Monday, April 26, 2010

சினி சிப்ஸ்


`வாடகை வீட்டில், வெள்ளிவிழா நாயகன்!

வெள்ளிவிழா நாகன்' என்று அழைக்கப்பட்ட அந்த மூன்றெழுத்து நடிகருக்கு சொந்தமாக, சென்னை ஆழ்வார்திருநகரில் ஒரு பெரிய பங்களா இருந்தது. சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட அவர், அந்த பங்களாவை விற்று விட்டார். இப்போது நூறு அடி ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் வசிக்கிறார்! (எப்படி இருந்த அவர், இப்படி ஆகிவிட்டார்!)

சீட்டு விளையாடும் `யா' நடிகை!

ஒரு காலத்தில் தமிழ் பட உலகில் கொடிகட்டி பறந்த கதாநாயகி அந்த `யா' நடிகை! இப்போது `அம்மா' வேடத்துக்கு வந்து விட்டார். இருப்பினும், கதாநாயகிக்கு இணையான சம்பளம், படத்தில் முக்கியத்துவம், மரியாதைகள் தரப்பட வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தார். நிபந்தனைகளை விரும்பாத பட அதிபர்கள், அந்த நடிகை பக்கமே போகாமல் வேறு நடிகையை தேட ஆரம்பித்தார்கள். `யா' நடிகை இப்போது வீட்டில் கணவருடன் அமர்ந்து சீட்டு விளையாடுகிறார்! (ரம்மியா, மூணு சீட்டா?)

யார் அந்த `கறுப்பு ஆடு?'

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகை அவர். அவருடைய சமீபகால நடவடிக்கைகளை சொன்னால், அவரா இப்படி? என்று யாரும் நம்ப மாட்டார்கள். ஊர் பெயர்களில் படம் எடுத்து வெற்றி பெற்ற இளைஞர்கள் குழுவுடன், அந்த பிரபல நடிகை மிக நெருக்கமாக பழகினார்.

அதன் விளைவு, சில தினங்களுக்கு முன்பு அவர், வாந்தி எடுத்தாராம். அதற்கு காரணம் அவரா, இவரா? என்று இரண்டு பேர் மீது அந்த நடிகைக்கு சந்தேகம். நேரடியாக அந்த இரண்டு பேருக்குமே போன் செய்து, ``டேய் நீயா, அவனா? யாருடா `அதற்கு' காரணம்?'' என்று கூலாக விசாரித்தாராம்! (எதிர்தரப்பில் இரண்டு பேருமே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்!)

`கணக்கு' கேட்கிறார், புது மனைவி!

கருப்பு நடிகர், வந்த வரை வரவு...போன வரை செலவு என்று ஏனோதானாவாக இருந்தார். திருமணமான பின், அவருடைய புது மனைவி `கணக்கு' கேட்க ஆரம்பித்து இருக்கிறார். சம்பள பாக்கிகளை எல்லாம் உடனடியாக வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி, கருப்புவிடம் அன்பு கட்டளை பிறப்பித்து இருக்கிறாராம், புது மனைவி! (மனைவி சொல்லை தட்ட முடியுமா? கருப்பு, பழைய `செக்'குகளை கணக்கெடுத்து வருகிறார்!)




No comments:

Post a Comment