ஒரு சில முக்கியமான சம்பவங்கள் போதிய அளவு கவனம் செலுத்தப்படாமல் மறந்துவிடப்படும் அவலம் இந்தியாவுக்கே உள்ள தனித்தன்மை என்று
தோன்றுகிறது.
நம்மைவிடப் பல துறைகளில் பின்தங்கிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த ஒரு சம்பவமும், கடந்த மாதம் தில்லியில் நடந்த ஒரு சம்பவமும் எந்த அளவுக்கு நம்மைவிட மற்றவர்கள் முன்ஜாக்கிரதையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தோனேஷியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் மும்பையில் நடந்த தாக்குதல்போல ஒரு தாக்குதலை நடத்தி, இந்தோனேஷிய அதிபர் சுசீலோ பம்பாங் உதயணாவையும் மற்றவர்களையும் படுகொலை செய்யவும், இந்தோனேஷியாவை ஓர் இஸ்லாமிய நாடாக அறிவிக்கவும் நடந்த முயற்சிகளை அந்த நாட்டுக் காவல்துறை முறியடித்திருக்கிறது. சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதுடன், சதியில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முன் யோசனையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இந்தோனேஷிய அரசு செயல்படுகிறது என்பதற்கு இது உதாரணம்.
நமது இந்தியாவில், மார்ச் மாதம் 12-ம் தேதி தில்லி மாயாபுரி பகுதியில் உள்ள பழைய சாமான்கள் வியாபாரி தீபக் ஜெயின் என்பவர், ஃபரீதாபாத் தொழிற்பேட்டை பகுதிகளிலிருந்து பழைய இரும்புக் கழிவுகளை வாங்கி வந்து தமது கிடங்கில் வைக்கிறார். அந்தப் பழைய இரும்புச் சாமான்கள் அடங்கிய சாக்கை ராஜேந்தர் பிரசாத் என்கிற கடை ஊழியர் பிரித்து அடுக்குகிறார்.
அன்று முதல் தொடங்கியது வினை.ஒருவர் பின் ஒருவராக தீபக் ஜெயினும் அவரது கடையில் வேலை பார்க்கும் நான்கு ஊழியர்களும் தலைசுற்றல், வாந்தி என்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்படத் தொடங்குகிறார்கள். காரணமே தெரியாமல் அவர்கள் அனைவருடைய உடலிலிருந்து ரோமம் உதிரத் தொடங்குகிறது. கடுமையான தலைவலி, ஜுரம் குறைய மறுக்கிறது. என்னதான் பிரச்னை என்பது மருத்துவர்களுக்கும் தெரியவில்லை. எல்லோரும் ஒருவர்பின் ஒருவராக அப்போலோ மருத்துவமனையிலும், அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஹிமான்ஷு ஜெயின் என்கிற இன்னொரு பழைய சாமான் வியாபாரியும் இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன்தான் சந்தேகம் வலுத்து,
பழைய சாமான்களின் கிடங்குகள் உள்ள மாயாபுரி பகுதியைப் பரிசோதிக்க முற்படுகிறார்கள் காவல் துறையினரும், தில்லி மாநகராட்சியினரும். பாதிக்கப்பட்டவர்கள் கோபால்ட்-60 என்கிற கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தப் பகுதியே தனிமைப்படுத்தப்பட்டு, அங்குலம் அங்குலமாகப் பரிசோதிக்கப்படுகிறது. ஃபரீதாபாதிலிருந்து வாங்கப்பட்ட இரும்புக் கழிவுகளில் கதிர் வீச்சு உள்ள இந்த கோபால்ட்-60 இருப்பது தெரிய வருகிறது.கோபால்ட்-60 பழைய இரும்புச் சாமான்களுடன் எடைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.
இந்தக் கதிர் வீச்சுப் பொருளை விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறதே, பிறகு எப்படி விற்கப்பட்டது? தில்லி பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பொருள்களை ஏலத்தில் எடுத்தபோது இந்த கோபால்ட்-60 கடைக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தபின்னரும் நடவடிக்கை இல்லையே, ஏன்?1983-ல் மெக்ஸிகோவில், ஒரு ரேடியோ தெரபி இயந்திரம் பிரிக்கப்பட்டு, கோபால்ட்-60 கதிர் வீச்சுடன் சுமார் 600 டன் இரும்புகள் உருக்கப்பட்டு விட்டது. உருக்கப்பட்ட இரும்பினால் செய்யப்பட்ட கம்பிகள் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா போன்ற நாடுகளில் வீடு கட்டக் கம்பிகளாக உபயோகப்படுத்தப்பட்டன. விபரீதம் வெளிப்பட்டு, அந்த வீடுகளில் வசித்தவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நேரிட்டது. பல வீடுகள் இடிக்கப்பட்டன.
அதுமுதல், பழைய இரும்பு உருக்குவது மிகுந்த கவனத்துடனும், கடுமையான பரிசோதனைக்குப் பிறகும் மட்டுமே மேலை நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றன.இதுபோன்ற கதிர் வீச்சு உள்ள பொருள்கள் சிறிய கம்பிகளாகவும், துகள்களாகவும் பரிசோதனைக்கு உள்படாமல் தப்பித்து விடுவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. தீவிரவாதிகள் இதுபோன்ற பொருள்களை அதிக அளவில் மக்கள் கூடும் இடத்தில் வைக்க முற்பட்டால் ஏற்பட இருக்கும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நமது நாட்டில் கூட்டத்துக்கும், மக்கள்தொகைக்கும்தான் பஞ்சமே கிடையாதே...!தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 5,000 டன் அபாயகரமான கழிவுகள் பாதுகாக்கவோ, முறையாக அழிக்கவோ வசதியில்லாத நிலையில் வெளியேற்றப்படுகின்றன.
ஏனைய இந்திய மாநகரங்களிலும் இதே நிலைதான். இறக்குமதியாகும் கழிவுகளுக்கும் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கழிவுகளைக் கையாளக்கூடக் கையாலாகாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எல்லா நாடுகளுக்கும்தான் இருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்களை விலைகொடுத்து வாங்கும் ஒரே நாடு நமது பழம்பெரும் பாரத பூமியாக இருந்துவிடக் கூடாது!
தோன்றுகிறது.
நம்மைவிடப் பல துறைகளில் பின்தங்கிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த ஒரு சம்பவமும், கடந்த மாதம் தில்லியில் நடந்த ஒரு சம்பவமும் எந்த அளவுக்கு நம்மைவிட மற்றவர்கள் முன்ஜாக்கிரதையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தோனேஷியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் மும்பையில் நடந்த தாக்குதல்போல ஒரு தாக்குதலை நடத்தி, இந்தோனேஷிய அதிபர் சுசீலோ பம்பாங் உதயணாவையும் மற்றவர்களையும் படுகொலை செய்யவும், இந்தோனேஷியாவை ஓர் இஸ்லாமிய நாடாக அறிவிக்கவும் நடந்த முயற்சிகளை அந்த நாட்டுக் காவல்துறை முறியடித்திருக்கிறது. சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதுடன், சதியில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முன் யோசனையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இந்தோனேஷிய அரசு செயல்படுகிறது என்பதற்கு இது உதாரணம்.
நமது இந்தியாவில், மார்ச் மாதம் 12-ம் தேதி தில்லி மாயாபுரி பகுதியில் உள்ள பழைய சாமான்கள் வியாபாரி தீபக் ஜெயின் என்பவர், ஃபரீதாபாத் தொழிற்பேட்டை பகுதிகளிலிருந்து பழைய இரும்புக் கழிவுகளை வாங்கி வந்து தமது கிடங்கில் வைக்கிறார். அந்தப் பழைய இரும்புச் சாமான்கள் அடங்கிய சாக்கை ராஜேந்தர் பிரசாத் என்கிற கடை ஊழியர் பிரித்து அடுக்குகிறார்.
அன்று முதல் தொடங்கியது வினை.ஒருவர் பின் ஒருவராக தீபக் ஜெயினும் அவரது கடையில் வேலை பார்க்கும் நான்கு ஊழியர்களும் தலைசுற்றல், வாந்தி என்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்படத் தொடங்குகிறார்கள். காரணமே தெரியாமல் அவர்கள் அனைவருடைய உடலிலிருந்து ரோமம் உதிரத் தொடங்குகிறது. கடுமையான தலைவலி, ஜுரம் குறைய மறுக்கிறது. என்னதான் பிரச்னை என்பது மருத்துவர்களுக்கும் தெரியவில்லை. எல்லோரும் ஒருவர்பின் ஒருவராக அப்போலோ மருத்துவமனையிலும், அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஹிமான்ஷு ஜெயின் என்கிற இன்னொரு பழைய சாமான் வியாபாரியும் இதே அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன்தான் சந்தேகம் வலுத்து,
பழைய சாமான்களின் கிடங்குகள் உள்ள மாயாபுரி பகுதியைப் பரிசோதிக்க முற்படுகிறார்கள் காவல் துறையினரும், தில்லி மாநகராட்சியினரும். பாதிக்கப்பட்டவர்கள் கோபால்ட்-60 என்கிற கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தப் பகுதியே தனிமைப்படுத்தப்பட்டு, அங்குலம் அங்குலமாகப் பரிசோதிக்கப்படுகிறது. ஃபரீதாபாதிலிருந்து வாங்கப்பட்ட இரும்புக் கழிவுகளில் கதிர் வீச்சு உள்ள இந்த கோபால்ட்-60 இருப்பது தெரிய வருகிறது.கோபால்ட்-60 பழைய இரும்புச் சாமான்களுடன் எடைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.
இந்தக் கதிர் வீச்சுப் பொருளை விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறதே, பிறகு எப்படி விற்கப்பட்டது? தில்லி பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பொருள்களை ஏலத்தில் எடுத்தபோது இந்த கோபால்ட்-60 கடைக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தபின்னரும் நடவடிக்கை இல்லையே, ஏன்?1983-ல் மெக்ஸிகோவில், ஒரு ரேடியோ தெரபி இயந்திரம் பிரிக்கப்பட்டு, கோபால்ட்-60 கதிர் வீச்சுடன் சுமார் 600 டன் இரும்புகள் உருக்கப்பட்டு விட்டது. உருக்கப்பட்ட இரும்பினால் செய்யப்பட்ட கம்பிகள் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா போன்ற நாடுகளில் வீடு கட்டக் கம்பிகளாக உபயோகப்படுத்தப்பட்டன. விபரீதம் வெளிப்பட்டு, அந்த வீடுகளில் வசித்தவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நேரிட்டது. பல வீடுகள் இடிக்கப்பட்டன.
அதுமுதல், பழைய இரும்பு உருக்குவது மிகுந்த கவனத்துடனும், கடுமையான பரிசோதனைக்குப் பிறகும் மட்டுமே மேலை நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றன.இதுபோன்ற கதிர் வீச்சு உள்ள பொருள்கள் சிறிய கம்பிகளாகவும், துகள்களாகவும் பரிசோதனைக்கு உள்படாமல் தப்பித்து விடுவது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. தீவிரவாதிகள் இதுபோன்ற பொருள்களை அதிக அளவில் மக்கள் கூடும் இடத்தில் வைக்க முற்பட்டால் ஏற்பட இருக்கும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நமது நாட்டில் கூட்டத்துக்கும், மக்கள்தொகைக்கும்தான் பஞ்சமே கிடையாதே...!தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 5,000 டன் அபாயகரமான கழிவுகள் பாதுகாக்கவோ, முறையாக அழிக்கவோ வசதியில்லாத நிலையில் வெளியேற்றப்படுகின்றன.
ஏனைய இந்திய மாநகரங்களிலும் இதே நிலைதான். இறக்குமதியாகும் கழிவுகளுக்கும் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கழிவுகளைக் கையாளக்கூடக் கையாலாகாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எல்லா நாடுகளுக்கும்தான் இருக்கின்றன. அந்த அச்சுறுத்தல்களை விலைகொடுத்து வாங்கும் ஒரே நாடு நமது பழம்பெரும் பாரத பூமியாக இருந்துவிடக் கூடாது!
No comments:
Post a Comment