நாம எவ்வளவுதான் அம்பலப்படுத்தினாலும் முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் பார்ப்பன ஞாநி தன்னோட திரிப்பு வேலையை நிறுத்துற மாதிரி தெரியல. வழமை போல தனது “ஓ”ட்டை பக்கத்தில் பார்பன வன்மத்தை அள்ளித்தெளித்திருக்கிறார் பார்பன ஞாநி. இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில நடைபெறுவதை கண்டித்து பல்வேறு உணர்வாளர்களும் போராடி, விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வது தமிழர்களின் உள்ளங்களை புண்படுத்தும் என்ற எண்ணத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். முன்னர் கலந்து கொள்வதாக கூறிய முன்னணி திரைக்கலைஞர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதித்து நிகழ்வை புறக்கணித்து இருக்கின்றனர் என்ற செய்தி நம்மை வந்தடைவதற்கு முன்னர் பார்ப்பன ஞாநியின் வன்மம் நிறைந்த கட்டுரையை நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது. ஞாநி எழுத்துக்களில் நேர்மையை எதிபார்ப்பது கூட ஒருவகையில் மூட நம்பிக்கைதான் போலும் .
இந்த வார குமுதம் இதழில் சங்கரனின் பார்ப்பன மனசாட்சி வெளிப்படையாக சிங்கள பேரினவாதத்திற்க்கு வருவாய் இழப்பு ஏற்படலாமா? என்று வருந்தியிருக்கின்றது. இந்திய திரைக்கலைஞர்கள் சில அமைப்புகளின் போராட்டங்களைக் கண்டு நிகழ்வை புறக்கணித்தது சரியல்ல என்று மனம் குமுறியிருக்கின்றார். ஈழம் என்றாலே அரைவேக்காடுத் தனமான கருத்துகளை வெளியிடுவது ஞாநியின் வழக்கம்.
முன்னர் “ஓ”ட்டைப் பக்கங்களில் ஈழப்பிரச்சனை குறித்து எழுதும் போது மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் கண்டுகொள்ள வில்லை என முட்டாள் தனமாக உளறியவர் தான் ஞாநி.மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள பேரினவாதம் பறித்த போது கண்டிக்காத தமிழ்த் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி தமிழரசு கட்சியை தந்தை செல்வா உருவாக்கினார் என்பது கூட தெரியாமல் உளறியதன் மூலம் ஈழ வரலாற்றின் அரிச்சுவடி கூடத் தெரியாதவன் தான் என்பதை தன் எழுத்துகள் மூலம் அம்பலபடுத்திக் கொண்டவர் தான் ஞாநி.
ஏதோ இந்திய திரைப்படக்கலைஞர்கள் இலங்கைக்கு சென்று அங்குள்ள சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒருங்கிணைத்து அப்படியே இந்தியாவிற்க்கும் இலங்கைக்கும் நல்லுறவை பேணப் போவது போலவும், இது பொறுக்காமல் தமிழ் உணர்வாளர்கள் பிரச்சனை செய்துவிட்டார்கள் என்பது போல கதை கட்டுகிறார் ஞாநி. IIFAவின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் போர் குற்றத்தை உலகுக்கு அம்பல படுத்துகின்ற இந்த நேரத்தில், இந்த நிகழ்வு மூலம் இலங்கையில் மக்கள் மகிழ்வுடன் இருப்பது போலும், இலங்கை மனித உரிமை பேணும் நாடு போன்று ஒரு மாயையை உலக நாடுகளுக்கு பிரகடன படுத்துவதே இதன் உள்நோக்கம்.திரைக்கலைஞர்கள் ஆபாச நடனங்கள் மூலமும், 20க்கு 20 கிரிக்கெட் போட்டியின் மூலமும் கலை வளர்ப்பதை தடுக்கலாமா? என்று ரொம்பவே கோபப்படுகின்றார் ஞாநி.
தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைக்கப்பட்டு வாழ வழி இல்லாத ஒரு மண்ணில், இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு மண்ணில் கேளிக்கை விழாவா? என்று மே 17 இயக்கம்,நாம் தமிழர் இயக்கம், சேவ் தமிழ் இயக்கம், பெரியார் திராவிட கழகமும் மற்றும் பல இயக்கங்களும், கவிஞர். தாமரை , சீமான், இயக்குநர். இராம் போன்ற தமிழ் கலைஞர்களும் முன்னெடுத்த போராட்டங்களை போகிற போக்கில் சகதி வாரி இரைத்திருக்கின்றார் பார்ப்பன சங்கரன்.
தமிழ் உணர்வாளர்கள் படைப்பாளிகளாக சாதித்தது என்ன என்ற கேள்வி மூலம் படைப்புலகில் உள்ள கவிஞர். தாமரை நோக்கி கேள்வியை வைக்கின்றார். சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொன்றழித்தது கண்டு மனம் வெதும்பியதால் தன்னால் முன்பு போல கவிதைகளை படைக்கமுடியவில்லை என்று கவிஞர். தாமரை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்து விட்ட “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையினை எழுதியவர் கவிஞர்.தாமரை என்பது பார்ப்பன சங்கரனுக்கு தெரியாமல் போனது வியப்பல்ல.
தமிழ் உணர்வாளர்களை நோக்கி கேள்வி எழுப்பும் பார்ப்பன சங்கரா. சிங்கள பத்திரிகையாளரான இலசந்த விக்கரமதுங்கா சிங்கள பேரினவாதத்தின் கோர முதத்தை அம்பல படுத்தி மரணத்தை பரிசாக பெற்ற போது நீ என்ன எழுதினாய் என்று நினைவிருக்கின்றதா. திசைநாயகத்திற்க்கு இருபது ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட போது கந்தசாமி படக்குழுவினரோடு கதா காலச்சேபம் நடத்திக் கொண்டிருந்தவன் நீ என்பதை மறந்து விட்டாயா?. சிங்கள இயக்குநர் சட்டை கிழிந்தால் “நீதி செத்துருச்சு” என்று சொம்பு தூக்கும் நீ, சிங்கள காடையன் செத்து விழுந்த போராளி பெண்ணின் ஆடைகிழித்து மிருகம் கூட செய்யத்துணியாத காரியத்தை நிகழ்த்திய பொழுது சொம்போடு காணாமல் போன மர்மமென்ன?
தமிழ் படைப்பாளிகளை சிங்கள படைப்பாளிகளுடன் ஒப்பிடுவதற்கு முன் இலசந்தா, திசைநாயகத்துடன் உன்னை ஒப்பிட்டு உனது மனசாட்சியை வெளிப்படையாக பேசச் சொல். இலசந்தா, திசைநாயகம் போன்ற பத்திரிகையாளர்களுடன் ஒப்பிடும் அளவிற்க்கு நீ என்ன கிழித்திருக்கின்றாய்? என்றும் உன் மனசாட்சியை நீயே கேள். இறுதி கட்ட போரின் போது தமிழக அரசும், தமிழக முதல்வரும் புரிந்த துரோகத்தை பேசுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருகின்றதா பார்ப்பன சங்கரா? கருணாநிதி ஆட்சியில் இருந்து துரோகம் செய்த பொழுது படைப்புலகில் ஈழப் போராட்டத்திற்க்கு எதிராக எழுத்துகள் மூலம் துரோகம் செய்தவன் நீ என்பதை தமிழன் இன்னும் மறக்கவில்லை!
No comments:
Post a Comment