Saturday, May 22, 2010

ஒரே குடும்பத்தில் 16 பேர் பலி

மங்களூர் விமான விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 16 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சவூதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் சமீர் என்பவரின் பாட்டி இறுதிச்சடங்கில் பங்கேற்ற வந்தபோது விபத்தில் சிக்கி பலியாகிவிட்டனர். பாட்டி இறந்த துக்கத்தில் இருந்த சமீருக்கு ஒரே நேரத்தில் 16 உறவினர்களை பறிகொடுத்தது தாங்கிக் கொள்ள முடியாத சோகமாகி விட்டது.


விமானத்தை ஓட்டியவர் செர்பியன்

161 பேரை பலி கொண்ட விமானத்தை ஓட்டிய விமானியின் பெயர் லட்கோ குளுசிகா. 55 வயதான இவர் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். விமானம் ஓட்டுவதில் இவர் நன்கு அனுபவம் பெற்றவர். விபத்துக்குள்ளான விமானம் வாங்கப்பட்டு 2 ஆண்டுகளே ஆகிறது. எனவே விமானத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கருப்பு பெட்டியை தேடுகிறார்கள்

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்புப்பெட்டியை தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் தேடிவருகிறார்கள். அதில் விமானி கடைசியாக பேசியது எல்லாம் பதிவாகி இருக்கும். கருப்பு பெட்டி கிடைத்தால் விபத்துக்கான உண்மையான காரணங்கள் தெரிய வரும்.

No comments:

Post a Comment