணி விழா") அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கும் வகையில் மரணம் அடைந்தார்.
பழம் பெரும் காங்கிரஸ்காரரும், சுதந்திர போராட்ட வீரருமான சின்ன அண்ணாமலை, ராஜாஜியின் சீடர்; நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வலதுகரமாக திகழ்ந்தார். அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்தார்.

காங்கிரஸ் மாநாடு ஒன்றில் காமராஜருடன் சின்ன அண்ணாமலை. கவிஞர் கண்ணதாசனும் படத்தில் இருக்கிறார். சின்ன அண்ணாமலை இளம் வயது முதலே காங்கிரஸ் இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சின்ன அண்ணாமலையின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டை. அங்கு 1920_ம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார்.
இளம் வயதில் மலேசியாவில் உள்ள பினாங்கில் ஆங்கிலோ சீனப்பள்ளியில் படித்தார். பின்னர் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து தேவகோட்டையில் படித்தார்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே இவருக்கு அரசியல் ஈடுபாடு அதிகம். காந்தி, நேரு கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். 1936_ல் நேருவின் மனைவி கமலா மரணம் அடைந்தபோது தேவகோட்டை நகரத்தார் பள்ளிக்கூடத்தில் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுத முடியாமல் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
அதனால் இவரை மீண்டும் பினாங்குக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இந்தியர்களை ஒன்று திரட்டி, ஒரு சங்கம் அமைத்தார். மதுவிலக்கு பிரசாரம் செய்தார். இதனால் சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இவரை நாடு கடத்தும்படி பினாங்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி சின்ன அண்ணாமலை மீண்டும் தமிழ் நாட்டுக்கு திரும்பி வந்தார்.
அந்த நேரம் இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியது. யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்ய காந்தி சத்தியாகிரகம் செய்தார். அந்த போராட்டத்தில் சின்ன அண்ணாமலை ஈடுபட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்தபோது கைது செய்யப்பட்டார். 6 மாத சிறைத்தண்டனை அடைந்தார்.
1942_ல் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்டது. புரட்சியை தூண்டியதாக சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இவர் திருவாடானை சப்_ஜெயிலில் அடைக்கப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சிறைச்சாலை பூட்டை உடைத்து இவரை மக்கள் விடுதலை செய்தார்கள்.
புரட்சி செய்த மக்கள் மீது அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 65 பேர் கொல்லப்பட்டார்கள். சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்தது. காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.
இவரை உயிருடனோ அல்லது பிணத்துடனோ கொண்டு வந்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசாங்கம் அறிவித்தது. அதனால் அவர் தலைமறைவாக காசி சென்று தங்கி இருந்தார். இவர் தந்தையை போலீசார் பிடித்து சென்று விட்டதால் சின்ன அண்ணாமலை திரும்பி வந்து போலீசில் ஆஜரானார்.
இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் இவருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ராஜாஜி தலையிட்டு இந்த வழக்குகளில் அப்பீல் செய்தார். பெரிய கோர்ட்டில் வழக்கை உடைத்து 6 மாதத்தில் இவரை விடுதலை செய்ய வைத்தார்.
1943_ம் ஆண்டு சென்னை தியாகராயநகரில் "தமிழ்ப் பண்ணை" என்ற பதிப்பகத்தை சின்ன அண்ணாமலை தொடங்கினார். ராஜாஜி, "ரசிகமணி" டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகை நடத்தினார்.
1944_ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார். இந்த விழாவில்தான் இவரை ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று முதன் முதலில் அழைத்தார். பின்னர் அந்த பெயர் பிரபலமானது.
சுதந்திரம் அடைந்த பிறகு ம.பொ.சிவஞானத்துடன் சேர்ந்தார். ம.பொ.சி. தலைமையில் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தினார். பிரசாரம் செய்தார். திருத்தணி மீட்பு போராட்டத்தில் குதித்து 2 முறை கைதானார்.
1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊழியர்களுக்கு உற்சாகமூட்டினார். இளைஞர்களை காங்கிரசில் இழுப்பதற்காக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் தலைவராக இருந்தார். 7 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடித்தார்.
சின்ன அண்ணாமலை சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டார். "தர்ம ராஜா", "ஜெனரல் சக்கரவர்த்தி", "மனிதனும் தெய்வமாகலாம்", "நான் யார் தெரியுமா?", `சிரித்த முகம்", "கடவுளும் குழந்தையும்" ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.
சின்ன அண்ணாமலையின் மனைவி பெயர் உமையாள். அவர் இறந்து விட்டார். கருணாநிதி, ராமையா என்ற மகன்களும், மணிமேகலை என்ற மகளும் இருந்தார்கள்.
சின்ன அண்ணாமலை 60 வயதை எட்டியதால் 18_6_1980 அன்று அவருக்கு "மணி விழா" நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டது. அன்றைய தினம் மாலையில் "பாம்குரோவ்" ஓட்டல் மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த விழாவில் செட்டிநாடு ராஜா முத்தையா செட்டியார் தலைமையில் தி.மு.கழக தலைவர் கருணாநிதி பொன்னாடை போர்த்துவார் என்றும், மூப்பனார், நாஞ்சில் மனோ கரன் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்கு முன்னதாக காலையில் தி.நகர் பனகல்பார்க் அருகில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் வைதீக முறைப்படி "மணி விழா" நடந்தது. புரோகிதர்கள், சின்ன அண்ணாமலையை உட்கார வைத்து ஓமம் வளர்த்து மந்திரம் ஓதினார்கள். 60 தீர்த்த கலசங்கள் (சிறிய குடங்கள்) வைக்கப்பட்டு இருந்தது.
விழாவுக்கு அகில இந்திய இ.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருப் பையா மூப்பனார், தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப் பிரமணியம், இளையபெருமாள், முன்னாள் முதல்_மந்திரி பக்தவச் சலம், சிவாஜிகணேசன் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் சின்ன அண்ணாமலை சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
நடிகர்கள் மனோகர், சிவகுமார், பி.எஸ்.வீரப்பா, சிவதாணு, முத்து ராமன், டைரக்டர்கள் வி.சீனிவாசன், எஸ்.பி.முத்துராமன், வலம்புரி சோமநாதன், பஞ்சு அருணாசலம், பி.மாதவன், நடிகைகள் கே.ஆர். விஜயா, மனோரமா, பாடகி வாணி ஜெயராம் ஆகியோரும் வந்து இருந்தனர்.
விழாவின் கடைசி நிகழ்ச்சியாக சின்ன அண்ணாமலையை உட்கார வைத்து பூஜையில் வைக்கப்பட்ட குடத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினார்கள்.
மூப்பனாரும், சிவாஜி கணேசனும் முதல் குடங்களில் இருந்த தண்ணீரை ஊற்றி விட்டு இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களின் கூட்டத்துக்கு சென்றுவிட்டனர். பிறகு பிரமுகர்களும், உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து குடங்களில் இருந்த தண்ணீரை சின்ன அண்ணா மலையின் தலையில் ஊற்றினர்.
10, 15 குடங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருக்கும். பக்தவச்சலம் வந்து ஒரு குடத்தை எடுத்து தண்ணீர் ஊற்ற முயன்றார். அப்போது அவர் கை நடுங்கியது. உடனே சின்ன அண்ணாமலை அந்த குடத்தை வாங்கி தன் தலை மீது ஊற்றிக்கொண்டார்.
அதன்பிறகு சின்ன அண்ணாமலை மீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது அவர் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததை, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு புகைப்படக்காரர் கவனித்தார். "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்" என்று அவர் கூச்சலிட்டதால் உடனே தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது.
சின்ன அண்ணாமலை பேச முடியாமல் மயங்கிய நிலையில் இருந்தார். அவர் உடல் வியர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தது. உடனே அவர் உடலை துண்டினால் துவட்டி, பெஞ்சில் படுக்க வைத்தனர். அருகில் இருந்த சிவாஜி கணேசனின் டாக்டர் பால கிருஷ்ணன் அவர் உடல் நிலையை பரிசோதித்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டும் என்றார்.
சின்ன அண்ணாமலையை காரில் படுக்க வைத்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள எச்.எம். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போனார்கள். பட அதிபர் சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி, நடிகர் மனோகர் ஆகியோர் கூடவே சென்றனர்.
வழியிலேயே சின்ன அண்ணாமலை மரணம் அடைந்துவிட்டார். காலை 10_15 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு போய் சேர்ந்தபோது, டாக்டர் பி.சி.ரெட்டி அவர் உடலை பரிசோதித்து பார்த்துவிட்டு "உயிர் போய்விட்டது" என்று அறிவித்தார்.
ஆயினும் செயற்கை முறையில் மூச்சு வரச் செய்ய முயன்றனர். பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் பலன் இல்லை. சின்ன அண்ணாமலைக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது. தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன் விளைவாக அவர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் சின்ன அண்ணாமலை உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.பி. சுப்பிரமணியம், ம.பொ. சிவஞானம், கண்ணதாசன், முசிறி புத்தன் மற்றும் திரை உலக பிரமுகர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவாஜி கணேசன், சின்ன அண்ணாமலையின் உடலை பார்த்து தேம்பித் தேம்பி அழுதார். சின்ன அண்ணாமலை உடல் மீது காங்கிரஸ் கொடி போர்த்தப் பட்டு இறுதி ஊர்வலம் கொட்டும் மழையில் சென்றது. அந்த இறுதி ஊர்வலத்தில் சிவாஜிகணேசன், தளபதி சண்முகம், சிவாஜியின் அண்ணன் தங்கவேலு, சிவாஜி மகன் தளபதி ராம்குமார், ராஜசேகரன் எம்.எல்.ஏ., புருசோத்தமன் எம். எல்.ஏ. மற்றும் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் நடந்தே சென்றார்கள். கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நடந்த அனுதாப கூட்டத்தில் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, அகில இந்திய இ.காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன், இளையபெருமாள், உமாபதி, எர்னால்டு பால், தளபதி சண்முகம் ஆகியோர் பேசினார்கள்.
சின்ன அண்ணாமலை மறைவுக்கு முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் அனுதாப செய்தி வெளி யிட்டு இருந்தார்கள். எம்.ஜி.ஆர். தனது அனுதாப செய்தியில், "சின்ன அண்ணாமலை மறைவின் மூலம் தமிழகம் ஒரு நல்ல தொண்டரை, தலைவரை, சொற்பொழிவாளரை, அரும் திறன்கள் பல கொண்ட ஆற்றல் உள்ளவரை இழந்து விட்டது" என்று கூறியிருந்தார்.
கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், "அடலேறு போன்ற தோற்றமும், அன்பு உள்ளமும் கொண்ட தியாக வீரராக திகழ்ந்தவர். தன்னுடைய எழுத்தால், பேச்சால் அனைவரையும் மகிழ்வித்தார். அவர் நம்மை அழவைத்து விட்டு போய்விட்டார்.
"சொன்னால் நம்பமாட்டீர்கள்" என்ற புத்தகத்தை அவர் (சின்ன அண்ணாமலை) படைத்தார். அவர் மறைவும் அப்படித்தான் ஆகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.