இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை
இலங்கையில் தமிழ் பெண்களை கடத்தும் மர்ம வேன்; கதி என்ன என்று தெரியவில்லை
திரைப்படம் திரைப்படம்
-
இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரங்களில் சிங்கள படையினர் தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கடத்தி சென்று கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன.
இப்போது விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் தமிழர்களை கடத்தி செல்வது அதிகரித்து உள்ளது.
அதுவும் சமீபகாலமாக இந்த கடத்தல் சம்பவம் அதிகரித்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ராணுவத்தினரே இந்த சம்பவத்தில் ஈடுபடுவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். கடத்தலுக்காக வெள்ளை மற்றும் கறுப்பு நிற வேன்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த வேன்கள் திடீரென தமிழர்களின் கிராமங்களுக்கு வருகிறது. அங்கு கண்ணில்படும் இளம் பெண்கள், மற்றும் இளைஞர்களை கடத்தி செல்கின்றனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்புவதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்றும் தெரிவது இல்லை. அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று கொலை செய்வதாகவும், பெண்களை கற்பழித்து பின்னர் கொல்வதாகவும் தமிழர்கள் சொல்கின்றனர்.
சமீபத்தில் வெல்வெட்டி துறையில் ஒரு சிறுமியை இதே போல கடத்தி சென்றனர். ஆனால் அவர் இடையில் தப்பி வந்து விட்டார். அவர் அந்த வேனில் மேலும் 6 இளம் பெண்கள் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறியுள்ளார்கள்.
இலங்கை தமிழர்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் மூலமாவது ஓரளவு பாதுகாப்பு இருந்தது. இப்போது எந்தவித பாதுகாப்பும், இல்லாததால் இது போன்ற அத்து மீறல்கள் அதிகம் நடப்பதாக தமிழர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
வெள்ளை, கறுப்பு நிற வேன்களை எங்காவது பார்த்து விட்டாலே தமிழர்கள் ஓடிச் சென்று பதுங்கி கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment