Thursday, May 13, 2010

பிரபாகரன் தாயார் உடல்நிலை மோசம்: யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபாகரன் தாயார் உடல்நிலை மோசம்: யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதி

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் மலேசியாவில் தங்கி இருந்தார். அவர் பக்கவாத நோய் மற்றும் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை இலங்கை திரும்பினார். முன்னாள் எம்.பி.யும் பிரபாகரன் உதவியாளருமான சிவாஜிலிங்கம் மற்றும் உறவினர்கள் கொழும்பில் உள்ள லாட்ஜில் தங்க வைத்து கவனித்து வந்தனர்.


இந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமானது. எனவே நேற்று அவரை அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர். அங்கு உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் உறவினர்கள் பலர் உள்ளனர். அவர்கள் பார்வதி அம்மாளை கவனித்து கொள்வார்கள் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment