Thursday, June 3, 2010


மும்பை நாம் தமிழர் இயக்கம் சார்பில் இபா விருது வழங்கும் நிகழ்விற்காக இலங்கை செல்லும் இந்தி திரைத்துரையினரை கண்டித்து நேற்று (01-06-10) ௦மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மும்பையை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட உணர்வுள்ள தமிழர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் மகாராஷ்டிர மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்றமும் இன்னும் பிற அமைப்புகளும் இணைந்து செயல்பட்டது.
மகாராஷ்டிர மாநில ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ஆதிமூலம், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில தலைவர் சேலம் செல்லதுரை, மாநில செயலாளர் ராஜேந்திரன், மாநில அமைப்பாளர் கணேசன், பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த சித்தார்த்தன், மும்பை ப.ஜா.க தலைவர் கேப்டன் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.




உண்ணாவிரதத்தின்
இறுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நாம் தமிழரின் IIFA இலங்கையில் நடப்பதற்கு எதிரான தீர்மானங்களையும் அதன் விளக்கமும் அளிக்கப்பட்டது. கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஈழத்தின் பிரச்சனை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

No comments:

Post a Comment