Sunday, May 2, 2010

மும்பை இளம் பெண் இந்திய அழகியாக தேர்வு



மும்பை: உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அழகியை தேர்ந்தெடுக்கும் பெமினா மிஸ் இந்தியா அழகி போட்டி மும்பையில் நடந்Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil  movie news, Tamil news paper online, political news, business news,  financial news, sports news, today news, India news, world news, daily  news updateது வந்தது. கடந்த 40 நாட்களாக நடந்து வந்த இந்த போட்டியின் இறுதி சுற்று நேற்று நடந்தது.இதில் இந்திய அழகியாக மும்பை அந்தோரியை சேர்ந்த 22 வயது இளம் பெண் மானஸ்வி மாம்கய் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த வருடம் நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.இறுதி சுற்றில் நுழைந்த 18 பெண்களிலும் இவர் முதலிடம் பிடித்தார். சானியா மிர்சா, விஜேயந்தர் சிங், ஷில்பா ஷெட்டி, குணால் கபூர், அனுராக் பாசு, ரித்து பேரி, ஷேட்டன் பகத் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் இவரை தேர்வு செய்தனர். சானியா மிர்சா&சோயிப் மாலிக் திருமணத்தின் முடிவில் நீங்கள் அறிவது என்ன? என்ற கேள்விக்கு தன்னம்பிக்கை என்று அவர் அளித்த பதில் மானஸ்வியை இந்திய அழகியாக தேர்வு செய்தது.2வது இடம் புனேயை சேர்ந்த நேகா ஹிங்கிக்கும், 3வது இடம் பெங்களூர் இளம் பெண் நிக்கோல் பாரியாவுக்கும் கிடைத்தது. மந்த்ரா பேடி, ரோகித் ராய் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.உலக அழகிப்போட்டியில் பங்கேற்கிறார்

No comments:

Post a Comment