Wednesday, May 5, 2010

ஆசிரியர் அடித்ததால் கோபம்: பாகிஸ்தான் செல்ல முயன்ற காஷ்மீர் சிறுவர்கள் பாதுகாப்பு படையினர் மீட்டனர்

பெற்றோர், ஆசிரியர் அடித்ததால் கோபம்: பாகிஸ்தான் செல்ல முயன்ற காஷ்மீர் சிறுவர்கள் பாதுகாப்பு படையினர் மீட்டனர்

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள குப்வாரா என்ற இடத்தில் இருக்கும் மசூதிக்கு 12 வயது மதிக்க தக்க 6 சிறுவர்கள் வந்தனர். அவர்கள் நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததால் மசூதி இமாம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் 6 சிறுவர்களையும் அழைத்து சென்று விசாரித்தனர்.


அவர்கள் 6 பேரும் எல்லை பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு செல்ல வந்ததாக போலீசாரிடம் கூறினார்கள்.
எங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் எங்களை அடிக்கடி அடிக்கிறார்கள். எனவே காஷ்மீர் சென்று தீவிரவாத இயக்கத்தில் சேரப் போகிறோம் என்றும் கூறினார்கள்.


6 பேரும் காஷ்மீர் மாநிலம் பங்காலன் என்ற இடத்தை சேர்ந்தவர்கள். வீட்டில் இருந்து வெளி யேறிய அவர்கள் அங்கிருந்து சோபூருக்கு பஸ்சில் வந்து பின்னர் மற்றொரு பஸ்சில் ஏறி குப்வாரா வந்திருந்தனர். அவர்களை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தீவிரவாதிகள் யாரேனும் அவர்களை மூளை சலவை செய்யும் வகையில் பிரசாரம் செய்து இருக்கலாம். இதனால் அவர்கள் பாகிஸ்தான் செல்ல முயன்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment