சிறந்த கேப்டன் டோனி
மும்பை : பதற்றமான நேரத்தில் சிறப்பாக செயல்படும் டோனியே உலகின் மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் கூறியுள்ளார்.
ஐபிஎல் சீசன் 3 டி20 தொடரின் 2வது அரைஇறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 38 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமாக பந்து வீசி (4&1&13&4) 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே வீரர் போலிஞ்சர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று கூறியதாவது:
கேப்டனாக டோனி செயல்படும் விதம் பிரம்மிப்பாக உள்ளது. பதற்றமான நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்துகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அவரது அதிரடி ஆட்டமே அரைஇறுதிக்கு தகுதி பெற காரணமாக இருந்தது. எல்லா வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அவரிடத்தில் இருந்து நிறைய பாடம் கற்றுள்ளேன். எங்களது பலவீனமான பந்துவீச்சை பலமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. யாருக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார். எனது சிறப்பான பந்து வீச்சுக்கு அவரே காரணம். உலகின் மிகச் சிறந்த கேப்டன் டோனி.
மும்பைக்கு எதிரான இறுதி போட்டி சவாலானது. அதே நேரத்தில் அந்த அணியை வீழ்த்தும் தகுதி எங்களிடத்தில் உள்ளது. இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சவாலாக உள்ளது. இவ்வாறு, போலிஞ்சர் கூறினார்.
No comments:
Post a Comment