Saturday, May 15, 2010
போலீஸ்காரர் சுட்டுக்கொலை : ஐதராபாத் நகரில் தீவிரவாதிகள் ஊடுருவல் நாசவேலைக்கு சதி திட்டம்
ஆந்திரா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள மிகப் பழமையான மெக்கா மஸ்ஜித் மசூதியில் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது.
இதனால் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது ஐதராபாத்தில் உள்ள சிமி இயக்கத்தினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தினம் வரும்போதெல்லாம் தீவிரவாதிகள் போலீசார் மீதும், பொது இடங்களிலும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். நேற்றும் அதே பாணியில் ஐதராபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
மெக்கா மஸ்ஜித்தின் 3-வது ஆண்டு குண்டு வெடிப்பு தினத்தையொட்டி தெக்ரிக் கல்பா-இ-இஸ்லாம் (டிஜிஐ) என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி ஒரு போலீஸ்காரரை கொன்று விட்டனர்.
தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து ஐதராபாத் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புகழ்பெற்ற சார்மினார் கட்டிடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகலி பண்டா என்ற பகுதியில் 3 போலீசார் பணியில் இருந்தனர். மாலை 4.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
வல்கா ஓட்டல் எதிரே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த போலீஸ்காரரிடம் சென்று உங்கள் பெயர் என்ன என்றனர். அந்த போலீஸ்காரர் பதில் சொன்ன மறு வினாடி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டனர்.
மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் அந்த போலீஸ்காரர் அருகில் நின்ற ஆட்டோவுக்கு பின்னால் ஓடிச்சென்று ஒளிந்தார். என்றாலும் தீவிரவாதிகள் அவரை விரட்டிச் சென்று மேலும் 2 ரவுண்டு சுட்டனர்.
3 குண்டுகள் துளைத்ததால் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 போலீஸ்காரர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்கள். 3 போலீஸ்காரர்களும் ஆயுதம் எதுவும் இல்லாமல் இருந்ததால், எதிர்த்து பதிலடி கொடுக்க முடியாமல் போய்விட்டது.
கொல்லப்பட்ட போலீஸ்காரரின் பெயர் ரமேஷ். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியும் போலீஸ்காரர்தான்.
பலத்த பாதுகாப்பையும் மீறி துணிச்சலாக தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தாங்கள் வந்த அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். போவதற்கு முன்பு சி.டி. ஒன்றை அவர்கள் வீசி விட்டு கொன்றனர். அந்த சி.டி.யில், மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.
இதன் மூலம் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் தெக்ரிக் கல்பா-இ-இஸ்லாம் என்னும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.
தீவிர விசாரணையில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் விகர் அகமது, முகம்மது சுலேமன், நஜிபுல்லா என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு போலீஸ்காரர் கொல்லப்பட்டபோதும், அது விகர் அகமது கைவரிசை என்று கருதப்பட்டது. இந்த ஆண்டு அவன் சதி செயல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நஜியுல்லா என்பவன் பாகிஸ்தான் உளவுப்பிரிவின் கைக்கூலி ஆவான். உமர் அலி என்ற தீவிரவாதி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் பலர் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு சிமி இயக்கத்தினர் பல வகைகளில் உதவிகள் செய்வது தெரிய வந்துள்ளது. அவர்கள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து ஐதராபாத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
விசாரணைக்கு பெங்களூர் வர முடியாது!!!!!!!!!!!!!!
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, சாமியார் மீதான வழக்குகளில் அவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். நித்யானந்தா மீது பாலியல் பலாத்காரம், பண மோசடி உட்பட பல்வேறு புகார்களை 135 பேர் கூறியுள்ளனர். அவர்களில் 80 சதவீதம் பேரிடம் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ரஞ்சிதா விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி சி.ஐ.டி. போலீசார் அவருக்கு 3வது முறையாக நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த தனது வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்தின் மூலமாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 160வது பிரிவை சுட்டிக்காட்டி கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘160வது பிரிவின்படி பெண் சாட்சியை விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பக் கூடாது. வாக்குமூலம் தேவைப்பட்டால் அவருடைய வீட்டுக்குச் சென்று பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
சி.ஐ.டி. மறுகடிதம்: இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த சி.ஐ.டி. அதிகாரிகள், ‘உங்களுடைய முகவரியை கொடுங்கள். நாங்களே நேரில் வந்து வாக்குமூலம் பெறுகிறோம்’ என்று ரஞ்சிதாவுக்கு நேற்று கடிதம் எழுதினர்.
இந்த கடிதம் அவருடைய வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
சட்டப் பிரிவு 160 சொல்வது என்ன?
இந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 160வது பிரிவு என்ன சொல்கிறது?
இந்த சட்டத்தின்படி, எந்த போலீஸ் சரகத்தில் குற்றம் நடந்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறதோ, அந்த போலீஸ் நிலைய அதிகாரி அல்லது சிறப்பு அதிகாரி, வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுவோருக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களை அழைத்து வாக்குமூலம் பெறலாம். ஆனால், 15 வயதுக்கு குறைவானர்கள் மற்றும் பெண்களுக்கு நோட்டீஸ் அனுப்பி போலீஸ் நிலையம் அல்லது விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்துக்கு அழைக்கக் கூடாது. பெண் சாட்சியின் வீட்டுக்கே சென்று வாக்குமூலம் பெற வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலையங்கம்: ஒரு நகர்வு தேவை...
ஆனால் செஸ் விளையாட்டில் நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியர். தமிழ்நாட்டவர். இருப்பினும் பெரும் மகிழ்ச்சிக்குரல்கள் கேட்கவில்லை. அவரது வெற்றி வெறும் செய்தியாக வெளியானதே தவிர, பெருந்திரள் உணர்வின் கொண்டாட்டமாக மாறவில்லை.
முந்தைய உலக சாம்பியன் பட்டம் பெற்றபோது விளையாடியதைக் காட்டிலும் சற்று சிரமத்துடனும், எங்கே தோற்றுவிடுவாரோ என்று அவரைச் சார்ந்த நண்பர்களும் பார்வையாளர்களும் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். இதற்காக உலகம் முழுவதும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளது. தினமணியும் பாராட்டுகிறது.
அயர்லாந்து எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தூசிப் படலத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயினிலிருந்து பல்கேரியாவுக்கு சுமார் 40 மணி நேரம் சாலை வழியாகப் பயணம் செய்து, போட்டி நடைபெறும் சோஃபியா நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், தனது முதல் ஆட்டத்தை எதிர்ஆட்டக்காரர் டெபலோவிடம் இழந்தார். இந்தச் சோர்வுத் தோல்வி அவரை வீழ்த்திவிடும் என்று நினைக்கப்பட்ட நேரத்தில், இந்தப் பயணத்தை அவர் தவிர்த்துவிட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றியிருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்த வேளையில், 11 வது ஆட்டத்தின் முடிவு வரை இருவரும் சமமான புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், 12 வது ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது உலக சாம்பியன் பட்டத்தை நிலை நிறுத்திக் கொண்டதைப் போன்ற பரபரப்பு, எந்தவொரு விளையாட்டுக்கும் குறைவில்லாதது.
இருப்பினும்கூட, ஆனந்த் அடைந்த வெற்றி செய்தியானதே தவிர, மக்களின் கொண்டாட்டமாக மாறவில்லை. இதற்குக் காரணம், ஊடகங்கள் இந்த விளையாட்டுக்கு ஒரு செய்திக்கான முக்கியத்துவம் மட்டுமே அளிக்கின்றன என்பதும், கிரிக்கெட் ஆட்டத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தொலைக்காட்சி நிறுவனங்களோ அல்லது விளம்பர நிறுவனங்களோ செஸ் போட்டிக்கு அளிப்பதே இல்லை என்பதுதான். செஸ் போட்டியில் சர்வதேச அளவில் விளையாடும்போது நிறைய பரிசுப் பணமும் பாராட்டும் கிடைத்தாலும், மாநில அளவில் விளையாடும்போது இதே அளவுக்குப் பரிசுப்பணம் அதிகம் கிடைப்பதில்லை.
இதனால், இந்த விளையாட்டில் இளைய தலைமுறை ஆர்வம் இழந்தது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில்கூட ஆடுபுலி ஆட்டம் ஆடுவதற்கான கட்டங்கள் அரச மரத்தடிக் கற்பலகைகளில் இருக்கும்போது, அதை ஆடுவதற்குத்தான் ஆள் இல்லை. அதைப் போலவே, நகரப் பகுதிகளிலும் செஸ் விளையாட்டுக்கு அதிக
முக்கியத்துவம் இல்லாமல் போனது.
செஸ் விளையாட்டுக்கு அதிக செலவு இல்லை. பள்ளிகளில் செஸ் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கற்றுக் கொண்டால், பல புதிர்களுக்குத் தீர்வு காணும் நகர்வுகளை தானே ஒருவர் தனித்து விளையாடவும் முடியும். பெரிய மைதானமும் தேவை இல்லை. ஆனாலும் பள்ளிகள் இதுபற்றி அக்கறை கொள்வதில்லை.
எல்லா மாவட்டங்களிலும் செஸ் அசோசியேஷன்கள் உள்ளன. அவர்களும் மாவட்ட அளவிலான போட்டிகளை, பள்ளிகளின் பருவ விடுமுறைக் காலங்களில் நடத்துகின்றனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால் அதற்கு விளையாட்டுக்கான மதிப்பெண் உண்டா இல்லையா, வெறுமனே நடத்தப்படும் போட்டியா என்றுகூட விசாரிக்காமல், பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்போட்டிகளில் பங்கேற்கச் செய்கின்றனர். குழந்தைகளும் நிறைய எண்ணிக்கையில் பங்குகொள்கின்றனர். இதன் காரணமாகவே, தொழில்போட்டி ஏற்பட்டு, பல செஸ் சங்கங்கள் உருவாகி, ஆளாளுக்கு செஸ் போட்டிகள் நடத்தும் நிலைமையும் தமிழ்நாட்டில் இருக்கிறது.
விஸ்வநாதன் ஆனந்த் தமிழ்நாட்டுக்காரர். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, தமிழகத்தில் விளையாடத் தொடங்கி, அகில இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்து, இப்போது உலக அளவில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அவர் இந்தியாவுக்கு என்று இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக செஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உரிய பயிற்சியும் போட்டியில் அங்கீகாரமும் கிடைக்கும் வகையில் அவருடைய பங்களிப்பைத் தர வேண்டும். அப்போதுதான் அவர் பெருமைக்குரியவர் என்பதைக் காட்டிலும், விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் மனிதராக மாறுவார்.
விஸ்வநாதன் ஆனந்த் இந்தியக் குடிமகனா அல்லது ஸ்பெயின் குடிமகனா என்கிற குழப்பம் ஏற்படும் நிலைமைக்குக் காரணம், அவர் மனைவி அருணாவுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள கொலடோ மெடியானோ நகரத்திலேயே ஆண்டில் பல மாதங்கள் வசிப்பதுதான். அவருக்கு ஸ்பெயின் நாட்டு அரசு, "ஜாமியோ டூ ஆரோ' என்கிற விருதினை (வெளிநாட்டவருக்கு ஸ்பெயின் அரசு அளிக்கும் உயரிய விருது) அளித்து கெளரவப்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு அவர் ஸ்பெயின் நாட்டோடு ஒன்றிவிட்டார். ஸ்பெயின் நாட்டுச் சூழ்நிலை அவர் மனநிலையை செஸ் விளையாட்டுக்கு ஏற்புடையதாக தக்க வைக்க உதவுகிறது என்று அவர் சொல்கிறார்.
இந்த மண்ணில் -மயிலாடுதுறையில்- பிறந்து, இந்த மண் அளித்த மனத்திட்பத்தால் இன்று 64 கருப்பு வெள்ளைக் கட்டங்களுக்கு உலக ராஜாவாக தொடர்ந்து நீடிக்கிறார் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டுக் குழந்தைகளை சதுரங்க ஆட்டத்துக்கு ஆர்வத்துடன் இட்டுச் செல்லும் கடமை அவருக்கு உள்ளது. தமிழ்நாட்டிற்கு அவருடைய ஒரு நகர்வு (மூவ்) தேவையாக இருக்கிறது.
Friday, May 14, 2010
கல்வி கட்டண பிரச்சினை: தனியார் பள்ளி மிரட்டலுக்கு அரசு பணியாது; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சட்டசபையில் இன்று பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன், பேசும்போது தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. கோர்ட்டும் அதை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த கட்டணம் போதாது பள்ளிகளை ஜூன் மாதம் திறக்கமாட்டோம் என்று கூறி உள்ளனர்.
அரசின் உத்தரவை மதிக்காத இந்த பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:-
தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலானகுழு நிர்ணயம் செய்துள்ளது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த பள்ளிகள் அனைத்திலும் பள்ளிகளை நடத்த ஆகும் செலவு, அந்த பள்ளியில் உள்ள வசதிகள் எவ்வளவு கட்டணம் வாங்கலாம் என்ற அவர்களது கருத்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்த பிறகே ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கோர்ட்டும் எற்றுள்ளது.
கலைஞர் அரசின் இந்த நடவடிக்கைக்கு சாதாரண ஏழை எளிய மக்களிடம் பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. எந்த பள்ளியாவது கட்டணம் குறைவாக உள்ளது என்று கருதினால் சம்பந்தப்பட்ட குழுவிடம் முறையீடு செய்யலாம். அது பரிசீலிக்கப்படும். அதை விடுத்து மிரட்டல் விடுத்தால் அதற்கு இந்த அரசு பணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று மாலை இணைப்பு விழா: நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேருகிறார்
ஆனால் திடீரென்று தி.மு.க.வில் சேர குஷ்பு முடிவு செய்துள்ளார் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு செல்கிறார். அங்கு முதல்- அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன அப்போது தி.மு.க. உறுப்பினர் அட்டையையும் பெற்றுக்கொள்கிறார்.
குஷ்பு தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். நாட்டாமை, பாண்டியன், அண்ணாமலை, சிங்கார வேலன், வருஷம் 16, முறைமாமன் போன்றவை குஷ்புவின் ஹிட் படங்களில் சில.
2005-ல் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் நாடெங்கும் குஷ்பு கொடும்பாவி எரித்து எதிர்ப்பை வெளியிட்டனர். வழக்குகளும் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு குஷ்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது குஷ்பு கருத்து தவறானது அல்ல என்று நீதிபதிகள் கூறினர்.
இதை தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் முடிவை எடுத்து தி.மு.க.வில் இணைகிறார்.
தலையங்கம் டோனியின் வாக்குமூலம்
எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. இருந்தால் ஆட்டத்தில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். சறுக்கல், வீழ்ச்சி, அடிகள் அடுத்து வரக்கூடிய வெற்றிக்கு சுவை கூட்டும். முழு திறமை காட்டி போராடியும் வெற்றி கைநழுவினால், எதிராளியை கைகுலுக்கி பாராட்டி களத்தை விட்டு வெளியேறுவதே நாகரிகம். ஆனால், இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடவில்லை. மந்திரித்துவிட்ட ஆடுகள் போல செயலிழந்து தடுமாறினார்கள்.
ஐ.பி.எல் போட்டிகளில் அபாரமாக ஆடியவர்கள் பூனையை கண்ட எலியாக பவுன்சர் பந்துவீச்சுக்கு சரண் அடைந்தனர். பவுலர்கள் ரன் வழங்கும் வள்ளல்களாக அவதாரம் எடுத்தனர். ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் கொடுத்து அதில் முதலிடம் பிடித்தார் ஹர்பஜன். களத்தில் நின்ற சகாக்கள் துணையின்றி அவர் சாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். எவரிடமும் வேகம் இல்லை.
தலைமைப் பண்புக்கு உதாரணமாக பேசப்பட்ட கேப்டன் டோனி அடுத்தடுத்து தப்பான முடிவுகள் எடுத்தார். விளைவு, சர்வதேச போட்டிகளில் டோனி இதுவரை எதிர்கொள்ளாத பெரும் தோல்வி.
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறி தப்பவில்லை அவர். ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பிறகு நடக்கும் இரவு விருந்துகளால் வீரர்கள் சோர்ந்து விட்டார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். உண்மை பேசினால் ஊர் சும்மா விடுமா? டோனியை முட்டாள் என்றும் அவர் சொன்ன காரணம் அபத்தம் என்றும் முன்னாள் வீரர்கள் பாய்ந்திருக்கிறார்கள்.
பேரழகிகளோடு கேளிக்கை விருந்தில் பங்கேற்றால் எத்தனை மணிக்கு எந்த நிலையில் தூக்கம் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மட்டை பிடித்தும் பந்து போட்டும் 20 ஓவரில் இழந்ததை காட்டிலும் அதிகமான சக்தி அதில் வீணாகும். பார்ட்டி பக்கமே தலைகாட்டாத ஆஸ்திரேலிய வீரர்களை கேட்டால் புள்ளி விவரத்தோடு விளக்குவார்கள். மனைவியுடன் தங்கவே அவர்களுக்கு அனுமதியில்லை. கிரிக்கெட் போர்டு கவனிக்க வேண்டும்.
இந்த விளையாட்டுடன் உறவை துண்டித்தால் கிரிக்கெட் பிழைக்க வழியிருக்கிறது.
தினமணி தலையங்கம்: எங்கே தவறு?
தமிழ்நாட்டில் மேலவை அமைக்கப்படும்போது சுயஉதவிக் குழுக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படும் அளவுக்கு, தமிழகத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடும், எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிடும்போது, தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.4.36 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு கடனாகத் தரப்படுகிறது என்று தெரிவித்தார்.இந்த சுயஉதவிக் குழுக்களில் சில மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தில் அஞ்சல் நிலையம் மூடப்படும் நிலை உருவானபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு இந்த அஞ்சல் நிலையத்தைத் தானே பொறுப்பேற்று நடத்த முன்வந்தது. அதைச் சிறப்பாகச் செய்தும் வருகின்றது. ஏலகிரி மலையில், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு வீட்டை விடுதியாகப் பராமரித்து லாபம் ஈட்டிய சுயஉதவிக் குழுவுக்கு, அரசின் விருதும், அதன் 13 உறுப்பினர்களுக்கும் தலா ரூ.5000 ஈவுத்தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற மிகச் சிறப்பாகச் செயல்படும் சுயஉதவிக் குழுக்கள் பல இருக்கின்றன என்றாலும், சில சுயஉதவிக் குழுக்கள் குறித்து வெளியாகும் செய்திகள்,
இத்திட்டம் பாதை விலகிப் போவதையும், இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், இந்த நல்லதொரு திட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்கிற ஆபத்து இருக்கிறது என்பதையும் அரசு உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.வங்கிக் கடன் பெறுவதற்காக மட்டுமே சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்படுவதும், பெற்ற கடனை திரும்பச் செலுத்தாமல் இருக்கும் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதும் கவலையளிப்பதாக இருக்கும் அதே நேரத்தில், சுயஉதவிக் குழுக்களை வங்கி அலுவலர்கள் ஏமாற்றுவதும் நடைபெறத் தொடங்கியிருக்கிறது.
சுய உதவிக் குழுக்களுக்கு அவர்கள் தொடங்கும் தொழிலுக்கேற்ப கடனுதவி நிர்ணயிக்கப்படுகிறது. அதில் 25-40 விழுக்காடு (தொழில்களுக்கு ஏற்ப விழுக்காடு மானியத்தின் அளவு மாறுகிறது) மானியம் அளிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அவர்களுக்கு ரூ.25,000 மானியம் அரசு வழங்குகிறது. சுயஉதவிக் குழுக்கள் ரூ. 75,000 செலுத்தினாலே போதும். ஆனாலும், சில சுய உதவிக் குழுக்கள் மாதத் தவணையைச் சரியாக செலுத்தாத காரணத்தால் வங்கிகள் இந்த மானியத் தொகையை அவர்கள் கணக்கில் செலுத்தாமல் காலம்தாழ்த்தும் உத்தியைக் கையாளுகின்றன. காரணம், அவர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், குறைந்தபட்சம் மானியத்தைக் கொண்டாகிலும் வரவு வைத்து ஓரளவு சரி செய்யலாமே என்ற எண்ணம்தான்.
அரசியல் நிர்பந்தங்களால் கடன் தர நேரிடும்போது, வங்கி மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையை வங்கி அலுவலர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்வது ஆங்காங்கே நடந்து வருகிறது. அண்மையில் வேலூரில் ஒரு வங்கியில் ஒரே ஆண்டில் ரூ.25 லட்சம் மானியத் தொகையை வங்கி ஊழியர்களே மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் அரசு அளிக்கும் மானியத் தொகையை அவர்கள் கணக்கில் சேர்க்காமல், தங்கள் உறவினர் கணக்கில் வரவு வைத்து, கையாடல் செய்தது தெரியவந்தது. எந்தெந்த சுயஉதவிக் குழுக்களுக்கு சேர வேண்டிய பணம் கையாடப்பட்டுள்ளது என்ற விவரத்தைக்கூட வங்கி இதுவரை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது என்பதும், இதில் மாநில அதிகாரிகளும் தலையிட முடியாமல் இருப்பதுவும் இன்னொரு சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.
இதற்கு அடிப்படைக் காரணம், இந்த மானியம் அளிக்கப்பட்ட விவரத்தை அரசு அதிகாரிகள் அந்தந்த சுயஉதவிக் குழுக்களுக்கு முறையாகத் தெரிவிப்பதில்லை என்பதோடு, இந்த மானியத் தொகையை வங்கியிடம் கேட்டுப் பெறும் விழிப்புணர்வு இந்தக் குழுத் தலைவர் அல்லது தலைவியிடம் இல்லை. பல இடங்களில் இந்த சுயஉதவிக் குழுக்கள் ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பின் கீழ் செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தன்னார்வ அமைப்புகள் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு அரசு தரும் மானியத்தின் அளவைச் சொல்வதே இல்லை, அல்லது குறைத்துச் சொல்கின்றன.
இத்தகைய மோசடியான தன்னார்வ அமைப்புகள், வங்கி அலுவலர்களுடன் சேர்ந்து இந்த மானியத் தொகையை முறைகேடாக எடுத்துக் கொள்வது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது என்றுசுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.சுயஉதவிக் குழுக்கள் பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் போனால், மானியத்தை ஒரளவு ஈடுகட்டலாம் என்ற மனப்பான்மை, வங்கியைப் பொருத்தவரை புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால், சுயஉதவிக் குழுக்களைப் பொருத்தவரை கணிசமான முதலீடு முடக்கப்பட்டுவிடுகிறது என்பதுதான் உண்மை.
மானியத்தை அந்தந்த சுயஉதவிக் குழுக்களுக்கே நேரடியாக காசோலையாக அளித்தால் என்ன? தன்னார்வ அமைப்புகளின் கீழ் செயல்படும் சுயஉதவிக் குழுத் தலைவர், தலைவிக்கு அவர்களுக்கான மானியத்தை ஏன் அரசு அதிகாரிகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை? எங்கோ, தெரிந்தே சில தவறுகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இதை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், ஒரு நல்ல திட்டம், நலிந்துபோகும். மதிப்பிழந்து போகும்.
Thursday, May 13, 2010
கருணாநிதியின் காமெடி பேட்டி!!!!!!!!!!!!!
கே:- உங்கள் ஆட்சியில் அதிகார மையங்கள் நிறைய உள்ளதாகவும், நிர்வா கத்திலும் ஆட்சி அதிகா ரத்திலும் அவற்றின் தலை யீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?
ப:- குற்றம் சாட்டா விட்டால், பின்னர் எப்படி அவை எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்? அதிகார மையங்கள் என்பதில் அர்த் தமும் இல்லை; அடிப்படையும் இல்லை.
கே:- சினிமா துறையினருக்கு நீங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதாகவும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. தமிழ் மக்களிடத்தில் சினிமா நடிகர்களுக்கு உள்ள செல்வாக்கை உங்களுக்கான ஆதரவாக மாற்றும் முயற்சியா இது?
ப:- அரசியல் துறையிலே இருப்பதைப் போலவே, இலக்கியத் துறையிலே இருப்பதைப் போலவே சினிமா துறையிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது தானே தவிர அந்தத் துறைக்கென்று அபரிமிதமான முக்கியத் துவம் எதையும் நான் தர வில்லை. அந்தத் துறையிலே உள்ள தொழிலாளர்கள் மீது அந்தக் காலத்திலிருந்தே எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதன் காரணமாக அவர்களுக்கென்று சில பல சலுகைளை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், செய்கின்ற காரணத்தினால், அந்தத் துறைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று உங்களைப் போன்ற சிலர் கருதுகிறார்கள் போலும்.
கே:- முன்பெல்லாம் தேர்தல் களம் என்பது கொள்கைப் பிரச்சாரம் - வாதம் - எதிர்வாதம் என அமர்க்களப்படும். ஆனால் இப்போது ஏராளமாக பணம் புழங்குவதும் - வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற காரணியாக பண பலம் மாறி விட்டதற்கான சூழல் தென்படுகிறது. வாக்காளர்களே பணம் கேட்கும் நிலை ஏற்படுவதாக தேர்தல் அதிகாரிகளே வருந்துகிறார்கள். சாமானியர்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியாமல் செய்து விடும் இந்தச்சூழல் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா?
ப:- காலக்கணக்கெடுத் திட; நீங்கள் நண்பர் சோ அந்தக் காலத்தில் நடத்திய சம்பவாமி யுகே யுகே நாடகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.
கே:- நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நேரில் சென்று கண்டு ரசிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டியில் மாறுபட்டுள்ள டி.20 போட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அண்மைக் காலத்தில் உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?
ப:- டி.20 போட்டிகள் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொறுத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர - சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடர்ந்து டெண்டுல்கர் பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்றாகும். அண்மைக் கால வீரர்களைச் சொல்ல வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி, ஷேர்ன் வாட்சன், ஜாகஸ் காலீஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்களாவர்.
கே:- தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் வறட்சியும் வறுமையும் தொடர் கின்றனவே? வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை தேடி நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழலும் நீடிக்கின்றனவே?
ப :-தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. கிராமப்புறங்களிலே வறட்சியும் வறுமையும் தொடர்வதாகக் கேட்டிருக்கி றீர்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதாலும்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தினாலும் - கிராமப்புறங்களில் பெருமளவுக்கு வறுமையும் வறட்சியும் குறைந்து வருகிற தென்பதைக் கண்கூடாகக் காணலாம். கிராமப்புறங்களிலும் வளமையைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்காகத் தான் புதிதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களை யெல்லாம் கிராமப் புறங்களிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்றும், அந்தத் தொழிற்சாலை அமைகின்ற பகுதிகளிலே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அத்தகைய தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கு மேயானால, நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் தானாகவே குறைந்து விடும்.
கே :- நான்காண்டு கால ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, சட்ட மன்றக் கட்டடம், வீட்டு வசதித் திட்டம் என சாதனைப்பட்டியல் நீளமானது. இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது?
ப:- ரோஜா தோட்டத்தில் உங்களைக் கவர்ந்த ரோஜா எது எனக் கேட்பதைப் போல இருக்கிறது.
கே :- இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகின்றனவே?
ப :- இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும் - அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும். இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை களில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை. உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோ ரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கே:- மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அழகிரி மாநில அரசியலுக்கு வருவார் என்றும், கனிமொழி மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெறுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றனவே?
ப:- நீங்கள் தான் உங் கள் கேள்வியிலேயே ஊடகச் செய்தி என்று சொல்லி விட்டீர்களே?
கே:- இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் - பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011 தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?
ப:- இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011 தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.
கே:- ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டி பிடிக்கும். உங்களுக்கு சீனியாரிட்டி பிடிக்கும் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம். அமைச்சரவையிலும், சட்ட மன்றத்திலும் புதிய முகங்களை, புதிய சிந்த னையை வரும் ஆண்டிலாவது பார்க்க முடியுமா?
ப :- என்னைப் பொறுத்த வரையில் சின்சியாரிட்டி யோடு இணைந்த சீனியாரிட்டி யைத்தான் நான் எப்போதும் மதிப்பவன். கழகம் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை அனைவரும் அறிவர். புது முகங்களுக்கும் புதிய சிந்தனைக்கும் கழகத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட படித்த ஒரு இளைஞரான புது முகத்தைத் தானே நிறுத்தி வெற்றி பெறச் செய்தோம்.
கே:- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமை தொடர்கிறதே?
ப:- இந்தத் துன்பத்தைகளைவதற்கு பல ஆண்டுகளாக நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டு தான் வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கு தாமதம்: கருணாநிதி புகாருக்கு ஜெயலலிதா பதில்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
என் மீது தொடர்ந்து அவதூறு சுமத்துவதை கருணாநிதி வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். உதாரணமாக தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சிறுதாவூர் பிரச்சினை குறித்து கருணாநிதி என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தினார்.
அங்கே எனக்குச் சொந்தமான எந்த நிலமும் இல்லை, வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்குகிறேன் என்று உடனே நான் என்னுடைய நிலைமையை விளக்கினேன். அதன் பின்னரும் அதை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார்.
தற்போது அந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. இந்த அறிக்கை வெளிவந்த பிறகு இதில் உள்ள உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இதே போன்று, ஒவ்வொரு பிரச்சினையிலும் தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்.
1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், என்னை அரசியலில் இருந்தே ஒழித்து கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் என் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்தார் கருணாநிதி. அவற்றில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்களால் நான் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறேன். ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தினால் லண்டன் ஓட்டல் வழக்கு தி.மு.க. அரசாலேயே திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு நடைபெற்று வரும் வழக்கு 13 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு நான்தான் காரணம் என்ற வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது விஷமத்தனமானது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் ஆகும்.
1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொல்லிக் கொண்டு, 66 கோடி ரூபாய் அளவுக்கு நான் சொத்து சேர்த்துவிட்டதாக கூறி இருக்கிறார். இது அப்பட்டமான பொய்.
முதலமைச்சருக்கான சம்பளம் வாங்கித்தான் காலத்தை கழிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. சுயமாக சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள் இருந்ததால்தான், என்னுடைய சம்பள பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணத்தில், சம்பிரதாயத்திற்காக ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டேன். இந்த வழக்கு என் மீது கருணாநிதியால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட பொய் வழக்கு.
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதைப்பற்றி நான் விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1997 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசினால் என் மீது ஒரு பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
1997 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சிதான் நடைபெற்றது. அப்போது அதற்கு நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லையே? பின்னரும், இந்த வழக்கை தாமதப்படுத்த நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. 2003-ம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வரும் தருவாயில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 28.2.2003 அன்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், மேற்படி வழக்கை வேறு மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையாணை விதித்தது. இதன் காரணமாக வழக்கு ஒரு வருட காலம் தாமதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கு தாமதப்படுத்தப்பட்டதற்குக் கருணாநிதிதான் காரணம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், மேற்படி வழக்கையும், லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒருங்கிணைத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தவர் தி.மு.க. வைச் சேர்ந்த அதே அன்பழகன். இதற்கு 5.8.2005 அன்று உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்தது. பின்னர் 22.1.2010 அன்று அன்பழகனே மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதால், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையாணை முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து அதிலிருந்து நான் விடுதலையாகிவிட்டால், எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ய எந்த அடிப்படையும் இருக்காதே! என்னைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்வதற்காகவே இந்த வழக்கை முடிக்கவிடாமல் இன்றுவரை அதற்கு உயிரூட்டி வைத்திருக்கிறார் எனவே, என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு இருக்கிறார்.
சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவையின் உறுப்பினர் குறித்து, அவைக்கு வெளியே அறிக்கை வெளியிடுவது அவையின் உரிமையை மீறிய செயல் ஆகும்.
இது முதல் குற்றம். இரண்டாவதாக, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதைப் பற்றி பேரவைக்குள் தெரிவிப்பதும் பேரவை விதிகளுக்கு முரணானதாகும்.
2001 முதல் 2006 வரை நான் முதலமைச்சராக ஆட்சி புரிந்தபோது, நான் நினைத்திருந்தால், கருணாநிதி என் மீது போட்ட பொய் வழக்குகள் அத்தனையையும் வாபஸ் பெற்றிருக்க முடியாதா? செய்திருக்க முடியும்! ஆனால் அவ்வாறு நான் செய்ய விரும்பவில்லை.
தர்மத்திற்கும், சத்தியத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டு, தைரியமாக நீதிமன்றங்களில் போராடி நான் நிரபராதி என்பதை நிரூபித்து வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவேன் என்று சபதம் செய்து, அவ்வாறு எனது மனசாட்சி காட்டும் வழியில் செயல்பட்டு வருகிறேன்.
தர்மத்தை கடைபிடித்து வரும் எனக்கு இதுவரை இறைவன் அருளால் 12 வழக்குகளில் விடுதலை கிடைத்திருக்கிறது. 13-வது வழக்கை “ஆதாரம் இல்லை” என்று வாபஸ் பெற்ற கருணாநிதி, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது கேலிக்கூத்து.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை
திரைப்படம் திரைப்படம்
-
இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரங்களில் சிங்கள படையினர் தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கடத்தி சென்று கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.
இப்போது விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் தமிழர்களை கடத்தி செல்வது அதிகரித்து உள்ளது.
அதுவும் சமீபகாலமாக இந்த கடத்தல் சம்பவம் அதிகரித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ராணுவத்தினரே இந்த சம்பவத்தில் ஈடுபடுவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். கடத்தலுக்காக வெள்ளை மற்றும் கறுப்பு நிற வேன்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த வேன்கள் திடீரென தமிழர்களின் கிராமங்களுக்கு வருகிறது. அங்கு கண்ணில்படும் இளம் பெண்கள், மற்றும் இளைஞர்களை கடத்தி செல்கின்றனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்புவதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்றும் தெரிவது இல்லை. அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று கொலை செய்வதாகவும், பெண்களை கற்பழித்து பின்னர் கொல்வதாகவும் தமிழர்கள் சொல்கின்றனர்.
சமீபத்தில் வெல்வெட்டி துறையில் ஒரு சிறுமியை இதே போல கடத்தி சென்றனர். ஆனால் அவர் இடையில் தப்பி வந்து விட்டார். அவர் அந்த வேனில் மேலும் 6 இளம் பெண்கள் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறியுள்ளார்கள்.
இலங்கை தமிழர்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் மூலமாவது ஓரளவு பாதுகாப்பு இருந்தது. இப்போது எந்தவித பாதுகாப்பும், இல்லாததால் இது போன்ற அத்து மீறல்கள் அதிகம் நடப்பதாக தமிழர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
வெள்ளை, கறுப்பு நிற வேன்களை எங்காவது பார்த்து விட்டாலே தமிழர்கள் ஓடிச் சென்று பதுங்கி கொள்கிறார்கள்.
பிரபாகரன் தாயார் உடல்நிலை மோசம்: யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதி
Wednesday, May 12, 2010
தாக்கவந்தவர்களை சுட முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மீது தவறுதலாக குண்டு பாய்ந்தது; கைதான ஏ.டி.எம். காவலாளி வாக்குமூலம்
காவலாளி ராஜேந்திரன், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைத்த பிறகு உள்ளே செல்லுங்கள் என்று அங்கு காத்திருந்தவர்களிடம் கூறினர். இதில் செக்ïரிட்டி ராஜேந்திரனுக்கும், அங்கு இருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
நான் சொல்வதை கேட்க விட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன் எனக்கு லைசென்சு உள்ளது என கூறியவாறு டபுள் பேரல் துப்பாக்கியால் கூட்டத்தினர் மீது ராஜேந்திரன் சரமாரியாக சுட்டார்.
இதில் அதே பகுதியை சேர்ந்த பாரதிதாசன்(28) சீனிவாசன்(38), சாமிநாதன் (60), சத்துணவு அமைப்பாளர் சோமநாதராவ்(40) கட்டிட மேஸ்திரி ராஜராஜன்(55) ஆகியோர் படுகாயமடைந்தனர். 5 பேரும் ஆம்புலன்சு வேனில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது ஏ.டி.எம்.முன்பு கூடி இருந்த பொதுமக்கள், செக்யூரிட்டி ராஜேந்திரனை, தாக்க ஓடி வந்தனர். இதனால் பயந்து போய் அவர் துப்பாக்கியுடன் ஏ.டி.எம். அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பாபநாசம் டி.எஸ்.பி. அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு வந்தனர்.
கூடி இருந்த பொது மக்கள் கூட்டத்தை விலக்கி விட்டு விட்டு ஏ.டி.எம். அறைக்கு சென்று செக்யூரிட்டி ராஜேந்திரனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வெளியே அவரை அழைத்து வந்தார். அப்போது பொதுமக்கள், ராஜேந்திரனை தாக்க ஆவேசமாக வந்தனர். திடீரென செக்யூரிட்டி, ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பிடுங்கினார். அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சீறி பாய்ந்தது. அந்த குண்டு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தின் குரல்வளை வழியாக துளைத்து சென்று தலை வழியாக வந்தது. இதில் அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, மற்றும் போலீசார் செக்ïரிட்டி ராஜேந்திரனை பிடித்து ஜீப்பில் ஏற்றி, கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏ.டி.எம். காவலாளி ராஜேந்திரனை துப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-
ஏ.டி.எம். மையத்தில் பணம் வைப்பதற்காக வேனில் லட்சக்கணக்கான பணம் எடுத்து வந்தோம். ஏ.டி.எம். வரும்போது தகராறு நடந்து கொண்டிருந்ததால் பணம் கொள்ளை போய் விடக்கூடாது என்பதற்காக துப்பாக்கியால் சுட்டேன். அதில் 5 பேர் மீது குண்டு பாய்ந்து விட்டது.
உடனே என்னை தாக்க ஒரு கும்பல் ஓடி வந்தது. இதனால் ஏ.டி.எம். மையத்தில் புகுந்து ஷட்டரை மூடிவிட்டேன். சிறிது நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வந்து கதவை திறக்கும்படி கூறினார். கதவை திறந்ததும் அவர் என்னிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி கொண்டார். அவர் என்னை அழைத்து வெளியே வந்த போது என்னை கொல்ல ஒரு கும்பல் பாய்ந்தது. என் உயிரை காப்பாற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் பிடுங்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக சப்-இன்ஸ்பெக்டர் மீது குண்டு பாய்ந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று பிற்பகலுக்குள் அவர் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
புடவை கட்டச் சொன்னதற்காக கணவனிடம் விவாகரத்து கோரி பெண் வழக்கு; மும்பை ஐகோர்ட்டு நிராகரிப்பு
இதைத் தொடர்ந்து அல்கா அங்குள்ள குடும்ப நல கோர்ட்டில் கணவனிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கு மிகவும் பிடித்த உடை சல்வார்கமிஸ். ஆனால் எனது கணவர் என்னை புடவை கட்டச் சொல்லி தினமும் கொடுமைப்படுத்தி வருகிறார். அவரது 2 சகோதரிகளும் அவருடன் சேர்ந்து கொண்டு புடவை கட்டுமாறு கூறி சித்ரவதை செய்கின்றனர்.
மேலும் அவர்கள் என்னிடம் அதிக வரதட்சணையும் கேட்கிறார்கள். என்னை புடவை கட்டுமாறு வற்புறுத்தும் கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு புடவை கட்டுமாறு வற்புறுத்தியதற்காக விவாகரத்து வழங்க முடியாது என்று கூறியது.
இதை கேட்டதும் அல்கா அதிர்ச்சி அடைந்தார்.
பார்வதி அம்மாள் வல்வெட்டித் துறையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக நேற்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் அவர் கொழும்பில் உள்ள தனியார் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அவரை பராமரித்து வருகிறார்.
பார்வதி அம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பக்கவாத நோய் உள்ளது. அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் அவரது குடும்பத்தினர் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களது ஆலோசனைப்படி நான் பார்வதி அம்மாளுக்கு தேவையானதை செய்து கொடுத்து வருகிறேன்.
பார்வதி அம்மாள் உடல்நிலை மேலும் மோசமடைந்தபடி உள்ளது. அவரால் தன்னிச்சையாக செயல் பட முடியாது. நடமாடும் சக்தியையும் இழந்து விட்டார்.
அவரது மகள் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்பட முடியும்.
பொருளதார நெருக்கடியால் அதுவும்!!!!!!!!!!!!!! குறைந்து போனது................
சம்பளம் குறைந்ததால் பாலியல் தொல்லையும் குறைந்தது
நியூயார்க் : நாற்பதுக்கு மேல் தான் பாலியல் விவகாரத்தில் ரொம்பவும் ஈடுபாடு காட்டுவார்கள் அமெரிக்கர்கள்; ஆனால், பொருளாதார நெருக்கடி இதிலும் மண்ணைப் போட்டு விட்டது.
ஆம். ஒரு வகையில் அமெரிக்கர்களை எந்த அளவுக்கு பொருளாதார நெருக்கடி வாட்டி வருகிறதோ, பாலியல் விஷயத்தில் அவர்களை திருத்தியுள்ளது என்பதே உண்மை.
எப்படி தெரியுமா? நாற்பது வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் பாகுபாடின்றி, திருமணம் செய்தவர்களாக இருந்தாலும், செய்யாமல் இருந்தாலும், அத்துமீறிய , அளவுக்கு மீறிய பாலியல் ஈடுபாடு அதிகம் வைத்திருப்பர்.
அவர்கள் தான் இப்போது பெரிதும் திருந்தி உள்ளனர். இவர்களின் அத்துமீறிய, அளவு மீறிய பாலியல் ஈடுபாடுகள் வெகுவாக குறைந்து விட்டதாக, பாலியல் தொடர்பாக சர்வே எடுத்ததில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பிரபல ஏஏஆர்பி என்ற சர்வே நிறுவனம் இது
தொடர்பாக சமீபத்தில் பல நகரங்களில் சர்வே நடத்தியது. சர்வேயில் தெரியவந்த சில வித்தியாசமான தகவல்கள்:
அமெரிக்கர்களில், இளம் வயதினரை விட, நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் பாலியல் விஷயத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். திருமணம் செய்தாலும், மனைவியுடன் பாலியல் உறவு கொள்வதுடன், வெளியிலும் பலரிடம் பாலியல் உறவில் ஈடுபடுவது அவர்களுக்கு ‘அடங்காத’ பொழுதுபோக்கு.
நாற்பது வயதிலும், பல ஆண்களும், பெண்களும் திருமணம் செய்யாமலேயே ‘லிவ் இன் அரேஞ்மென்ட்’ பாணியில் ஒரே வீட்டில் தாலி கட்டாத தம்பதியாக உள்ளனர். இந்த ஜோடிகள் அடிக்கடி ஆளை மாற்றுவதும் வாடிக்கை தான். ஆனால், எப்படியிருந்தாலும் பாலியல் விஷயத்தில் மட்டும் பாரபட்சம் இல்லை. அது கிடைத்தே ஆக வேண்டும்.
நாற்பது வயதை தாண்டிய திருமணம் ஆன ஆண்கள் 1670 பேரிடம் சர்வே நடத்தியதில், பத்தாண்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 1999 ல் நடத்திய சர்வேயில், திருமணத்துக்கு வெளியே பாலியல் வைத்துக்கொள்வது தவறு என்று 41 சதவீதம் பேர் கூறியிருந்தனர்; இப்போது, அந்த கருத்தை சொன்னவர்கள் 22 சதவீதம் பேர் தான். அந்த அளவுக்கு திருமணத்தை தாண்டிய பாலியல் தாகத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால், பொருளாதார நெருக்கடியால் பலருக்கு வேலை போச்சு; சாதா வேலையில் சேர்ந்ததால் சம்பளமும் குறைந்து விட்டதால், இவர்களின் அத்துமீறிய பாலியல் விவகாரங்க ளுக்கு பணம் போதவில்லை. அதனால், வாரத்துக்கு நான்கு முறை பாலியல் உறவு கொள்வது போய், ஒரு முறை தான் வைத்துக்கொள்ள முடிகிறது என்றும் புலம்பி உள்ளனர்.
இப்படி புலம்பியுள்ளவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் பேர்; ‘என்ன செய்வது, நிலைமைக்கு ஏற்ப இதை குறைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை 32 சதவீதம்.
திருமணத்தை தாண்டிய பாலியல் விவகாரங்களை நிறுத்தி விட்டதாக 10 சதவீதம் பேர் கூறியுள்ளதே பெரும் மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பொருளாதார நெருக்கடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
எங்களுக்கு திருமண வாழ்க்கையை தாண்டிய பாலியல் தேவையில்லை. நெருக்கடியில் கடுமையாக வேலை செய்கிறோம்; போதுமான சம்பளம் கிடைக்கிறது. அதில் நிம்மதியாக வாழ்கிறோம் என்று இந்தியர்களை போல சொல்வர்களும் உள்ளனர்.
16 வயது மாணவனை மணந்த 30 வயது பெண்; மகனை மீட்டுத்தரக் கோரி தாயார் மனு
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சன்னிபென்டா பகுதியைச் சேர்ந்தவர் சைதம்மா. இவரது மகன் சித்தய்யா (16). இவன் ஸ்ரீசை லத்தில் உள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் படித்து வருகிறான். இவனது நண்பன் அசோக்.
சித்தய்யா அடிக்கடி அசோக் வீட்டுக்கு செல்வான். அப்போது அசோக்கின் சித்தி பாத்திமா (30)வுடன் (பெயர் மாற்றம்) பழக்கம் ஏற்பட்டது. 30 வயதாகியும் பாத்திமாவுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலமாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காதலை வளர்த்தனர். இதையறிந்த அசோக்கின் தந்தை ஆதாமு இருவருக்கும் திரு மணம் செய்ய முடிவு செய்தார். இதன்படி அங்குள்ள கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இதையறிந்த சித்தய்யாவின் தாயார் சைதம்மா, “சிறுவனான என் மகனுக்கு 30 வயது பெண்ணை எப்படி திருமணம் செய்து வைக்கலாம்?” என்று ஆவேசம் அடைந்தார்.
பின்னர் தனது மகனை பாத்திமாவிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதில் “என் மகனை ஏமாற்றி பாத்திமா திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தால் அவன் படிப்பு பாழாவதுடன் எதிர்காலம் நாசமாகி விடும். என் மகனை கட்டாய தாலி கட்ட வைத்த பாத்திமா, ஆதாமு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
13 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி 2-வது இடத்தை பிடித்தது. இதற்கு அடுத்தப்படியாக லிபரல் ஜனநாயக கட்சி 3-வது இடத்தை பெற்றது.
எனவே, தனிப்பெரும் கட்சியாக திகழும் கன்சர் வேடிவ் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. எனவே இக்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
கன்சர்வேடிவ் கட்சிக்கும், லிபரல் ஜனநாயக கட்சிக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்து உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கட்சி களின் கூட்டணி ஆட்சி அமைகிறது.
கூட்டணி ஆட்சியின் புதிய பிரதமாக டேவிட் கேமரூன் தேர்வு செய்யப்பட்டார். துணை பிரதமர் பதவி நிக்கிளெக்குக்கு வழங்கப்பட உள்ளது.
புதிய காபினெட் மந்திரிகளை இரு கட்சி தலைவர் களும் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
எனவே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய கார்டன் பிரவுன் முடிவு செய்தார். டவுனிங் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பக்கிங் காம் அரண்மனைக்கு சென்றார். ராணி எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடித்தை கொடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து புதிய பிரதமாக பதவி ஏற்க உள்ள டேவிட் கேமரூன் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, பெரிய அளவிலான பற்றாக்குறை பட்ஜெட்டை சமாளிக்க கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும், பொருளா தாரத்தை சீரமைக்க வேண் டிய நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
இது ஒரு கடுமையான பணி என்றும், கூட்டணி அரசின் துணை கொண்டு அதை சமாளிப்பேன் என்றும் தெரிவித்தார். இங்கிலாந்து மக்களுக்கு நிலையான, பலம் வாய்ந்த அரசை வழங்குவேன் என்றும் உறுதி அளித்தார்.
அப்போது அவரது கர்ப்பிணி மனைவி சமந்தாவுடன் இருந்தார். இங்கிலாந்தில் கடந்த 1945-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 65 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைகிறது.
பிரதமராக பதவி ஏற்க உள்ள டேவிட் கேமரூனுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெக்கெல், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஷி ஆகியோர் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர்.
Tuesday, May 11, 2010
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!!!!!!!!!!
2004 ÍÉ¡Á¢ Åó¾¾Ð ¿¡õ «¨ÉÅÕõ «È¢ó¾§¾... «¾ý À¢ÈÌ Åó¾ Ò¢ÃÇ¢¸ÙìÌõ , ¸ðθ¨¾¸ÙìÌõ «Ç§Å þø¨Ä. ±ô¦À¡ÙÐõ «Æ¸¡¸×õ «¨Á¾¢Â¡¸×õ ¸¡ðº¢ÂÇ¢ìÌõ àòÐìÌÊ ¸¼ø À̾¢..(Â¡Õ ¸ñÛ À𼧾¡)
¸¼ó¾ 2005õ ÅÕ¼õ(«ôÀ ¿ý 12õ ÅÌôÒ ÀÊòÐ ¦¸¡ñÎ þÕó§¾ý)àòÐÌÊìÌ ÍÉ¡Á¢ ÅÕÐýÛ ±§¾¡ ÀÂÒû¨Çíì¸ ÒÃǢ ¸¢ûôÀ¢Å¢ðμ¡í¸....
«ýÚ »¡Â¢üÚ¸¢Æ¨Á 12õ ÅÌôÒ ÀÊò¾¾¡ø , «ýÚõ ±ÉìÌ º¢ÈôÒ ÅÌôÒ ±ÎòÐ
¾¡Æ¢òÐ ¦¸¡ñÎ þÕó¾¡÷¸û..
11 ÁÉ¢ÂÇÅ¢ø ±í¸û ÀûÇ¢ ¾¨Ä¨Á ¬º¢¡¢Â÷ ¸ýÉ£Õ¼ý ±í¸û Óý ÅóÐ àòÐÌÊìÌ ÍÉ¡Á¢ ÅóÐŢ𼾡õ.±ø§Ä¡Õõ 5 ¿¢Á¢¼õ ¦ƒÀõ ÀýɢŢðÎ ¸¢ÇõÒí¸û ±ýÈ¡÷( ¦Ã¡õÀ Ó츢Âõ!!!!!!!!!)
¬º¢¡¢ö÷¸û Ó¸ò¾¢ø À£¾¢ ¦¾¡¢ó¾§¾ ¾Å¢Ã ,Á¡ÉÅ÷¸û ±í¸û «¨ÉÅÕìÌõ Å¢ÎÓ¨È ¸¢¨¼òÐŢ𼧾 ±ýÈ Á¸¢úԼý ¸¢ÇõÀ¢§É¡õ.¦ÅÇ¢§Â ÅóÐ À¡÷ò¾¡ø «¨ÉòÐõ ÅÆì¸õ §À¡ø þÂí츢 ¦¸¡ñÎ þÕó¾Ð...§À¡¸¢È §À¡ì¸¢ø ¿¡íì¸Ùõ À£¾¢¨Â ¸¢ÇôÀ¢ Å¢ðÎ ¦ºýÚ ¦¸¡ñÎþÕ󧾡õ..
Å£ðÎìÌ ¦ºýÚ «õÁ¡Å¢¼õ àòÐÌÊìÌ ÍÉ¡Á¢ ÅóÐÕ측õ(±§¾¡ §À¡÷ ¸ôÀø Åóò¾ Á¡¾¢¡¢) ±ý§Èý , «õÁ¡ ¿õÀÅ¢ø¨Ä(¸ð «ÊðÎ ÅóЧ¼ýÛ ¿¢¨Éîͼ¡í¸)..±ý «õÁ¡Å¢¼õ ÜȢ «Îò¾ 5 ¿¢Á¢¼ò¾¢ø «¨ÉòÐ Å¡¸Éí¸Ùõ ±í¸û ¦¾ÕÅ¢ø ÀÈóòÐ ¦¸¡ñÎþÕó¾É(±í¸û ¦¾Õ ÅƢ¡¸ ¦¿ø¨Ä ¦ºøÄÄ¡õ)
±ý «õÁ¡×ìÌ «ô¦À¡Øо¡ý ¿¢¨Ä¨Á Ò¡¢Â ¦¾¡¼í츢ÂÐ..«ö§Â¡ ¯í¸ «ôÀ¡ ¾¢§ÃŠÒÃõ(¸¼üÀ̾¢)¦ºýÚ þÕ츢ȡ÷ ±ýÚ À£¾¢¨Â ¸¢ÇôÀ¢É¡÷..¬É¡ø «Îò¾ 5 ¿¢Á¢¼ò¾¢ø ±ÐìÌ þù§Ç¡ ðáÀ¢ìÛ Ò¡¢Â¡Á§Â ţΠÅóÐ §º÷óò¾¡÷ «ôÀ¡..«õÁ¡ «ôÀ¡Å¢¼õ ±ýÉíì ÍÉ¡Á¢ ÅóÐÕõ «¾¡ý ±ø§Ä¡Õõ ¾¢Õ¦¿ø§ÅÇ¢ §À¡Èíì¸ ±ýÈ¡û..
±ý «ôÀ¡ º¢¡¢òÐ ¦¸¡ñ§¼ þôÀ¾¡§É «í¸ þÕóРŧÃý «ôÀÊ ´ýÛõ þøħ ±ýÈ×¼ý «¨ÉÅÕõ º¡óò¾õ ¬É¡÷¸û...
¸¼Ä¢ø þÕóÐ ¸¢ð¼¾ð¼ 10 ¸£Á¢ ¦¾¡¨Ä× ¦¸¡ñ¼ ±í¸û Å£ðÊø «Õ¸¢ø þÕ󧾡÷, «¨¾Ôõ ¾¡ýÊ þÕóò§¾¡÷ ±É «¨ÉÅÕõ À£¾¢Â¢ø ¯Â¢ÚìÌ ÀÂóÐ ´ÊÉ÷..
±ý Å£ðÊý «Õ¸¢ø þÕó¾Å÷ ±í¸¨ÇÔõ §º÷òÐ «¨Æò¾¡÷ , ±ý ¾ó¨¾ ¦º¡òÐ ÀòРŢðÎðÎ «í¸ ÅóÐ À¢ð¨º ±Îì¸Å¡ ±ýÚ ÁÚòÐÅ¢ð¼¡÷. ±ÉìÌõ «Ð§Å º¡¢ ±ýÚ Àð¼Ð..¦ºòÐ ¦¾¡¨Äí¸¼¡Û ÁÉÐìÌû ¿¢¨ÉòРŢðÎ «ÅÕõ ¦ºýÚÅ¢ð¼¡÷....
þ ùÅÇ× ¸Ç§ÃÀí¸Ù츢¼Â¢ø ¿¡Ûõ ±ý ¾õÀ¢Ôõ ÍÉ¡Á¢¨Â À¡÷À¾üìÌ ¸¼ü¸¨Ã ¦ºý§È¡õ...¸¼ø ÅÆì¸õ §À¡ø «¨Á¾¢Â¡¸ þÕó¾Ð(ÁÉÐìÌû ¿øÄ¡ ¸¢ÇôÒÈ¡í¸ö¡ À£¾¢Â)..þý¦É¡Õ º¢ÈôÒ ±ýɦÅýÈ¡ø ¸¼ø «Õ¸¢ø Å¡Øõ Á£ÉÅ Áì¸û ¡Õõ À£¾¢Â¨¼ÂÅ¢ø¨Ä....
þ¾¢ø º¢Ä ÍÅú¢ÂÁ¡É ºõÀÅí¸Ùõ ¿¼ó§¾È¢É..
±ý ¿ýÀ÷ «ñ½ý ´ÕÅ÷ 1 1/4 ÁÉ¢ §¿Ãò¾¢ø ¦¿ø¨Ä ¦ºýÈ¡÷(48 ¸£Á¢) ±ýÉ ¬îº÷ÂõÉ¡ «Å÷ Á¢¾¢ÅñÊ墀 «ó¾ ðáÀ¢ì ¿ÎÅ¢ø ¦ºýÈо¡ý...
±øÄ¡õ ÓÊóÐ À¨Æ §ÀÕóÐ ¿¢¨ÄÂõ Åó¾ ¦À¡ØÐ ±ý ÅÌôÒ ¬º¢¡¢¨Â ÌÎõÀòмý À¡¢¾¡ÀÁ¡¸ ¯ð¸¡÷ó¾¢Õó¾¡÷...«¨¾ À¡÷òÐ ±ýÉìÌ º¢¡¢ôÀ¾¡ ,ÅÕò¾ÀΞ¡ ±ý§È ¦¾¡¢ÂÅ¢ø¨Ä, ²ý ±ýÈ¡ø ÀûǢ¢ø «Å÷ «ùÅÇ× ¸ñÊôÀ¡É& ¨¾¡¢ÂÓûÇ ¬º¢¡¢¨Â...
´ùÅÕÅÕõ ´Õ þÄ쨸 ÌÈ¢ôÀ¢ðÎ þó¾¡ ÅóÐÕîÍ «ó¾¡ ÅóÐÕîÍÛ ÁüÈÅ÷¸¨Ç À£¾¢ÔðÊÉ¡÷¸û....
±ý Å£ðÎ «Õ¸¢ø ¯ûÇÅ÷ ÁÚ ¿¡û ¸¡¨Ä¢ø Åó¾×¼ý «Å÷ Ó¸ò¨¾ À¡÷ì¸Û§Á ® ¡¼Å¢ø¨Ä
þÕ¾¢Â¢ø ¸¡Åø Ð¨È ÁüÚõ §Ä¡ì¸ø ¦¾¡¨Ä측𺢠º¡Éø¸û ÍÉ¡Á¢ ¬ÀòÐ þø¨Ä ±ýÚ ÜȢ즸¡ñÎ þÕìÌõ §À¡§¾ ´ÕÅ÷ º¢Åý §¸¡Å¢ÖìÌ ÍÉ¡Á¢ ÅóÐÕîÍÛ µÊÅó¾¡ý , ²ü¸É§Å ¸ÎôÀ¢ø þÕó¾ ¸¡ÅÄ÷¸û «Å¨Ã ¾¡Æ¢òÐ ±ÎòРŢð¼¡÷¸û....
±ôÀʧ¡ ÍÉ¡Á¢ ÒÃÇ¢ ±ÉìÌ ´Õ ¿¡û Å¢ÎÓ¨È Å¡í¸¢¾ó¾Ð....................